districts

img

பொதுப்போக்குவரத்து திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகிறதா?

கோவை, டிச.18- கோவை கோட்டத்தில், தேவைக்கு ஏற்ப  பேருந்து சேவை இல்லை என்கிற குற்றச் சாட்டு தொடர்ந்து மக்களிடம் எழுந்து வருகிற நிலையில், அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தில் 600க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்காமல் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  பொதுப்போக்குவரத்தை பலப் படுத்துவதால், தனிமனிதர்களின் பொருளா தாரம் மற்றும் அரசின் சேமிப்பு பாதுகாப் படும் என்பதோடு, எரிபொருள் பயன்பாட்டு தேவை குறைந்து, சூழலியலுக்கு நன்மை பயக்கும் என்று ஆய்வு நிரூபித்துள்ளது.  பொதுப்போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும் என இந்திய தொழிற்சங்க மையம்  (சிஐடியு) தொடர்ந்து வலியுறுத்தி உள்ளது. சமீபத்தில் கூட தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் பொதுப்போக்குவரத்தை பலப்ப டுத்துவோம் என நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உரையாற்றுகையில் தெரிவித்திருந்தார். ஆனால், அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள் ளது. கோவை மாநகரில் கடந்த காலங்களில் 7 எண் கொண்ட அரசு பேருந்து நிமிடத் திற்கு ஒரு பேருந்து என இயங்கி வந்தது. இந்த 7 எண் கொண்ட பேருந்து அநேக மாக கோவை மாநகரின் இதயப்பகுதி என சொல்கிற காந்திபூங்கா துவங்கி, ஆர்எஸ்பு ரம், வடகோவை, நூறு அடி சாலை, காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், புலியகுளம், சுங்கம், நகர் மண்டபம், ராஜவீதி சுற்றி  காந்திபூங்காவை சென்றடையும் வகையில் வழித்தடம் அமையப்பட்டதால், இப்பே ருந்து அனைத்து நேரங்களிலும் பயணி களின் கூட்டம் இருக்கும். தற்போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு 7 எண் பேருந்து கூட இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள் ளது.

சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா  தலைமையில் கோவையில் ஆய்வு மேற்கொ ண்டனர். கோவையில் ஆய்வு மேற்கொள்ள வந்த சட்டமன்ற ஆய்வுக்குழுவிடம் கோவை மாநகரில் உள்ள 7 எண் கொண்ட பேருந் துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு, “வழித்தடத்தில் இயங்காதது தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை மேற் கொள்ளப்படும். பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் பேருந்துகளை நிறுத்த வாய்ப்பு இல்லை. இந்த விவகாரத்தை போக் குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பார் வைக்கு எடுத்துச் செல்கிறோம்” என்றார். இந்நிலையில், அரசு போக்குவரத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்துகின்றனரோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.  கோவை கோட்டத்தில் கோவை, திருப் பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் 3150 அரசு பேருந்துகள் இயங்கி வந்தது. கடந்த கொ ரோனா தொற்று காலத்தில், பெரும்பாலான வழித்தடங்களில் பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டது. சில வழித்தடங்களில் பேருந்துகளே தற்போது வரையில் இயக் கப்படுவதில்லை. 

