நாமக்கல், ஜூன் 13- பரமத்திவேலூரில் போதை மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 6 பேர், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட னர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வேலூர் காவல் ஆய்வாளர் ரங்கசாமி தலை மையில் குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப் பட்டன.
இந்த தனிப்படையினர் போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், பொத்த னூர் நீரேற்று நிலையம் அருகே கடந்த மே 17 ஆம் தேதியன்று தனிப் படையினா் சோதனை நடத்திய போது, அங்கு 7 பேர் கொண்ட கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதைய டுத்து அவர்களைப் பிடித்த காவல் துறையினர், வேலூர் காவல் நிலை யம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் கூடச் சேரியைச் சேர்ந்த சிதம்பரம் (27), தெற்கு நல்லியாம்பாளையத்தைச் சேர்ந்த பசுபதி (24), வேலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (21), பொத்தனூர், காமராஜர் நகரைச் சேர்ந்த நிதீஷ் (24), பொத்தனூர் நல்லாயிகாட்டு தெருவைச் சேர்ந்த முகமது உசேன் (24), பொத்தனூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் (20), வேலூர் மீனவர் தெருவைச் சேர்ந்த செல்வம் (23) ஆகிய 7 பேர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசார ணையில், பிடிபட்ட சிதம்பரமும், பசு பதியும் அப்பகுதியில் போலி மருந் துக்கடை நடத்தி வந்துள்ளனர்.
அந் தக் கடைக்கு மருந்து விநியோகம் செய்யுமாறு மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ஒரு மருந்து நிறுவ னத்துக்கு பரிந்துரைச் சீட்டை போலி யாக தயார் செய்து அனுப்பி, போதை மாத்திரைகளை வாங்கியுள்ளனர். அந்நிறுவனத்திடமிருந்து ரூ.30க்கு வாங்கிய ஒரு மாத்திரையை இங்கு ரூ.900க்கு விற்பனை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 10 போதை மாத் திரைகள், 10 போதை ஊசிகள், ரொக் கம் ரூ.50 ஆயிரம், இரண்டு இரு சக்கர வாகனங்கள், 6 கைப்பேசிகள் பறி முதல் செய்யப்பட்டன.
அதன்பின் கைதானவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண் ணன் ஆட்சியருக்கு பரிந்துரை கடி தம் அனுப்பினார். அதையேற்று குண் டர் சட்டத்தில் 6 பேரை சிறையில் அடைக்க நாமக்கல் ஆட்சியர் ச.உமா உத்தரவிட்டார். இதையடுத்து நிதீஷை தவிர 6 பேர் சிறையில் அடைக்கப் பட்டனர்.