சேலம், ஜூலை 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவரான தோழர் பி.தர்மலிங்கத் தின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் சேலத்தில் அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்று பட்ட சேலம் மாவட்டத்தின் செயலாளராக வும், 1969 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலமீட்சி போராட்டத்தை முன்னின்று நடத்தி விவசாய சங்கம் மற்றும் கட்சிக்கு முக்கிய பணியாற்றி யவர் தோழர் பி.தர்மலிங்கம். இவரின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் சிபிஎம் சேலம் மாவட் டக்குழு அலுவலகமான சேலம் சிறை தியாகி கள் நினைவகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கட்சி அலுவலக செயலா ளர் பி.சந்திரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, பொன்.ரமணி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பி. தர்மலிங்கம் உருவப்படத்திற்கு மாலை அணி வித்து தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.