திருப்பூர், ஜூன் 27 – தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்கத்தின் திருப்பூர் வட்டக்கிளை 7 ஆவது பேரவை திங்களன்று நடைபெற்றது. திருப்பூர் ஆலாங்காடு சமரச சன்மார்க்க சங்க வளாகத்தில் நடைபெற்ற பேரவைக்கு கிளைத் தலைவர் பி.மகுடேஸ்வரன் தலைமை ஏற்றார். துணைத்தலைவர் பி. ஜீவானந்தம் வரவேற்றார். துணைத்தலைவர் என்.குருராஜன் செயலாளர் அறிக்கையும், பொருளாளர் எஸ்.சுந்தரராஜன் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்க மாவட்ட தலைவர் பி.பாலகிருஷ்ணன் வாழ்த்தினார். வட்டக்கிளை சார்பில் பி.சுப்பிரமணியம், எம். நடராஜன், எஸ்.சுந்தரராஜன் ஆகியோர் தீர் மானங்களை முன்மொழிந்தனர். 70 வயது நிறைவடைந்தோருக்கு கூடுதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும், மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை தொகையை விரைந்து வழங்க வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு, கிராம உதவியாளர் உள்ளிட்ட ஓய் வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் அமலாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது நிறைவு செய்து வைத்து பேசினார். ஓய்வூ தியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் பி.சுப்பிரமணியம் நன்றி கூறினார்.