மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதா?
மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதா? தருமபுரி, ஜூலை 6- பென்னாகரம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைப்ப தற்காக புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை சேதப் படுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி, 7 ஆவது வார்டுக்குட்பட்ட லாடகார தெரு பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கான் கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், குடியி ருப்புப் பகுதிகளில் இருந்து கழிவுநீர் எளிதாக வெளியே றும் வகையில் கால்வாய் அமைக்க பென்னாகரம் பேரூ ராட்சி நிர்வாகத்தின் சார்பில், 15 ஆவது நிதிக்குழுவின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்த ஏலம் விடப் பட்டது. கால்வாய் அமைப்பதற்கான பணிகளின் போது புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை உடைக்கப் பட்டு, வாகனங்கள், பாதாசாரிகள் செல்ல முடியாத நிலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இத னால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அவசர தேவைக் காக செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். புதிதாக போடப்பட்ட கான்கிரீட் சாலையை சேதப்ப டுத்தாமல் குடியிருப்பு பகுதிகளின் ஓரங்களில் கால்வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், கான்கிரீட் சாலை உடைக்கப்பட்டு கால்வாய் அமைக்கப்படுகிறது. இதேபோல பென்னாகரத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் கால்வாய் அமைக்கும் பணிக்காக புதிதாக அமைக் கப்பட்ட சாலையின் நடுவே பள்ளங்கள் தோண்டப்படுவ தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, புதிய சாலை அமைப்பதற்கு முன்னரே இதுபோன்ற பணி களை செய்யாமல் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்றும், கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தனியார் பேருந்தின் ஓட்டுநர் உரிமம் ரத்து
சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தனியார் பேருந்தின் ஓட்டுநர் உரிமம் ரத்து சேலம், ஜூலை 6- சேலம் அருகே சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம் பவத்தில், விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டு நரின் உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்து போக்கு வரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சேலம் மாவட்டம், வீராணத்தை அடுத்த சுக்கம்பட்டி அரசு பள்ளி முன்பு நிகழ்ந்த கோர விபத்தில் இருவேறு குடும்பங் களைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த னர். இதில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை ஓட்டி வந்த சுக்கம்பட்டி, காந்தி நகரைச் சேர்ந்த ரமேஷ் (28) அங்கி ருந்து தப்பியோடி விட்டார். இந்த விபத்து தொடர்பாக வீரா ணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய தனியார் பேருந்து ஓட்டுநர் ரமேஷை காவல் துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஓட்டு நர் கவனக்குறைவால் விபத்து நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஓட்டுநர் ரமேஷ் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்ப டுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய் யப்பட்டது. இதனிடையே ஓட்டுநரிடம் விளக்கம் கேட்டு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி னர். ஓட்டுநர் தனது விளக்கத்தை போக்குவரத்து அதிகாரிகளி டம் அளித்தார். இதனை பரிசீலித்த அதிகாரிகள், 5 பேரின் உயிரிழப்புக்கு காரணமான ரமேஷின் ஓட்டுநர் உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்து உத்தரவிட்டனர்.
