கோவை, ஆக.3- வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 மணி நேரத்தில் கொலை செய்த 4 பேர் கைது செய் யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பத்ரி நாராயணன் தெரி வித்துள்ளார். கோவை மாவட்டம், செட்டிபாளையம் அருகே வெள்ளி யன்று வழக்கறிஞர் உதயகுமார் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இச்சம்பவம் குறித்து சனி யன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், வழக்கறிஞர் கொலை வழக்கில் 8 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தபட்டதில், 12 மணி நேரத் தில் 4 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், நான்கு பேரும் கோவையை சேர்ந்தவர் கள். அய்யனார் என்ற செல்வம் மற்றும் கௌதம் ஆகியோர், வழக்கறிஞர் உதயகுமாருடன் காரில் சென்றுள்ளனர். அப் போது வழக்கறிஞர் உதயகுமாருக்கு கொடுத்த ரூ.30 லட் சத்தை அய்யனார் என்ற செல்வம் திருப்பி கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே செட்டிபா ளையம் அருகே காரை நிறுத்தி அய்யனாரின் நண்பர்க ளான அருண்குமார் மற்றும் அபிஷேக் ஆகிய இரண்டு பேரை வரவழைத்து காரில் வழக்கறிஞருடன் சென்ற அய்யனார், கௌதம் உள்ளிட்ட நான்கு பேரும் அரிவா ளால் உதயகுமாரை வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் கார், இரு சக்கர வாகனம், அரிவாள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச் சனை மட்டுமே இந்த கொலைக்கான காரணம். மேலும், இந்த வருடம் கொலை வழக்கு குறைந்துள் ளது. சமூக வலைதளங்களில் கண்காணிக்க தனிக்குழுக் கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக்குழு கல்லூரிகளில் மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறோம், என் றார்.