districts

img

3 சதவீத உள்ஒதுக்கீடு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வரவேற்பு

திருப்பூர், ஆக.1- தமி்ழ்நாட்டில் அருந்ததியருக்கு வழங்கிய 3 சதவீத உள்ஒதுக்கீடு செல் லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று வரவேற்கும் வகையில் திருப்பூ ரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். கடந்த 2007ஆம் ஆண்டு அருந்ததிய ருக்கு உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அன்றைய மாநிலச்செயலா ளர் என்.வரதராஜன் தலைமையில் சென் னையில் அருந்ததியர் சமூகப் பொருளா தார உரிமை பேரணி நடத்தி முத லமைச்சர் கலைஞரிடம் மனு அளிக்கப் பட்டது. அதன்பின்பே நீதிபதி ஜனார்தனன் குழு அமைக்கப்பட்டு அருந்ததியர் உள்  ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வியா ழனன்று 7 நீதிபதிகள் அடங்கிய அமர் வில் 6 நீதிபதிகள் அருந்ததியருக்கு வழங்கிய 3 சதவீத உள்ஒதுக்கீடு செல் லும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த  தீர்ப்பை வரவேற்கும் வகையில் திருப்பூ ரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்டச் செயலாளர் சி.கே. கனகராஜ் தலைமையில் திருப்பூர் மாந கரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக் களுக்கு இனிப்பு வழங்கி கொண்டா டினர். இந்நிகழ்வில், மாவட்டத் துணைச்  செயலாளர் பா.ஞானசேகர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும்  பெருமாள், பூபதி, தமிழ்நாடு அனைத்து  வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் நா.சஞ்சீவ், ஆதித்த மிழர் பேரவை மாநகர செயலாளர் மு. கவிதா, நிர்வாகி தனலட்சுமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.