districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஊரகப் பகுதியில் “மக்களுடன் முதல்வர்” தருமபுரியில் 70 முகாம்கள் நடைபெறும்

தருமபுரி, ஜூலை 13- ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட் டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் ஜூலை 11 முதல் செப்.4 ஆம் தேதி வரை மொத்தம் 70 முகாம்கள் நடை பெற உள்ளது. இதுதொடர்பாக தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “மக்க ளுடன் முதல்வர்” திட்டத்தை ஊரகப் பகுதிகளிலும் விரிவுபடுத்தி, கடந்த வியாழனன்று தருமபுரியில் முதல் வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  முதல்வரின்  நேரடி கண்காணிப்பில் பல்வேறு துறைகள் சார்ந்த  கோரிக்கை மனுக்களைப் பெற்று 30 தினங்களுக்குள் தீர்வு காணும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ்,  ஊரகப்பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் ஜூலை 11 முதல் செப்.4 ஆம் தேதி வரை சுமார் 70 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இம்முகாம்களில் கிராமப்புற மக்க ளுக்கு 15 அரசுத்துறைகள் மூலம் 44 வகையான சேவைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு ஒரு மாத காலத்திற் குள் தீர்வு காணப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கல்

தருமபுரி, ஜூலை 13- மீன்வளத்துறை சார்பில், தருமபுரியில் 12 மீனவர்க ளுக்கு மானிய விலையில், இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மீனவர்கள் உள்ள னர். இவர்கள் மீனவர் சொசைட்டியிலும் உறுப்பினராக உள்ளனர். நீர்நிலைகளில் மீன்பிடித்து கிராமம் மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் பொதுமக்களிடம்‌மீன்களை விற்க ஏதுவாக மீன்வளத்துறையில் ஆண்டுதோறும் இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கப் படுகிறது. அதனடிப்படையில் இந்தாண்டு 12 மீனவர்க ளுக்கு இருசக்கர வாகனங்கள் ஒதுக்கப்பட்டன. இந்நி லையில், தருமபுரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை  உதவி இயக்குநர் கோகுலரமணன் மீனவர்களுக்கு இரு சக்கர வாகனங்களை அண்மையில் வழங்கினார். இந் நிகழ்வில் மீன்வளத்துறை துணை இயக்குனர் சுப்பிர மணி, ஆய்வாளர்கள் பிரபாகரன், வேலுச்சாமி, ஜெய்ஸ்ரீ,  திருப்பதி மற்றும் ஒகேனக்கல் மீனவர் சங்க நிர்வாகி மாரி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதி யில் பலர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மானிய விலையில் இருசக்கர வாகனம் கேட்டு 40க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே இருசக்கர வாகனங்கள் கிடைத்துள் ளன. எனவே, வாகனம் கேட்டு விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் இருசக்கர வாகனம் கிடைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என ஒகேனக்கல் மீனவர் சங்கம் வலியுறுத்தியுள் ளது.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

தருமபுரி, ஜூலை 13- மாரண்டள்ளியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து, அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க மாவட்ட ஆட்சி யர் மேற்பார்வையில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை  இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு  வருகின்றனர். இந்நிலையில், சனியன்று மாரண்ட அள்ளி காவல் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையி லான போலீசார், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த கோபால் உள்ளிட்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடு பட்டனர். மாரண்டஅள்ளி பேருந்து நிலையம், நான்கு  ரோடு, பஞ்சப்பள்ளி சாலை, ராயக்கோட்டை சாலை  மற்றும் வெள்ளிசந்தை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை,பீடா கடைகளில் ஆய்வு செய்யப்பட்டன.  இந்த ஆய்வில் நான்கு ரோடு துவக்கப்பள்ளி அருகில் ஒரு பீடா கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த கடைக்கு அதிகாரி கள் சீல் வைத்து, கடையின் உரிமையாளருக்கு ரூ.25  ஆயிரம் அபராதம் விதித்து, நோட்டீஸ் வழங்கினர்.

தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை: வாழை மரங்கள் சேதம்

கோவை, ஜூலை 13- வனப்பகுதியில் இருந்து வெளியே றிய காட்டு யானைகள் விவசாயத் தோட் டத்துக்குள் புகுந்து 300க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி உள் ளது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும்  என விவசாயிகள் கோரிக்கை வைத்து  உள்ளனர். கோவை மாவட்டம், தொண்டாமுத் தூர் அடுத்த நரசீபுரம் பகுதியில் வெள்ளி யன்று இரவு வனப்பகுதியின் அருகே உள்ள செந்தில்குமார் என்பவரின் விவ சாயத் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள 300 க்கும் மேற் பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி யது. இதனால், விவசாயிகள் வேதனை யடைந்து உள்ளனர். மேலும், கடந்த 10 நாட்களாக 5 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அதே பகுதியில் முகா மிட்டு விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. காட்டு யானை களை கண்காணித்து அடர்ந்த வனப் பகுதியில் விரட்ட வேண்டும் என வனத் துறையினருக்கு அப்பகுதியினர் கோரிக்கை வைத்து உள்ளனர். நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாரான  வாழை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல், ஜூலை 13- நாமக்கல் மாவட்டத்தில் மேற்கிலி ருந்து மணிக்கு 19 கி.மீ.வேகத்தில் காற்று பலமாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளியன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது, கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 மற்றும் 75.2 டிகிரி பாரன் ஹீட்டாக காணப்பட்டது. அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலையில், வானம்  லேசான மேகமூட்டத்துடன் காணப்ப டும். மாவட்டத்தின் சில இடங்களில்  மழை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப் பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப் பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். மேற்கிலிருந்து மணிக்கு 19 கி.மீ வேகத் தில் காற்று வீசும். காற்றின் வேகம்  தொடர்ந்து அதிகப்படியாக காணப்படு வதால், தீவனம் வீணடிக்கப்டாமல் பாது காக்கும் நடவடிக்கைகளில் கோழிப்  பண்ணையாளர்கள் ஈடுபட வேண்டும்.  இன்னும் இரு மாதங்களுக்கு அதிக காற் றின் வேகம் கொண்ட வானிலையே நில வும். தீவன விரயத்தை தடுக்க தீவனத் தில் சிறிது அளவு தாவர எண்ணெய் சேர்க்கலாம். இதனால் மதிப்புள்ள வைட்டமின் காற்றில் பறந்து செல்வதை தடுக்க முடியும். மேலும், உயர்மனைகளில் பக்க வாட்டில் படுதாக்களைக் கட்டி தொங்க விட வேண்டும். கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிக ளைப் பரிசோதனை செய்ததில் பெரும் பாலும் மேல்மூச்சுக் குழல் அயற்சி  பாதிப்பால் இறந்திருப்பது தெரியவந் துள்ளது. எனவே, பண்ணையாளர்கள் உயிர் பாதுகாப்பு முறைகளை தீவிர மாக கடைப்பிடிக்க வேண்டும். வெயில் காலத்தில் தெளிப்பான்களைப் பயன்ப டுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.

