தலைமையாசிரியர் போக்சோவில் கைது
சேலம், ஆக.11- மேட்டூர் அருகே மாணவர்களை மசாஜ் செய்து விடச் சொல்லி, தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நிலை யில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்டார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கருங் கல்லூரில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 144 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரிய ராக ராஜா என்பவர் உள்ளார். இவர் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளை, தனது அறைக்கு அழைத்து கை, கால்களை பிடித்து விடுமாறும், மசாஜ் செய்து விடும்படியும் கூறி தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. மேலும், மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டப் பட்டது. இதுகுறித்து, மாணவிகள் தங்களது பெற் றோர்களிடம் கூறி உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், வியாழ னன்று பள்ளிக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த, வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம், வட்டாட்சியர் முத்துராஜா மற்றும் வட்டார கல்வி அலுவலர் சின்ன ராசு ஆகியோர், பள்ளிக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், சமாதானம் அடையாத பெற்றோர், மேட்டூர்-மைசூரு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் துணைக் காவல் கண்காணிப்பாளர் மரிய முத்து தலைமையில் போலீசார் குவிக்கப் பட்டனர். தொடர்ந்து பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தனர். இதனால், போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து, தலைமையாசிரியர் ராஜாவை மேட்டூர் மகளிர் காவல்நிலை யத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசார ணையில், பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியைகளிடமும் அவர் அத்துமீறலில் ஈடு பட்டது தெரிய வந்தது. இதன்பின், பாதிக்கப் பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து, தலைமை ஆசிரியர் ராஜாவை கைது செய்தனர்.
அரசு கல்லூரி முதல்வராக கோ.கண்ணன் பொறுப்பேற்பு
தருமபுரி, ஆக 11- தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் 51 ஆவது முதல்வராக முனைவர் கோ.கண்ணன் வெள்ளியன்று பொறுப்புப் பேற்றுக்கொண்டார். முனைவர் கோ. கண்ணன் 29 வருடம் தமிழ்த்துறையில் 25 ஆண்டு கள் பேராசிரியராகப் பணி யாற்றினார்.மேலும் தமிழ்த் துறை தலைவராக பணியாற் றினார். இவர் இதற்கு முன்பு குமாரபாளையம், கிருஷ்ண கிரி சிவகங்கை ஆகிய இடங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வராக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.
டாஸ்மாக் ஊழியர்கள் இடைநீக்கம்
தருமபுரி, ஆக.11- தருமபுரி மது விலக்கு போலீசார், அதியமான் கோட்டை கக்கன்ஜிபுரம் பகுதியை சேர்ந்த ரவி (39), வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் மதுபதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், டாஸ் மாக் மேலாளர் மகேஸ்வரி, அதியமான் கோட்டை டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, அந்த கடையில் இருந்து மொத்த மாக மதுபானங்களை விற் பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 மேற்பார்வையாளர், 5 விற்ப னையாளர் உள்பட 7 பேரை, இடைநீக்கம் செய்து டாஸ் மாக் மேலாளர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.
மின்சாரம் தாக்கி தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு
தருமபுரி, ஆக 11- தருமபுரி மாவட்டம், திண்டல் ஊராட்சி ஒடச்சகரை கிராமத்தில் மின் சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சிக்குபட்டது. ஒடச்சகரை கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்த வர் மாதம்மாள். இவர் தனது வீட்டருகே உள்ள மின் கம்பத்திலிருந்து நெல்லிக் காய் மரம் ஒன்றில் துணி காய வைக்க இரும்பு கம்பியினை கட்டி வைத்தி ருந்துள்ளார். தாழ்வாக தொங்கி கொண்டிருந்த கம்பியை இழுத்து கட்டு வதற்காக கம்பியை தொட்ட போது மின் சாரம் தாக்கி மாதம்மாள் துடி துடிக்கவே தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மாதம்மாளின் மகன் பெருமாள் தாயை காப்பாற்ற கட்டை ஒன்றினை எடுத்து கம்பி மீது அடித்திருக்கிறார். கம்பி அறுந்து பெருமாள் மீது விழுந்துள்ளது. அவர் மீதும் மின்சாரம் பாய்ந்திருக் கிறது. இதனை கண்ட உறவி்னர் சரோஜா பதறி போய் இருவரையும் தொடவே அவரையும் மின்சாரம் தாக் கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயரிழந்துள் ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காரிமங்கலம் போலீசார் மூன்று பேரின் உடல்களை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் உள்ளிட்ட மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.
