சேலம் மாவட்டம் சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேலத்தம்பட்டி பகுதியில் 95 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேலதாம்பட்டி ஏரி உள்ளது. சேலம் மாநகராட்சி 22 ஆவது டிவிஷன் பகுதிக்கு உட்பட்ட மாநக ராட்சி பகுதியில் பிரம்மாண்டமாக உள்ள இந்த ஏரியை உரிய முறை யில் தூர்வாராததால் சிவதாபுரம், அம்மன் நகர், எம்ஜிஆர் நகர், சேலத் தாம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 3000 திற்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழும் அபாயம் உள்ளது. சாதாரண மலைக்கே ஏரியின் நீர் குடி யிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வெள்ளக்காடாக மாறிவரும் அவலம் தொடர்கதையாக மாறி வருகிறது. அரசு உரிய முறையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் குமார் கூறுகையில், சேலம் மாநகரில் உள்ள சிவதா புரம் ஏரி 95 ஏக்கர் பரப்பளவு கொண் டது. தமிழ்நாடு மின்சார வாரியம், குடிசை மாற்று வாரியம், மத்திய அரசின் உணவு வாணிப கழகம் ஆகியவை 15 ஏக்கர் பரப்பளவில் இதே பகுதியில் கட்டப்பட்டு உள் ளது. அதுபோக ஏரியின் நீர் பிடிப்பு பகுதி 80 ஏக்கராக இருந்த நிலை யில், தற்போது ஏரியை சரிவர தூர் வாராததால் 20 ஏக்கர் அளவிற்கே நீர் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏரி தூர்வாரப்பட்டது அதன் பிறகு இன்று வரை எந்த ஒரு குடிம ராமத்து பணிகளும் செய்யப்பட வில்லை. இதனால், மழைக்காலங்கள் மற்றும் சாதாரண சாரல் மழைக்கு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் நீரானது சேலத்தாம்பட்டி ஏரிக்குள் வந்தடைந்து அருகில் உள்ள சிவதாபுரம் பனங்காடு பகுதிகளில் உள்ள வீடுகளில் தண் ணீர் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சமூக அக்கறையுடன், தான் முன் நின்று 80 ஆயிரம் வரை செலவு செய்து ஏரியில் உள்ள முட்களை வெட்டி அகற்றிய பிறகு அரசின் மெத்தன போக்கால் மீண்டும் ஏரியில் ஆகாயத்தாமரை செடிக ளால் சூழப்பட்டு உள்ளது. சேலம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட ஏரியாக இருந்த போதி லும் இதுவரை இந்த ஏரிக்கு தூர் வார எந்த நிதியும் ஒதுக்கப்பட வில்லை என்றார். மேலும், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் சிவதாபுரம் பகுதியில் கடந்த மலைக்கு ஏரி நீர் ஊருக்குள் புகுந்ததால் வெள்ளக்காடாக மாறிய அவலம் ஏற்பட்டது.
இருந்த போதிலும் மாவட்ட நிர் வாகம் எந்த முன்னெச்சரிக்கை நட வடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் அடுக்குமாடி கட்டடங் கள் இங்கு கட்டப்பட்டு 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் போதிய பாது காப்பு வசதிகள் தடுப்பு சுவர்கள் இதுவரை அமைக்கப்படவில்லை. தமிழகத்தை உலுக்கிய சென்னை மற்றும் தென் மாவட்ட மழை பாதிப்பை போல், சேலம் சேலதாம் பட்டி ஏரியை பராமரிக்காவிட்டால் அதே நிலை இங்கு ஏற்படும் என எச் சரிக்கை விடுத்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் அப்பகுதி நிர்வாகி கோபி கூறுகையில், சேலம் சிவதாபுரம் பகுதியில்தொடர்ந்து மழைநீர் சூழும் நிலையே நீடித்து வருகிறது. அரசின் கவனத்திற்கு பலமுறை தெரியப்படுத்தியும் இதுவரை போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. ஏரியை சரியாக தூர்வாரப்படாததால் நீர் பிடிப்பு பகுதி குறைந்து முட்பு தர்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் இப்பகுதியில் சமூக விரோத செயல்கள் அதிகம் நடைபெறுகிறது. தமிழக அரசு உட னடியாக சேலத்தாம்பட்டி ஏரிக்கு தூர்வார சிறப்பு நிதியை ஒதுக்கி ஏரியை பராமரிக்க வேண்டும். நடைபாதை சிறுவர் பூங்கா, விளை யாட்டு திடல் உள்ளிட்ட சாராம் சங்களுடன் ஏரியை பயன்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என் றார். - எழில்.