சிலிண்டர் வெடித்து விபத்து
சிலிண்டர் வெடித்து விபத்து சேலம், ஜூலை 6- சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் படு காயமடைந்தனர். சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி பகுதியில் ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம், அந்திரைச் நேர்ந்த கோபி, குமார் ஆகியோர், அங்கிருந்த பால் கேன்களில் சனியன்று பழுது நீக்கம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, வெல்டிங் செய்து கொண்டிருந்தபோது, அருகிலிருந்த சிலிண்டர் வெடித்து சித றியதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந் தவர்கள் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விசைத்தறித் தொழிலாளி தற்கொலை
சேலம், ஜூலை 6- எடப்பாடி அருகே ஆன்லைன் சூதாட் டத்தில் பணத்தை இழந்த விசைத்தறித் தொழி லாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி எல் லைக்குட்பட்ட சின்ன மணலி பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து (42) என்பவர், தனது வீட்டில் விசைத்தறி அமைத்து தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 6 மாதங்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த அங்கமுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியின் தாலியை விற்று அதில் வந்த பணத்தை கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட் டுள்ளார். அந்தப் பணத்தையும் இழந்த அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகி றது. மேலும், அங்கமுத்துவுக்கு கடன் கொடுத்த நபர்கள், பணத்தைக் கேட்டு நெருக் கடி கொடுத்துள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்குள்ளான அங்கமுத்து, சாணிப் பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மயங்கிக் கிடந்த அங்கமுத் துவை மீட்ட குடும்பத்தினர், அருகிலுள்ள தனி யார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட நிலையில், அவர் வெள்ளி யன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து எடப்பாடி காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொப்பூர் மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற வாகனங்களுக்கு அபராதம்
தருமபுரி, ஜூலை 6- தொப்பூர் மலைப்பாதையில் அதிவேக மாக சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ.95,46,275 வசூல் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை, போக்குவரத்து துறையின் சார்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன் தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் அ.க. தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கு.வெங்கிடு சாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகி யோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதில், ஏறத்தாழ 7589 வாகனங்கள் தணிக்கை செய் யப்பட்டு, 2984 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச் சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங் களுக்காக 356 வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டன. மேலும், சரக்கு வாகனத்தில் ஆட் களை ஏற்றி சென்றதாக 155 வாகனங்களுக் கும், அதிகபாரம் ஏற்றிச்சென்ற 86 வாகனங் களுக்கும், அனுமதீச்சீட்டு இல்லாமல் இயக் கிய 97 வாகனங்களுக்கும், அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 1201 வாகனங்க ளுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக் கிய 195 வாகனங்களுக்கும், காப்புச்சான்று/ புகைச்சான்று இல்லாமல் இயக்கிய 556 வாக னங்களுக்கும், சிகப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாமல் இயக்கிய 352 வாகனங்களுக் கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 211 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வாகன சோதனையின் மூலமாக அர சுக்கு சாலை வரியாக ரூ.32,68,244 மற்றும் இணக்க கட்டணமாக ரூ.36,83,656 என மொத் தம் ரூ.69,51,900 உடனடியாக வசூலிக்கப் பட்டது. மேலும், இந்த வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட் டணமாக ரூ.73,93,300 நிர்ணயம் செய்யப் பட்டது. கடந்த ஐனவரி முதல் ஜூன் வரை தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அரசுக்கு வாகன சோதனை மூலம் மொத்தம் ரூ.1,43,45,200 செலுத்தப்பட்டுள் ளது. மேலும், தொப்பூர் மலைப்பாதையில் நிர் ணயிக்கப்பட்ட வேகவரம்பான 30 கி.மீ. மேல் இயக்கப்படும் வாகனங்களுக்கு போக்குவ ரத்து துறை சார்பில் வேகம் கண்காணிக் கும் கருவி (Speed Radar Gun) உதவியுடன் கடந்த 3 ஆண்டுகளில் 13,177 வாகனங்க ளுக்கு இ – சலான் (e-Challan) மூலம் ரூ.95,46,275 அபராதம் விதிக்கப்பட்டுள்ள தென வட்டார போக்குவரத்து அலுவலர் த. தாமோதரன் தெரிவித்துள்ளார்.
