districts

img

சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு

சென்னை, ஆக. 8- சுதந்திர தினத்தையொட்டி சென்னை சர்வதேச விமான நிலையத்தின் பாது காப்பை அதிகரிக்கும்படி மத்திய உள்துறை  அமைச்சகம் உத்தரவிட்டது. இதை யடுத்து, சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழிற்படை காவலர்கள் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான பயணிகள் முழுமையாக  சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படு கிறார்கள்.  பார்வையாளர்கள் விமான நிலை யத்துக்குள் செல்ல அனுமதி ரத்து செய்யப்  பட்டுள்ளது. வருகிற 20ஆம் தேதிக்கு பிறகே  பார்வையாளர்கள் அனுமதிக்கப்படு வார்கள் என்று காவல்துறை அதிகாரி ஒரு வர் தெரிவித்தார்.

;