districts

15 நாட்களில் 6 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை ஆய்வு

ஈரோடு, ஜூன் 9- தாளவாடி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பில், கடந்த 15 நாட்க ளில் மட்டும் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், அப்பகுதி யில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றியம், தலமலை ஊராட் சிக்குட்பட்ட தடசலட்டி, இட்டரை, மாவ நத்தம் ஆகிய மலைக் கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியில் அமைந் துள்ளன. ஆடு, மாடு மேய்ச்சல் தொழில் செய்து வாழ்ந்து வரும் இந்தப் பழங்கு டியின மக்கள் மர்மநோயால் பாதிக்கப் பட்டு, கடந்த 15 நாட்களில் மட்டும் 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரி ழந்துள்ளனர். இதில் தடசலட்டி கெளரி (65), மாதி (75), மாரன் (60), ரங்கன் (80), இட்டரை கிராமம் கேலன் (50, மாவநத்தம் மாரே (47) ஆகியோர் உயிரி ழப்புக்கு காரணம் தீவிர வயிற்றுப் போக்கு, வாந்தி என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 3 கிராமங்களைச் சேர்ந்த முருகே சன் (47), காமாட்சி (48), லட்சுமி (45) ஆகியோர் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு சத்தி, தாள வாடி, சாம்ராஜ் நகர் ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந் துள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஊராட்சி இணை இயக்குநர் உமாசங்கர் பாதிக்கப்பட்ட இட்டரை, தடசலட்டி, மாவநத்தம் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண் டார். மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற தாளவாடி ஆரம்ப சுகா தார நிலையம் சார்பில் சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினர், உணவுப் பாதுகாப்புத்துறையினர் வீடு, வீடாக சென்று அங்குள்ள மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் பயன்படுத்தும் கிணறு, குளம், குட்டை களில் குளோரின் பவுடர் தெளிக்கப் பட்டன. வீடுவீடாக கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணியும் தீவி ரப்படுத்தப்பட்டுள்ளது. இக்கிராமங்க ளில் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.