பால் கொள்முதல் விலை குறைப்பு தனியார் நிறுவனங்களுக்கு கண்டனம்
பால் கொள்முதல் விலை குறைப்பு தனியார் நிறுவனங்களுக்கு கண்டனம் திருப்பூர், ஜூலை 6 - தமிழ்நாட்டில் லிட்டருக்கு ரூ.5 வரை பால் கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்கள் காலம் இல்லை, விவ சாயிகளுக்கு மிக கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல் வேறு இடங்களில் அறிவிக்கப்படாமலேயே பால் கொள்முத லையும் நிறுத்தி உள்ளார்கள். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அலுவலகம் முன்பு விரை வில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங் கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விசைத்தறித் தொழிலாளி தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விசைத்தறித் தொழிலாளி தற்கொலை சேலம், ஜூலை 6- எடப்பாடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விசைத்தறித் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட சின்ன மணலி பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து (42) என்பவர், தனது வீட்டில் விசைத்தறி அமைத்து தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 6 மாதங்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த அங்கமுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியின் தாலியை விற்று அதில் வந்த பணத்தை கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பணத்தை யும் இழந்த அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகி றது. மேலும், அங்கமுத்துவுக்கு கடன் கொடுத்த நபர்கள், பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்குள்ளான அங்கமுத்து, சாணி பவு டரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மயங் கிக் கிடந்த அங்கமுத்துவை மீட்ட குடும்பத்தினர், அருகி லுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் வெள்ளி யன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து எடப் பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய சாலையை சேதப்படுத்தி கால்வாய் பணி மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதா?
தருமபுரி, ஜூலை 6- பென்னாகரம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை சேதப்படுத்தப்பட்டதால், பொதுமக் கள் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் பேரூராட்சி, 7 ஆவது வார்டுக்குட் பட்ட லாடகார தெரு பகுதியில் 500க் கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். இப்பகுதியில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலை யில், குடியிருப்புப் பகுதிகளில் இருந்து கழிவுநீர் எளிதாக வெளியே றும் வகையில் கால்வாய் அமைக்க பென்னாகரம் பேரூராட்சி நிர்வா கத்தின் சார்பில், 15 ஆவது நிதிக்குழு வின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு ஒப்பந்த ஏலம் விடப்பட்டது. கால்வாய் அமைப்பதற்கான பணிக ளின் போது புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை உடைக்கப்பட்டு, வாகனங்கள், பாதாசாரிகள் செல்ல முடியாத நிலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அவசர தேவைக்காக செல்ல முடியா மல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதிதாக போடப்பட்ட கான்கிரீட் சாலையை சேதப்படுத்தாமல் குடியி ருப்பு பகுதிகளின் ஓரங்களில் கால் வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், கான்கிரீட் சாலை உடைக் கப்பட்டு கால்வாய் அமைக்கப்படுகி றது. இதேபோல பென்னாகரத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் கால்வாய் அமைக்கும் பணிக்காக புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் நடுவே பள்ளங்கள் தோண்டப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, புதிய சாலை அமைப்பதற்கு முன் னரே இதுபோன்ற பணிகளை செய் யாமல் மக்களின் வரிப்பணம் வீணாகி றது என்றும், கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய சிறுவர்கள் 5 பெற்றோர்களுக்கு அபராதம் விதிப்பு
விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய சிறுவர்கள் 5 பெற்றோர்களுக்கு அபராதம் விதிப்பு ஈரோடு, ஜூலை 6- 5 சிறுவர்கள் விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு அவர்களது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 18வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறார்களா என வாகன தணிக்கை செய்தனர். இதில் 5 சிறுவர்கள் விதிமுறை மீறி வாகனங்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு அவர்களது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் போக்குவ ரத்து போலீஸ் காவல் துறை மேலாளர் கஸ்தூரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்ட வேண்டாம் என்றும் கட்டாயம் தலைகா சம் அணிந்து வாகனங்களை ஓட்டுங்கள் என்றும் அறிவுறுத்தி னர்.
