திருப்பூர், செப். 26 – கடந்த இரண்டு மாத காலத்தில் வெறி நாய்கள் கடித்து கிராமப்புற விவசாயிகள் வளர்த்து வந்த ஆடு, கன்று உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழிந்துள்ளன. எனவே வெறிநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியு றுத்தினர். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கூட்டம் செவ்வாயன்று மாவட்ட ஆட்சி யரகத்தில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், சார் ஆட்சியர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் மற்றும் வேளாண் துறை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்த விவசாயிகள், தனிப்பட்ட விவசா யிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறி யதாவது: தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி ஏற்பட்டு தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர். தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவிகிதம்,
மாநில அரசு 25 சதவிகிதம், விவசாயி 25 சதவிகி தம் என்ற அடிப்படையில் தென்னை பயிர்க் காப்பீட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ந்து போன தென்னை மரங்களுக்கு இழப் பீடு வழங்க வேண்டும். ரூ.248 கோடியில் அதி நவீன வசதியுடன் கால்நடை மருத்துவப் பல்க லைக்கழக ஆராய்ச்சி நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. அங்கு நோய்வாய்ப்பட்ட கால்நடை களை கொண்டு செல்ல வாகன வசதி ஏற்ப டுத்தித் தர வேண்டும். மலைவாழ் மக்களுக்கு 444 நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவர்களை பிஎம் கிஸான் திட்டத்தில் இணைக்க வேண்டும். வேளாண் துறை சார்ந்து 19 மனுக்கள் கொடுத் ததில் 6 மனுக்களுக்கு மட்டுமே பதில் அளிக்கப் பட்டுள்ளது. பொதுவாக பதில் அளிப்பதில்லை. இந்த போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை வசம் உள்ள 114 ஏக்கர் கோயில் நிலத்தை 2 ஏக்கர், 3 ஏக்கர் என்ற அளவில் பிரித்து ஏலம் விட்டால் கோயில் நிர்வாகத்துக்கு வருமானம் கிடைப்பதுடன், விவ சாயிகளும் பயனடைவார்கள். ஒன்றிய அரசு எண்ணெய் இறக்குமதிக்கு 20 சதவிகித வரியை நீக்கியுள்ளது. இந்திய எண்ணெய் வித்து உற்பத் தியாளர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே இந்த வரி நீக்கத்தை ரத்து செய்ய வலியு றுத்த வேண்டும் என்று எஸ்.ஆர்.மதுசூதனன் கூறினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.குமார் பேசுகையில், அவிநாசி, திருப் பூர் மற்றும் ஊத்துக்குளி வட்டாரங்களில் நிலக்க டலை சாகுபடி 1000 ஏக்கருக்கு மேல் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. அதற்கு இழப்பீடு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கடந்த இரண்டு மாத காலத்தில் வெறிநாய்கள் கடித்து கிராமப்புறங்களைச் சேர்ந்த விவசா யிகளின் 300க்கும் மேற்பட்ட ஆடு, கன்று உள் ளிட்ட கால்நடைகள் அழிந்துபோயுள்ளன. எனவே வெறிநாய்களைக் கட்டுப்படுத்தவும், உள்ளாட்சி அமைப்புகள் இறைச்சிக்கழிவு களை பொது இடங்களில் வீசிச் செல்வதால் அவற்றை சாப்பிட்டுப் பழகிய நாய்கள், கால் நடைகளை கடித்துக் குதறுகின்றன. எனவே பொது இடங்களில் இறைச்சி கழிவுகள் கொட்டு வதைத் தடுக்க வேண்டும். மாவட்டத்தில் 16 பேரூ ராட்சிகளில் சிறு கடைகள் அமைத்து விவசாயிக ளின் காய்கறி உள்ளிட்ட விளைபொருட்கள் விற் பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பயன்பாடு அதிகரிப்பதை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட நிர்வாகி எஸ்.பரமசிவம் பேசுகையில், 56ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை கொள்மு தல் செய்யப்பட்டுள்ளது. 73ஆயிரம் ஹெக்டேர் தென்னை விவசாயம் செய்யப்பட்டுள்ள நிலை யில், கூடுதல் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை கொள்முதலை அதிகரிப் பதுடன், காய்ந்து போன தென்னைக்கு இழப்பீடு வழங்க வேண்டும். உடுமலை பகுதியில் 14 விவ சாயிகளுக்கு 140 நாட்களாக கொள்முதல் தொகைக்குரிய காசோலை வராமல் இருக்கி றது. அனைவருக்கும் காசோலை கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் 600 பால் கொள்முதல் மையங்களில் 50 மையங்கள் மூடப்பட்டு 550 மட்டுமே செயல் படுகிறது. 1 கோடியே 30 லட்சம் லிட்டர் பால் உற் பத்தி செய்யப்பட்டாலும் ஆவின் மூலம் 38 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டது. அது வும் தற்போது 22 லட்சம் லிட்டராக குறைந் துவிட்டது. மாநில அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காததால், தனியார் நிறுவனங்களும் கொள்முதல் விலையை அதிக ரிக்காமல் உள்ளன. எனவே பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும். மேலும் மாநில அரசு நுகர்வோருக்கு லிட்டருக்கு ரூ.3 பால் விலையைக் குறைத்ததால் ஆவின் கூட்டுறவு சங் கங்களுக்கு ரூ.250 கோடி அரசு தர வேண்டியு ள்ளது. அதை விரைந்து வழங்க வேண்டும். சரிவை நோக்கிச் செல்லும் ஆவினை காப்பாற்ற வேண்டும் என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பாலதண்டபாணி பேசு கையில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புன ரமைக்கும் வேலையை உடனே செய்து அந்த ஆலையை முழு செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கரும்பு பயிரைக் காப்பாற்ற உயிர்த்தண்ணீர் விட வேண்டும். வழக்கமாக செப்டம்பர் முதல் வாரத்தில் கோமாரி தடுப்பூசி போடுவார்கள்.
ஆனால் கால்நடைத்துறை இணை இயக்குநர் பணியிடம் நிரப்பப்படா மல் இருப்பதால் இந்த மாத கடைசி ஆகியும் இது வரை தடுப்பூசி போடப்படவில்லை. பாலப்பம் பட்டி சென்ட்ரல் வங்கியில் மாணவருக்கு கல்விக் கடன் தராமல் அலைக்கழிக்கின்றனர். உடனடி யாக கல்விக்கடன் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் காங்கேயம், வெள்ளகோ வில் பகுதி பிஏபி விவசாயிகள் சமச்சீர் பாச னத்தை வலியுறுத்தினர். இக்கோரிக்கைக்காக 40 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காங்கேயத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கின்றனர். உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். விவசாயிகள் சங்கம் ஈஸ்வரன் பேசுகையில், அதிகரித்துள்ள மான் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பேசுகை யில், கத்தாங்கண்ணி, குட்டப்பாளையம், காங் கேயம் உள்ளிட்ட பகுதிகளில் முறைகேடாக கல் குவாரிகள் இயங்குவதை கட்டுப்படுத்தவும், வரைமுறையில்லாமல் நடைபெறும் கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும் நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தினார். திருப்பூர் மாவட்ட பதிவாளர், சார்பதிவாளர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதால் பத்திரப் பதிவுக்கு வரும் மக்கள் அவதிப்படு கின்றனர். எனவே உடனடியாக இந்த பணியிடங் களை நிரப்ப வேண்டும் என்று விவசாயி சி. பொன்னுசாமி வலியுறுத்தினார்.