திருப்பூர், ஆக.29- திருப்பூரில் மழையுடன் கூடிய பலத்த சூறைக்காற்று வீசியதில் பனி யன் நிறுவனம் இடிந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டது. இதில் நான்கு பேர் காயம் அடைந்தனர். திருப்பூர், கூலிபாளையம் பகுதி யில் கிஷோர் கார்மென்ட்ஸ் என்ற பனி யன் நிறுவனம் செயல்பட்டு வருகி றது. 3000 சதுர அடியில் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு ஒரே கட்ட டமாக கட்டப்பட்டு, மேற்கூறையில் அலுமினிய தகடுகளால் ஆன கூலிங் சீட் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கட்டிங், டெய்லரிங், அயனிங் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத் தில் 200க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் செவ் வாயன்று பணிக்கு வந்த தொழிலா ளர்கள் தங்களது அன்றாட வேலை களை மேற்கொண்டனர். தொடர்ந்து பிற்பகல் தேநீர் இடைவேளையில் தொழிலாளர்கள் அனைவரும் வெளியே உள்ள கடைக்கு சென்று இருந்தனர். இருப்பினும் 10க்கும் மேற் பட்டோர் பனியன் நிறுவனத்திற்குள் இருந்து பணி செய்து வந்தனர். அப்போது கனமழையோடு கூடிய சூறைக்காற்று வீசியதில், அலுமினி யத்தால் ஆன தகர கொட்டகை, காற் றில் பறந்தது. மேலும் பலத்த சூறைக் காற்றின் வேகம் தாங்காமல், அந்த பனியன் நிறுவனத்தின் சுவர்கள் சரிந்து விழுந்து நொறுங்கியது. திடீ ரென நடந்த இந்த விபத்தில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண் டிருந்த 10க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீய ணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இடி பாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவ்விபத்து தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.