districts

img

55 ஆவது தேசிய நூலக வார விழா

கோவை, நவ. 23 - 55 ஆவது தேசிய நூலக வார விழா சூலூர் கிளை நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பாக ஒருவார காலம் நடைபெற்றது.  சூலூர் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு எழுத்தாளர் சின்னசாத்தான் தலைமை தாங்கினார். இரண்டாம் நிலை நூலகர் ஆ.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். இதில்,  சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட நூலக ஆய்வாளர் விவேகா னந்தன், மாவட்ட மைய நூலகர் பே.ராஜேந்திரன், மாவட்ட  மைய இரண்டாம் நிலை நூலகர் கா.ரவிச்சந்திரன்,  சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், துணைத்  தலைவர் சோலை கணேசன், தமுஎகச மாநில செயற்குழு  உறுப்பினர் கவிஞர் உமாமகேஸ்வரி, தமுஎகச கிளைச்  செயலாளர் மானூர் பழனி ராஜா ஆகியோர் உரையாற்றினர்.  முன்னதாக, கவிதை, நாடகம், கட்டுரை, கதை சொல்லுதல் போன்ற போட்டிகள் பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்,  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், கிராம நிர்வாக அலுவலர் சுந்தர பாண்டியன், செலக்கரிச்சல்மூன்றாம்நிலை நூலகர் வே. செந்தில்குமார், வள்ளுவராசன், வாசகர் வட்ட துணை  தலைவர் ஜெ.ரவிந்திரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர். முடிவில் மூன்றாம் நிலை நூலகர் எஸ்.எம்.வசந்தா மணி நன்றி கூறினார்.