ஆட்சியர் தகவல் கோவை, ஜன.8- கோவை மாவட்டத்தில், புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் மூலம் 216 நபர்களுக்கு ரூ.15.64 கோடி மானியத்துடன் கூடிய ரூ.72.38 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக தொழில் துவங்க அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொழில் மையம் மூலம், வியாபாரத் தொழில் துவங்க வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கான வேலைவாய்ப்பு உருவாக் கும் திட்டம் (UYEGP) திட்டத்தின் மூலம் மானியத்துடன் கூடிய கடன்கள் வழங் கப்படுகிறது. மேலும், விரிவாக்கம் செய் யும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு புதியதொழில் முனைவோர் 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனு தவிகள் பெற்ற கணபதி, சிவானந்த புரம், ராம்நகர், விளாங்குறிச்சி பகுதி களைச் சேர்ந்த தொழில்முனைவோர் களின் தொழில் நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அண்மையில், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய் வின்போது மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா, உதவி பொறியாளர் கணபதி சுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் இடையே ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட் டத்தில் (NEEDS) 140 தொழில் முனை வோர்களுக்கு தொகை ரூ.36.13 கோடி கடனுதவியுடன் ரூ.6.74 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அர சால் மே-2023 ல் தொடங்கப்பட்ட அண் ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி கள் திட்டத்தின்(AABCS) மூலம் 76 தொழில் முனைவோர்களுக்கு ரூ.8.90 கோடி மானியத்துடன் ரூ36.25 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் கோவை மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகிய திட்டங்க ளின் மூலம் மொத்தம் 216 நபர்களுக்கு ரூ.15.64 கோடி மானியத்துடன் கூடிய ரூ.72.38 கோடி கடனுதவி வழங்கப்பட் டுள்ளது, என்றார்.