திருப்பூர், நவ. 6 – சாலைப் பணியாளர்களின் 41 மாதம் பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த, உயர்நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மண்டல அளவில் சாலைப் பணி யாளர் சங்கத்தினர் சங்கு ஊதி போராட்டம் செய்தனர். திருப்பூர் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவ லகம் முன்பாக புதன்கிழமை கோட்டத் தலைவர்கள் தாராபுரம் கே.வெங்கிடு சாமி, திருப்பூர் ஆர்.கருப்பன், கரூர் கே. செவந்திலிங்கம், ஈரோடு எம்.ஆர்.செங் கோட்டையன் ஆகியோர் தலைமை ஏற்றனர். உயர்நீதிமன்றத் தீர்ப்புப்படி சாலைப் பணியாளர் பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்ப டுத்த வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும், கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கக் கூடாது, 4ஆயிரம் நிரந்தரப் பணியிடங்களை ஒழிக்கக் கூடாது, உயி ரிழந்த சாலைப் பணியாளர்களின் குடும் பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சங்கு ஊதி போராட்டம் நடை பெற்றது. இதில் கரூர், ஈரோடு, திருப் பூர், தாராபுரம் கோட்டங்களைச் சேர்ந்த சாலைப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கரூர் பாலசுப்பிரம ணியம், தாராபுரம் தில்லையப்பன், ஈரோடு பாபு, திருப்பூர் ஆர்.ராமன் ஆகிய கோட்டச் செயலாளர்கள் விளக் கவுரை ஆற்றினர். மாநிலத் தலைவர் மா. பாலசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றி னார். கோட்டப் பொருளாளர் பி.விஸ்வ நாதன் நன்றி கூறினார்.