வங்கி வழியாக மட்டுமே சுய உதவிக்குழு கடன்களை திரும்ப செலுத்த வேண்டும்

சேலம், ஜூலை 13- சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கடன் மற்றும் வட்டித்தொகையை இணையதள பரிவர்த் தனை அல்லது வங்கி சேவைகள் வழியாக மட்டுமே திரும்ப செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 385 கிராம ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் 385 ஊராட்சி அளவி லான கூட்டமைப்புகளுக்கு சுமார் ரூ.50 கோடி சமுதாய முதலீட்டு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிதியிலிருந்து வாழ்வாதார நடவடிக்கை மேற்கொள்ளும் குழுக்களுக்கு 9 சதவிகித வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இதைத்தவிர உற்பத்தியாளார் குழு உள்ளிட்ட பல்வேறு நிதி  ஆதாரங்களும் ரொக்கமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத் தொகை மற்றும் வட்டி கணக்காளார்கள் மூலம் ரொக்கமாக வசூல் செய்யப்பட்டு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வரு வது நடைமுறையில் உள்ளது. ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பு நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய் யும் பொருட்டும், நிதி முறைகேடு ஏதும் ஏற்படாவண்ணம் தடுக்கும் பொருட்டும் ஜூலை 10 ஆம் தேதி முதல் எந்தவொரு  சுய உதவிக்குழு உறுப்பினரும் ரொக்கமாக தொகையை சுய  உதவிக்குழு கணக்காளரிடம் செலுத்த வேண்டாம். எனவே, அனைத்து சுய உதவிக்குழு உறுப்பினார்களும் இணையதள பணப்பரிவர்த்தனைகளான G Pay, Phone Pay மற்றும் Net  Banking அல்லது இதர வங்கி சேவைகள் வழியாக ஊராட்சி  அளவிலான கூட்டமைப்புகளின் வங்கி கணக்கிற்கு தங்களது கடன் மற்றும் வட்டித்தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி உத்தர விட்டுள்ளார்.

ஏரியில் விழுந்து கிடக்கும் மரங்கள்: விபத்து ஏற்படும் அபாயம்

உதகை, ஜூலை 13- உதகை ஏரியில் விழுந்து கிடக் கும் மரங்களால் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் விபத்தில் சிக் கும் அபாயம் உள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான உதகையில், அரசு தாவரவியல் பூங்காவிற்கு பின்னர்  அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் படகு இல்லத்திற்கு வருகின்றனர். இது ஆங்கிலேயர் ஆட்சி காலத் தில் கடந்த 1825 ஆம் ஆண்டு தாமஸ் மன்றோ என்பவர் மூலம் உதகை ஏரி யில் படகு சவாரி இயக்கப்பட்டது. அப்போது ஏரி தண்ணீரை பொதுமக் கள் குடிநீராகவும் பயன்படுத்தினர். கோடப்பமந்து கால்வாய் மூலம் வரும் மழை தண்ணீர் ஏரியில் சேகர மாகிறது. இதற்கிடையே கால் வாயை ஒட்டி உள்ள தங்கும் விடுதி கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவு நீர் ஏரியில் கலந்து வருகிறது. கழிவுநீரை சுத்தி கரிக்க ஏரிக்கரையோரத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக் கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மோட்டார் மற்றும் எந்திரங்கள் பழுது  ஏற்பட்டால் கழிவுநீர் சுத்திகரிக்கப்ப டாமல் அப்படியே ஏரியில் விடப் படும். மேலும், மழை பெய்யும் நேரங் களில் கழிவுநீர் நேரடியாக படகு  இல்ல குளத்திற்குள் அனுப்பப்படுகி றது. இதனால், ஏரியில் எங்கு பார்த்தா லும் தண்ணீரின் நிறம் மாறி கழிவு நீராக காட்சியளிக்கிறது. பச்சை வண் ணத்தில் பாசி படர்ந்து தண்ணீர் உள் ளது. மேலும், ஆங்காங்கே நெகிழிக் கழிவுகள் மிதக்கின்றன.  இந்நிலையில், ஏரியில் மழையின் போது கீழே விழுந்த மரங்கள் ஆங் காங்கே அப்படியே கிடக்கிறது. பல மாதங்களைக் கடந்தும் வெட்டி அப்பு றப்படுத்தாமல் உள்ளது. இதன் கார ணமாக வெளி மாநிலம் மற்றும் வெளி  மாவட்ட சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்யும்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மிதக்கும் மரக்கிளை களில் படகு மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, உதகையை ரசித்து பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் விபத்தை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை ஏரியில் உள்ளது. உதகை ஏரியில் விழுந்து கிடக்கும் மரங்களால் அசம்பாவிதம் ஏற்படும்  முன்னர் அதை அகற்ற வேண்டும்.  மேலும், ஏரி மற்றும் படகுகளை முறை யாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தர விட வேண்டும் என தெரிவித்தனர்.

