சேலம், செப்.3- ஓமலூரில் கடந்த 3 ஆண்டுகளில் மட் டும் மேற்கொள்ளப்பட்ட 4,805 வளர்ச்சி திட்டப்பணிகளில், 3,855 பணிகள் முடிக் கப்பட்டுள்ளதென ஆட்சியர் ரா. பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத்தப் பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி செவ்வாயன்று ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகை யில், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.140.47 கோடி மதிப்பீட்டிலான 4,805 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 3,855 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீத முள்ள 950 பணிகள் நடைபெற்று வரு கின்றன. ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட் சியில் டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, டெங்கு கொசுக் கள் தங்களது குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி உருவாகாத வண்ணம் பார்த்து கொள்ளுதல் உள்ளிட்ட பொதுமக்க ளுக்கான விழிப்புணர்வு நடவடிக்கை களை அதிகளவில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஓமலூர் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட ஊராட்சிகளில் தலா ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும், ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக்கட்டி டம் கட்டப்பட்டு வருவதையும், எட்டிக் குட்டப்பட்டி ஊராட்சியில் ரூ.31.46 லட் சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது, என்றார்.