சேலம், ஜூலை 16- ஆத்தூர் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சென்ற 6 பேரை வனத் துறையினர் கைது செய்து, அவர்களி டமிருந்து நாட்டு துப்பாக்கி, இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் வனச்சர கத்திற்கு உட்பட்ட மண்ணூர் காப்புக் காடு, இரட்டைக்குச்சி மலைப்பகுதியில் ஆத்தூர் வனச்சரகர் தலைமையில் அதி காரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த னர். அப்போது நாட்டு துப்பாக்கியுடன் காப்புக்காட்டுக்குள் சிலர் சுற்றித்திரி வதை பார்த்த வனத்துறையினர் அவர் களை மடக்கி பிடித்து விசாரணை மேற் கொண்டனர். அதில், பிடிபட்டவர்கள் அனைவரும் அதேபகுதியைச் சேர்ந்த சரவணன் (46), மகேந்திரன் (38), ராஜ ரத்தினம் (32), பொன்னுசாமி (62), மணி கண்டன் (47), ஜெகன் (32) என்பது தெரியவந்தது. இவர்கள் வனப்பகுதி யில் நாட்டுத்துப்பாக்கியை பயன்ப டுத்தி மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட சென்ற தும் தெரியவந்தது. இதனையடுத்து 6 பேரையும் வனத்துறையினர் கைது, வேட்டைக்கு பயன்படுத்திய ஒரு நாட்டுத்துப்பாக்கி, இரண்டு இருசக்கர வாகனங்களையும் அதிகாரிகள் பறி முதல் செய்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஆத் தூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.