ரூ.1.01 கோடிக்கு பருத்தி விற்பனை

திருப்பூர், ஜூலை 13- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.01 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூர், ஈரோடு,  திருச்சி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளில் இருந்து 394 விவசாயிகள் 4,329 பருத்தி மூட்டைகளை விற் பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்த வரத்து 1,439  குவிண்டால். திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங் களைச் சேர்ந்த 14 வணிகர்கள் பருத்தியை வாங்க வந்திருந்த னர். இதில், பருத்தி விலை குவிண்டால் ரூ.6,200 முதல் ரூ. 8,069  வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,100. மொத்தமாக  ரூ.1.01 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

குடியிருப்புகளுக்கு மத்தியில் பிளாஸ்டிக் ஆலை:  நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 13- வடுகபாளையம்புதூர் குடியிருப்புக ளுக்கு மத்தியில் செயல்பட்டு வரும் பிளாஸ் டிக் குடம் தயாரிப்பு ஆலையை அகற்ற வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள் ளனர். பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி புதுநகர் பகுதியில் தனியா ருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடம் தயா ரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த  ஆலை விவசாய நிலத்தை வாடகைக்கு எடுத்து செயல்படுவதாகவும், பிளாஸ்டிக் குப் பைகளை குவித்து வைத்து குடம் தயாரிக்கப் படுவதாக கூறப்படுகிறது. இதனால் இப்ப குதி மக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதா வது, இப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர். பிளாஸ்டிக்  இருப்பு வைப்பதற்கு கிடங்கு அமைக்கப்படு வதாக கூறி, பிளாஸ்டிக்கை உருக்கி குடம் தயா ரிக்கும் ஆலை அமைந்துள்ளனர். இதில், பிளாஸ்டிக் பொருட்களை உருக்கும் போது  வெளியேறும் புகையால் சுவாச பிரச்சனை, தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகி றது. குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும்  இந்த பிளாஸ்டிக் ஆலையை அகற்ற சம்பந் தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர்

திருப்பூர், ஜூலை 13- சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் சனியன்று ஆய்வு மேற்கொண்டனர். வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் ராஜசிங், ஹரியானா  குருசேத்திரா பல்கலைக்கழக பேராசிரியர் சித்தரத சங்கர், குஜராத் பர்தோலி கல்லூரி முதல்வர் ஜெயந்தி பாய் சுரேஷ்பாய் சௌதரி ஆகியோர் அடங்கிய தேசிய தர  நிர்ணயக் குழுவினர் வியாழக்கிழமை மற்றும்  வெள்ளிக்கிழமை சிக்கண்ணா அரசு கலைக்  கல்லூரியில் உள்ள ஆய்வகங்கள், வகுப்ப றைகள் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட  உட்கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர்.  மேலும், பயிலும் மாணவ மாணவிகளு டன் கலந்துரையாடினர். மேலும், ஆய்வு செய்து மதிப்பீட்டு அறிக்கையினை பெங்க ளூரில் உள்ள தலைமையகத்திற்கு அனுப்பி  வைத்தனர். அதன் அறிக்கையினை கல்லூரி  முதல்வர் வா.கிருஷ்ணன், நா.சம்பத்குமார் ஆகியோரிடம் வழங்கினார்கள். தேசிய தர மதிப்பீட்டுக்குழுவினர் கல்லூரிக்கு அளித்துள்ள தரம் குறித்து பெங் களூரில் உள்ள தேசிய தரம் மதிப்பீட்டு மன் றம், வல்லுனர்களுடன் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் கல்லூரிக்கு அறிவிக்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