அமராவதி சர்க்கரை ஆலையில் கரும்பு ஒப்பந்தம் செய்ய அழைப்பு
திருப்பூர், ஜூலை 6 - அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை எல் லைக்குட்பட்ட கரும்பு விவசாயிகள் தங்க ளது கரும்பு பயிர்களை ஆலையுடன் ஒப்பந் தம் செய்து கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித் துள்ளார். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்ந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளான திருப் பூர், திண்டுக்கல், கோயமுத்தூர் மாவட்ட விவ சாயிகள் ஆலைக்கு கரும்பு ஓப்பந்தம் செய்து ஆண்டுதோறும் அரவைக்கு அனுப்பி வரு கின்றனர். 2023-24ம் ஆண்டு அரவையினை மேற்கொள்ள இயலாத காரணத்தினால் அர வைப்பருவத்திற்கு பதிவு செய்த கரும்புகள் விவசாயிகள் நலன் பாதிக்காத வண்ணம் பிற சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டது. அவர்களுக்கு கரும்பு கிரயத்தொகை முழுவ தும் மிக விரைவாக பட்டுவாடா செய்து முடிக் கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024-25-ஆம் ஆண்டு அரவைப் பட்டத்திற்கு நடவு / கட்டை பயிர் செய்யப்பட்டு உள்ளது. சென்ற ஆண்டு போலவே ஆலையின் உறுப்பினர்களான விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இந்த அரவைப் பட்டத்திலும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யவுள்ள கரும்புகளை பிற ஆலைகளுக்கு கரும்பு பரிமாற்ற அடிப்படையில் அறுவடை செய்து அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆகவே, கரும்பு விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தங்களது கரும்பு பயிர்களை ஆலையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இரத்த வகையை மாற்றி ஏற்றியதால் பெண் உயிரிழப்பு: ரூ.20 லட்சம் இழப்பீடு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
கோவை, ஜூலை 6- இரத்த வகையை மாற்றி ஏற்றியதால் பெண் உயிரிழந்த வழக்கில் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டது. கோவை மாவட்டம், மின்வாரிய உதவி பொறியாளராக பணிபுரிபவர் சாய்பிரேமன். இவர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தனது மனைவி ராஜலட்சுமி கடந்த 2018 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் பேரூர் அருகே சென்று கொண்டு இருந்த போது நாய் குறுக்கே வந்ததால் வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவம னையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி மருத்துவர்கள் ரத்தம் ஏற்றினர். பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற் பட்டது. இதையடுத்து, அவருக்கு ரத்தம் செலுத்துவது நிறுத்தப்பட்டது. மருத்துவர் கள் அருண்குமார், ஆண்டனி ஆகியோரின் ஆலோசனைப்படி மருத்துவர் தமிழ்ச்செல் வன் ராஜலெட்சுமிக்கு சிகிச்சை அளித்தார். இருப்பினும் அவருக்கு உடல்நிலை மோசமா னது. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்து விட்டார். அவர் இதயம் செயலிழப்பு கார ணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது குறித்து பேரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். ராஜலெட்சுமியின் உடல் பிரேத பரிசோ தனைக்கு கோவை அரசு மருத்துவம னையில் நடைபெற்றது. இதில், ராஜலெட்சு மிக்கு ரத்தம் செலுத்திய போது அந்த ரத்தம் அவரது உடலுக்கு பொருந்தாத வேறு வகை ரத்தம் ஏற்றியதன் காரணமாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என பிரேத பரி சோதனை அறிக்கை தெரிய வந்தது. எனவே தனியார் மருத்துவமனை அவர் மனைவியின் மரணத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அம்மனுவில், கூறப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தங்க வேல் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத் துவர்கள் மூன்று பேர் இணைந்து ராஜ லட்சுமியின் கணவர் சாய்பிரேமனுக்கு ரூபாய் 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
நிரந்தரமாக மூடப்படும் ரயில்வே கேட்