இதுகுறித்து அரசு போக்குவரத்து ஊழியர் ஒருவர் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவை கோட்டத்தில் 600 பேருந்துகள் இயக்கமின்றி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இப்போது மண்டல அளவில் 2550 பேருந்துகள் மட்டுமே உள்ளது. இதில் நல்ல முறையில் இயங்கும் நிலையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் குறைவான பேருந்துகளே உள்ளது. சுமார், 400 முதல் 500 பேருந்துகள் இயங்கும் நிலையில் இல்லை.  கோவை மாவட்டம், நகரில் 1100 பேருந் துகள் இயங்கி வந்தது. இதில் 150 பேருந்து கள் நிறுத்தப்பட்டு 950 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. நகரில் பல்வேறு பகுதி யில் இயங்கிய 752 பேருந்துகளில், 502 பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கத் தில் இருக்கிறது. இதிலும், 140 பேருந்துகள் இயங்கும் நிலையில் இல்லை என்றார்.  கோவை கோட்டத்தில் நகர்ப்பகுதியில் இயங்கி வந்த பேருந்துகளின் வழித்தடம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில வழித்த டங்களில் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. கிராமங்களுக்கு சென்று வந்த அரசு பேருந்துகள் வெகுவாக குறைக்கப் பட்டதால் எளிய உழைப்பாளி மக்கள், பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி யுள்ளனர். இதன்காரணமாக வேலைக்கு, கல்லூரி, சந்தைகளுக்கு சென்று வர  இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, பெண் களின் பொருளாதார சேமிப்பை பலப்ப டுத்தியுள்ளது உண்மை என்றாலும், நகர்ப் புற, கிராமப்புற வழித்தடங்களில் வெகு வான அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப் பட்டுள்ளதால், திட்டத்தின் உண்மைப்பலன் சென்றடையாத நிலையே இருக்கிறது. மேலும், பல இடங்களில் சாதாரண கட்டண  பேருந்துகள் மட்டுமின்றி சொசுகு பேருந்து களும் இயக்கப்படுவதில்லை. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து பணி  மனை தொழிற்நுட்ப பிரிவு ஊழியர் ஒருவர் கூறுகையில், “கோட்ட அளவில் சுமார் 500 நடத்துநர்கள், 500 ஓட்டுநர்கள், 200க்கும் மேற்பட்ட வாகன பழுது நீக்குவோர் உள் ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. பணிமனையில் போதுமான உதி ரிபாகங்கள் கிடையாது. வாங்குகிற உதிரி பாகங்களும் மேலதிகாரிகள் தங்களின் கமிச னுக்காக தரமற்ற உதிரி பாகங்களை கொள் முதல் செய்கின்றனர். இதனால் பேருந்து களை முறையாக, பராமரிக்க முடிவ தில்லை. ஏற்கனவே, ரிசர்வ் ஓட்டுநர், நடத்து நர் உபரியாக இருப்பார்கள். இப்போது பணிமனையில் நிற்கிற பேருந்துகளையே இயக்குவதற்கு ஆட்கள் இல்லை என்கிற  நிலையே உள்ளது.

2015 ஆம் ஆண்டிற்கு  பின்னர் போக்குவரத்து கழகத்தில் நடத் துநர், ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப் படவே இல்லை. காலியிடங்கள் அதிகமாக இருப்பதால் பணியில் இருப்பவர்கள் ஓய் வில்லாமல் ஓட வேண்டிய நிலை இருக்கி றது.  தொலைதூர பேருந்து இயக்குபவர்கள் ஓய்வு, தூக்கம் இல்லாமல் நெருக்கடியான நிலையில்தான் வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். இவ்வளவு நெருக் கடிக்கு மத்தியில் நாங்கள் இயங்கிக் கொண்டிருந்தாலும், எங்களுக்கான சட்டப்ப டியான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இது ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்கிற நிலையாகத்தான் இருக்கிறது. ஆகவேதான் நாங்கள் எங்க ளது உரிமைகளுக்காக போராடுகிற அதே நேரத்தில்,அரசுப்போக்குவரத்து கழகத் தில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத் தைையும் நிரப்ப வேண்டும். பொதுப்போக் குவரத்தை பலப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார். வருவாயை அள்ளித்தருகிற அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை கோட்டத் தின் நிலையே இதுவென்றால், மற்ற கோட்டத் தின் நிலை என்னவாக இருக்கிறதோ என்கிற ஐயம் எழுகிறது. தமிழக அரசு கொஞ்சம் கருணைப்பார்வையோடு அரசு போக்கு வரத்து கழகத்தை கண்காணித்து, சீர்  செய்து பலப்படுத்த வேண்டும்.  வசூலாகிற வழித்தடத்தில் மட்டுமே தனியார் பேருந்துகள் இயங்கும் நிலையில், கடைக்கோடி கிராமத்தினருக்கு அன்றாட உறவாய் இருக்கிற அரசு போக்கு வரத்துதான் வரம். தமிழக முதல்வர் கவனிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப் பும்.   -(ந.நி)