இலவச சிறப்பு மருத்துவமுகாம் அமைச்சர் துவக்கி வைத்தார்

இலவச சிறப்பு மருத்துவமுகாம் அமைச்சர் துவக்கி வைத்தார் திருப்பூர், ஜூலை 13- மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இலவச சிறப்பு  மருத்துவமுகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சனியன்று துவக்கி வைத் தார். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றி யம், நாகமநாயக்கன்பட்டி ஊராட்சி, உத்தமபாளையம் அரசு  ஆரம்பப்பள்ளி மற்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், ஆலாம்பாடி ஊராட்சி, நெய்க்காரன்பாளையம் அரசு ஆரம் பப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன்  காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவமுகா மினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சனியன்று துவக்கி வைத்தார். இம்முகாமில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈ. பிரகாஷ், மாவட்ட சுகாதார அலுவலர் முரளிசங்கர், வெள்ள கோவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட  ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி வரதராஜ், தாசவ நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழ உறுப்பினர் லோகநா தன்,  நாகமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர்  ம. கவிதா, ஆலாம்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜாமணி ரங் கசாமி, உள்ளாட்சி பிரிதிநிதிகள், மருத்துவர்கள், பொதுமக் கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண் டனர்.

கால்நடை மருத்துவக் கல்லூரி முப்பெரும் விழா

கால்நடை மருத்துவக் கல்லூரி முப்பெரும் விழா நாமக்கல், ஜூலை 13-  கால்நடை மருத்துவ தரவரிசைப் பட்டியல் ஜூலை மாத  இறுதியில் வெளியிடப்படும் என தமிழ்நாடு கால்நடை மருத் துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என்.செல் வகுமார் தெரிவித்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளியன்று முப்பெரும்விழா நடைபெற்றது இந்நிகழ்சிக்கு கல்லூரி முதல்வர் ம.செல்வராஜு தலைமை  வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.என்.செல்வகுமார், விழா மலரை வெளியிட்டார்.  அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி னார்.  முன்னதாக துணைவேந்தர் கே.என்.செல்வக்குமார் செய் தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ  அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சென்னை,  நாமக்கல், திருநெல்வேலி, சின்ன சேலம், உடுமலைப் பேட்டை, தேனி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை  மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இக் கல்லூரிக ளில் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்கு (பிவிஎஸ்சி)  660 இடங்களும், தொழில்நுட்ப பிரிவுகளான பி.டெக். உணவு,  பால் (செங்குன்றம் அருகே கொடுவள்ளியில் கல்லூரி அமைந்துள்ளது), கோழியினம் (ஓசூா்) ஆகிய படிப்புகளில்  100 இடங்கள் உள்ளன. இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர மாணவர்க ளிடமிருந்து 14,500 விண்ணப்பங்களும், தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 3,000 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்  தயாராகி வருகிறது. ஜூலை இறுதியில் இப் பட்டியல் வெளி யிடப்படும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வு நடைபெறும் என்றார்.

பேருந்து நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

பேருந்து நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு நாமக்கல், ஜூலை 13- ராசிபுரம் நகராட்சி பேருந்து நிலையம் இடமாற்றும் நடவ டிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூலை 18 கடையடைப்பு நடத்துவது என வணிகர்கள் முடிவு எடுத்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பேருந்து நிலையத்தை இட மாற்றம் செய்வது தொடர்பாக அண்மையில் நகர்மன்றக் கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சியில் கருத்து  கேட்புக் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில், ராசிபுரம்  நகராட்சி பேருந்து நிலையம் அமைக்க இடம் தேவைப்படு வதால் சரியான இடத்தில் 7 ஏக்கர் யாராவது தானமாக கொடுத் தால், பேருந்து நிலையம் அமைக்கலாம் என முடிவு செய்யப் பட்டது. ஆனால் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட நாளி லேயே அணைப்பாளையம் பகுதியில் 7 ஏக்கா் நிலம் தனியார்  ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ஒருவரிடமிருந்து தான மாகப் பெறப்பட்டது. நகராட்சி நிா்வாகம் ஏற்கெனவே இடத்தை தோ்வு செய்து விட்டு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு  எழுந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு கட்சியி னர், பொது நல அமைப்பு, வியாபாரிகள் வெள்ளியன்று பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜூலை 18 இல் கடையடைப்பு போராட்டம், ஜூலை 23 இல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பேரம் பேசிய எஸ்ஐ பணியிடை நீக்கம்

