திருப்பூர், ஜூன் 19- மின் கட்டணம் உயர்த்தப்பட் டதை கண்டித்து போராடிய விவசாயி கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய தியாகிகளின் 54 ஆவது நினைவு தினம் பெருமாநல் லூரில் புதனன்று கடைப்பிடிக்கப் பட்டது. 1970 ஆம் ஆண்டு விவசாயத்திற் கான மின் கட்டணம் ஒரு பைசா உயர்த் தப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெருமாநல்லூரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் காவல்து றையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த துப்பாக்கி சூட்டில் மாரப்பன், ஆயியப்பன், ராமசாமி ஆகிய விவசா யிகள் பலியாகினர். இதைதொடர்ந்து ஆண்டுதோறும் ஜூன் 19 ஆம் தேதி பெருமாநல்லூரில் தியாகிகளின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படு கிறது. இத்தியாகிகளின் 54 ஆவது ஆண்டு நினைவு தினம் பெருமாநல்லூ ரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் வடக்கு ஒன்றியத் தலைவர் கே. ரங்கசாமி தலைமையில் புதனன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதில், விவ சாயிகள் இலவச மின்சாரத்தை பறிக் கும் மத்திய மின்சார திருத்த மசோ தாவை திரும்ப பெற வேண்டும். விவ சாயிகளின் உற்பத்தி பொருளுக்கு வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி கட்டுப்படியான விலை வழங்க சட்டம் இயற்ற வேண் டும். அவிநாசி அத்திக்கடவு திட்டத் தில் விடுபட்ட குளம், குட்டைகளை திட்டத்தில் இணைத்திட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பெருமாநல்லூர் கிளை அலுவலகம் முன்பிருந்து பேரணி துவங்கி நினைவு ஸ்தூபி யில் நிறைவடைந்தது. இதில், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.கே. குழந்தைசாமி, எஸ்.வெங்கடாசலம், வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அப்புசாமி, விவசாய தொழிலாளர் சங்க வடக்கு ஒன்றியத் தலைவர் சீனி வாசன், ஒன்றியச் செயலாளர் கே.சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துகண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் எ.சிகாமணி, வடக்கு ஒன் றிய குழுக் உறுப்பினர் பி.கே.கருப்பு சாமி உட்பட திரளானோர் பங்கேற்ற னர். அதேபோல சிபிஐ சார்பு விவசா யிகள் சங்கம் சார்பில் நினைவு தின பேரணி நடைபெற்றது. இதை திருப் பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப் பராயன் துவக்கி வைத்தார். இதைய டுத்து நினை ஸ்தூபியில் தியாகிக ளின் குடும்பத்தாரை சந்தித்தார். அதேபோல் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வாகன பேரணி நடத் தப்பட்டது.