நிரந்தரமாக மூடப்படும் ரயில்வே கேட் கோவை, ஜூலை 6- போத்தனூர் ரயில் வழித்தடத்தில் உள்ள வடுகபா ளையம் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதாக ரயில் வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி - கோவை போத்த னூர் ரயில் வழித்தடத்தில் உள்ள வடுகபாளையம் பகுதி யில் ரயில்வே கேட் உள்ளது. இங்கிருந்து சிறிது தொலை வில் சுரங்க பாதையை இணைக்கும் வகையில் சாலை அமைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வடுகபாளையம் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பலரும் அவதிக்குள்ளாவ தாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், பொள்ளாச்சி- பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரி வில் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட் டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாலத்தில் இருந்து இறங்கி சுமார் ஒரு கி.மீ. தூரம் வரை சுற்றி சென்று மீண் டும் வடுகபாளையத்தை வந்தடைய வேண்டி உள்ளது. இது மிகவும் சிரமமாக இருக்கிறது. இதனால், பெரும்பா லான வாகன ஓட்டிகள் சி.டி.சி. மேட்டிலிருந்து வடுகபா ளையம் ரயில்வே கேட் வழியாக சென்று வந்தனர். தற்போது எந்தவித முன் அறிவிப்புமின்றி திடீரென ரயில்வே கேட் மூடப்பட்டு உள்ளது. ரயில்வே கேட்டின் அருகில் உள்ள சுரங்க பாதை மிகவும் குறுகலானது, வளைவானது எதிரே வரும் வாகனங்கள் தெரிவ தில்லை. மேலும், அவ்வழியாக தினமும் வேலை செல் லும் பொது மக்களும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் செல்லும்போது போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் சூழல் உள் ளது. இதனால், பொதுமக்களின் நலன் கருதி அவர்க ளது கருத்துக்களுக்கு மதிப்பளித்து மீண்டும் ரயில்வே கேட்டை பயன்பாட்டிற்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய சிறுவர்களின் 5 பெற்றோர்களுக்கு அபராதம் விதிப்பு
விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய சிறுவர்களின் 5 பெற்றோர்களுக்கு அபராதம் விதிப்பு ஈரோடு, ஜூலை 6- 5 சிறுவர்கள் விதிமுறை மீறி வாகனங்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு அவர்களது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வா ளர் குணசேகரன் தலைமையில் போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 5 சிறுவர்கள் விதிமுறை மீறி வாகனங்கள் ஓட்டுவது கண் டறியப்பட்டு அவர்களது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் போக் குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட னர்.
கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மான்
கோவை, ஜூலை 6- பேரூரை அடுத்த தீத்திபாளையம் பகுதி யில் உள்ள சுமார் 150 அடி ஆழம் உள்ள கிணற்றில் புள்ளி மான் விழுந்த நிலையில், அதை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீய ணைப்புத் துறை உதவியுடன் வனத்துறையி னர் மீட்டனர். கோவை மாவட்டம், பேரூரை அடுத்த தீத்தி பாளையம், சிப்ஸ் கம்பெனிக்கு அருகில் சுமார் 150 அடி ஆழம் உள்ள கிணற்றில் புள்ளி மான் விழுந்து உள்ளதாக அப்பகுதி பொது மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரி வித்து உள்ளனர். தகவலின் பேரில் வனத் துறையினர் அப்பகுதிக்கு சென்று பார்த்த போது ஹைவேக்கு சொந்தமான சுமார் 150 அடி ஆழம் கொண்ட கிணற்றில் சுமார் 1 வயது பெண் புள்ளி மான் ஒன்று உள்ளே விழுந் தது இருப்பதை உறுதி செய்தனர். பின்னர், மதுக்கரை வன அலுவலர் தலைமையில் கரடி மடை பிரிவு வனப் பணியளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தீய ணைப்பு துறை இணைந்து நீண்ட போராட்டத் திற்கு பின் கிணற்றில் இருந்து புள்ளி மானை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டு பின் கரடிமடை வன பகுதியில் உள்ள காப்பு காட்டில் விடுவித்தனர்.
நெல் விதைக்கும் பணி தீவிரம்
உதகை, ஜூலை 6- கூடலூரில், பருவமழை தீவிரமடைந் துள்ள நிலையில், விவசாயிகள் நெல் விதைக் கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் ஒரு வாரத்துக்கு மேலாக, பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து, நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது. இதனால், வயல்களில் நெல் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க துவங்கியுள் ளது. இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் வயல்களில் உழவுப் பணிகளை மேற் கொண்டு, விதை நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆடி மாதம், நாற்றுகள் பறித்து நடவும் பணிகளை துவங்க உள்ளனர். வயல்களில் விதைக்கப்பட்ட விதை நெல்லை பாதுகாக்க, விவசாயிகள் பகல் நேரம் முழுவதும், கண்காணித்து, சப் தம் மற்றும் சில்வர் தட்டில் ஓசை எழுப்பி பற வைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். கூடலூரில், அதிக அளவில் நெல் விவசாயம் செய்து வந்தாலும், சம்பந்தப்பட்ட துறை அரசு உதவியும் கிடைக்காததால் விவ சாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற னர்.