கோவை, ஜூலை 13- வழக்கு ஒன்றில் தொடர்புடைய ஒருவரி டம் வழக்கு பதியாமல் இருக்க பேரம் பேசிய  2 காவல் உதவி ஆய்வாளர்களை பணியிடை  நீக்கம் செய்து மாநகர் காவல் ஆணையர் உத் தரவிட்டார். கோவை மாவட்டம், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மணி கண்டன் என்பவர் பணியாற்றினார். அதே காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வா ளர்கள் அகஸ்டின் என்பவரும் பணியாற்றி வந்து உள்ளார். இந்நிலையில், வழக்கு ஒன்றில் தொடர் புடைய ஒருவரிடம் வழக்கில் இருந்து விடு விக்க அந்த நபரிடம் சிறப்பு உதவி ஆய்வா ளர் அகஸ்டின் செல்போனில் பேரம் பேசும்  ஆடியோ வெளியானது. இதையடுத்து, கோவை மாநகரக் காவல் துறை ஆணையர்  இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த உத் தரவிட்டார். அவ்வாறு நடத்தப்பட்ட விசார ணையில், செல்போன் ஆடியோ விவகாரம்  உண்மை என்று தெரியவந்தது. இதற்கு உதவி ஆய்வாளர் மணிகண்டன் உடந்தை யாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இத னைத்தொடர்ந்து, காவல் உதவி ஆய்வா ளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகிய  2 பேரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு  மாற்றப்பட்டு, தொடர்ந்து அவர்கள் 2 பேரை யும் பணியிடை நீக்கம் செய்ய மாநகரக் காவல்  ஆணையர் வெ.பாலகிருஷ்ணன் உத்தரவிட் டார்.

உள்நாட்டு சரக்குகள் கையாளும் பணிகள் துவக்கம்

உள்நாட்டு சரக்குகள் கையாளும் பணிகள் துவக்கம் கோவை, ஜூலை 13- கோவை விமான நிலையத்தில் வருகிற 16 ஆம் தேதி முதல்  உள்நாட்டு சரக்குகள் கையாளும் பணிகள் மீண்டும் துவக்கப் பட உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து தின மும் 25 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், ஸ்கேனர் ஆப்ரேட்டர் பணியை நியமிக்கப்படும் ஊழி யர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய விதி  அமல்படுத்தப்பட்டது. இதனால், சரக்கு அனுப்பும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்பிரச்சனைக்கு தீர்வு கண்ட  நிலையில், சரக்குகளை கையாளும் பணி வருகிற 16 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

8 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

8 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் சேலம், ஜூலை 13- தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக, 3 நாட்க ளுக்கு சேலம் வழியாகச் செல்லும் 8 ரயில்கள் மாற்றுப்பாதை யில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை, பீளமேடு ரயில் நிலைய யார்டில் தண்டவாள  பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரண மாக, வரும் 14, 15, 17 ஆம் தேதிகளில் ரயில்கள் மாற்றம் செய் யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் - மங்களூரு  விரைவு ரயில், பெங்களுரு - எர்ணாகுளம் விரைவு ரயில், திப்ரூ கர் - கன்னியாகுமரி விவேக் விரைவு ரயில் ஆகியவை வரும்  ஜூலை 14, 15 ஆகிய தேதிகளில் கோவை செல்லாமல் இருகூர், போத்தனூர் வழியே மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.  இதேபோல, ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில், எர்ணாகு ளம் - பெங்களூரு இன்டர்சிட்டி ஆகிய ரயில்கள் வரும் ஜூலை  14, 15, 17 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையத்திற்கு  பதிலாக போத்தனூர், இருகூர் மார்க்கத்தில் இயக்கப்படும். அதேபோல, ஈரோடு - கோவை ரயில் ஜூலை 14, 15 ஆகிய  தேதிகளில் இருகூர் வரை மட்டும் இயக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.