மின்வாரிய குன்னத்தூர் பிரிவு அலுவலகங்கள் அவிநாசிக்கு மாற்றம்
ஈரோடு, ஜுலை 6- ஈரோடு மின்பகிர்மான வட்டத்திலிருந்து, திருப்பூர் மின்ப கிர்மான வட்டம், அவிநாசி கோட்டத்திற்கு ஜுலை 1ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மின்வாரி யம் தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஈரோடு மின்பகிர்மான வட்டம், பெருந்துறை கோட்டத்தை சார்ந்த குன்னத்தூர் உபகோட்டத்திற்குட்பட்ட குன்னத்தூர் நகர், குன்னத்தூர் கிழக்கு, குன்னத்தூர் கிராமி யம் மற்றும் பல்லகவுண்டன்பாளையம் ஆகிய பிரிவு அலுவ லகங்கள் திருப்பூர் மாவட்ட எல்லைக்குள் உள்ளது. பிரிவு அலுவலகங்கள் அந்தந்த மாவட்ட எல்லைக்குள் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று மின்சார வாரிய வழிகாட்டு தல் உள்ளது. அதன்படி, ஈரோடு மின்பகிர்மான வட்டத்திலி ருந்து, திருப்பூர் மின்பகிர்மான வட்டம், அவிநாசி கோட்டத் திற்கு ஜுலை 1ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட் டுள்ளது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இரத்த வகையை மாற்றி ஏற்றியதால் பெண் உயிரிழப்பு 20 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
கோவை, ஜூலை 6- இரத்த வகையை மாற்றி ஏற்றிய தால் பெண் உயிரிழந்த வழக்கில் குடும் பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை மாவட்டம், மின்வாரிய உதவி பொறியாளராக பணிபுரிபவர் சாய்பிரேமன். இவர் கோவை நுகர் வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கில், தனது மனைவி ராஜலட் சுமி கடந்த 2018 ஆம் ஆண்டு இருசக் கர வாகனத்தில் பேரூர் அருகே சென்று கொண்டு இருந்த போது நாய் குறுக்கே வந்ததால் வாகனத்தில் இருந்து தடு மாறி கீழே விழுந்து படுகாயம் அடைந் தார். அவரை மேட்டுப்பாளையம் சாலை யில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி மருத்துவர்கள் ரத்தம் ஏற்றினர். பின்னர் சிறிது நேரத்தில் அவ ருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட் டது. இதையடுத்து, அவருக்கு ரத்தம் செலுத்துவது நிறுத்தப்பட்டது. மருத்து வர்கள் அருண்குமார், ஆண்டனி ஆகி யோரின் ஆலோசனைப்படி மருத்து வர் தமிழ்ச்செல்வன் ராஜலெட்சுமிக்கு சிகிச்சை அளித்தார். இருப்பினும் அவருக்கு உடல்நிலை மோசமானது. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்து விட்டார். அவர் இதயம் செயலி ழப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத் துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்த னர். இதுகுறித்து பேரூர் காவல்துறையி னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ராஜலெட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற் றது. இதில், ராஜலெட்சுமிக்கு ரத்தம் செலுத்திய போது அந்த ரத்தம் அவரது உடலுக்கு பொருந்தாத வேறு வகை ரத் தம் ஏற்றியதன் காரணமாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிய வந்தது. எனவே தனியார் மருத்துவ மனை அவர் மனைவியின் மரணத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அம் மனுவில், கூறப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து, இவ்வ ழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தங்கவேல் மருத்துவமனை நிர் வாகம் மற்றும் மருத்துவர்கள் மூன்று பேர் இணைந்து ராஜலட்சுமி கணவர் சாய்பிரேமனுக்கு ரூபாய் 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.