காவிரி சரபங்கா திட்டத்தை குழாய் மூலம் செயல்படுத்துக
சேலம், ஆக.11- காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டுமென தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளிக்கப்பட்டது. காவிரி சரபங்கா நீரேற்று திட்டப் பணிகள் நடை பெற்று வருகிறது. இது சில பகுதிகளில் திறந்த கால்வாய் களாகவும், சில இடங்களில் நிலத்தினுள் குழாய் பதித்து செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேட்டூர் வட்டம், சூரப்பள்ளி கிராமம் பொய்யானூர் பகுதி மற்றும் ஆவடத்தூர் கிராமம் சவுரியூர் பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களிலும் மற்றும் வீட்டுமனையிலும் திறந்த கால்வாய் மூலம் அமலாக் கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் திறந்தவெளி கால்வாய்க்கு பதிலாக நிலத்தினுள் குழாய் மூலமாக அல்லது சாலை வழி யிலோ இத்திட்டத்தை அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோபோல், சேலம் மாவட்டம், பூலாம்பட்டி முதல் ஆடையூர் வரை உயர்மின் கோபுர அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மனு அளித்தனர். மேலும், சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டத் திற்குட்பட்ட பூலாம்பட்டி முதல் ஆடையூர் வரை 31 உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தற்போது மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. இதனால் பாதிப்புக்கு உள்ளான 243 விவசாயிகளின் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது விளைநிலத்திற்கான இழப்பீடு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இழப்பீடு மிக மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஒன்றிய அரசின் நில எடுப்பு சட்டத்தின் படி இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.ராமமூர்த்தி தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு ஆகியோர் மனு அளித்தனர்.
நில அளவையரை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர்
கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஆக. 11- கடலூர் மாவட்டத்தில் நீதிமன்ற வழக்கு தொடர்பான அளவை பணியின் போது அரசு சர்வேயரை பணி செய்ய விடாமல் தடுத்து, செருப்பால் அடித்த அதிமுக குற்ற வாளியை கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ் நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் மாவட்டத் தலைவர் கௌரி சங்கர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் த.சக்திவேல், மாவட்டச் செயலாளர் அ.விஜயராஜன், கோபி கோட்டத் தலைவர் ஆர்.முத்துராஜ் மற்றும் அரசு ஊழியர் சங்க மாநிலத் துணை பொதுச்செயலாளர் மு.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். நிறைவாக மாவட்ட துணைத்தலைவர் சேது மாதவன் நன்றி கூறினார்.
தருமபுரி
தருமபுரி இதோபோல், குறுவட்ட நில அளவரை தாக்கி குற்ற வாளியை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வெங்கட்டேசன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ரா.கல்பனா, மாநில துணைத்தலை வர் முருகேசன், மாவட்டச் செயலாளர் சி.பிரபு, மாவட்டப் பொருளாளர் மா.முருகன், மாவட்ட இணைச்செயலாளர் க.தவமணி, மாவட்ட துணைத்தலைவர் த.இராமமூர்த்தி, அரூர் கோட்டத் தலைவர் ரா.சக்திவேல், தருமபுரி கோட்டத் தலைவர் ஆ.சங்கீதா ஆகியோர் கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் வாழ்த்தி பேசினார்.
மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்காவிட்டால் பேருந்து சிறைபிடிப்பு போராட்டம்: சிபிஎம் எச்சரிக்கை
திருப்பூர், ஆக 11- திருப்பூர் வடக்கு ஒன்றியப் பகு திகளில் உள்ள பள்ளி மாணவர்க ளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக் காவிட்டால் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி பெருமாநல்லூர், வாவிபா ளையம், வெங்கமேடு ஆகிய பகு திகளில் அரசு பேருந்து சிறைப்பி டிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் அறிவித்துள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன் திருப்பூர் அரசு போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டலப் பொது மேலாளருக்கு வெள்ளியன்று அனுப்பியிருக்கும் கடித்தில் கூறி யிருப்பதாவது, திருப்பூர் கலை ஞர் பேருந்து நிலையத்தில் இருந்து பூலுவபட்டி, நெருப்பெ ரிச்சல் வழியாக வாவிபாளையம் அரசு குடியிருப்பு வரை வழித்தடம் எண் 55 பேருந்து சென்று வருகி றது. சமத்துவபுரம், வாவிபாளை யம், சேடர்பாளையம், குருவாயூ ரப்பன் நகர், நெருப்பெரிச்சல், தோட்டத்துப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கணக்கம்பாளையம், பெருமா நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக ளுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் தினமும் தனியார் வாக னம் மூலமும், இருசக்கர வாக னத்திலும், கால்நடையாகவும் பள் ளிக்கு சென்று வருகின்றனர். இத னால் மாணவ, மாணவிகளின் பய ணப் பாதுகாப்பு குறைகிறது. மேலும் உடல் உபாதைகளுக்கும், மிகுந்த மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். எனவே வாவிபா ளையம், கணக்கம்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய அரசு பள்ளிகளையும், குமரன் காலனி திருக்குமரன் அடுக்குமாடி குடியி ருப்பு, மீனாட்சி நகர், பெருமாநல் லூர் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் விதத்தில் கூடுதல் பேருந்து வசதிகள் செய்து தர வேண்டும். அதேபோல் திருப்பூர் கலை ஞர் பேருந்து நிலையத்தில் இருந்து குமார்நகர், அங்கேரிபா ளையம், செட்டிபாளையம் வரை எண் 6, 6ஏ, 6பி ஆகிய பேருந்துகள் ஏற்கனவே வந்து சென்றன. தற்போது இப்பகுதிகளுக்கு இரண்டு பேருந்துகள் மட் டுமே வந்து செல்கின்றன. இத னால் வெங்கமேடு அரசு மேல் நிலைப்பள்ளி, கொங்கு மெட்ரிக் பள்ளி, ஏவிபி மெட்ரிக் பள்ளி மாண வர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே இப்பகு திக்கு ஏற்கனவே வந்து சென்ற அனைத்து பேருந்துகளையும் இயக்கிட வேண்டும். திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் இருந்து பெருமாநல்லூர் வழி யாக குன்னத்தூர், நம்பியூர், மலையப்பாளையம், ஆதியூர், செங்கப்பள்ளி ஆகிய வழித்தடங் களில் சென்று வந்த பேருந்துகள் பெருமாநல்லூர் வரை மட்டுமே சென்று திரும்புகின்றன. எனவே மேற்படி அனைத்து பகுதிகளுக் கும் ஏற்கனவே சென்று வந்த பேருந்துகளை முழுமையாக இயக்கிட வேண்டும். இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 22ஆம் தேதி காலை 8 மணிக்கு வெங்கமேடு, வாவிபாளையம், பெருமாநல்லூர் ஆகிய பகுதிக ளில் அரசுப் பேருந்துகளை சிறைப் பிடித்துப் போராட்டம் நடத்தப்ப டும் என்று ஆர்.காளியப்பன் தெரி வித்துள்ளார்.
வெளிமாநில தொழிலாளி பலி
வெளிமாநில தொழிலாளி பலி அவிநாசி, ஆக.11 - அவிநாசி அருகே இரும்பு உருக்கு ஆலையில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் வெளிமாநில தொழிலாளி உயிரிழந் தார். அவிநாசி அருகே கானூரில் இரும்பு உருக்காலை செயல் பட்டு வருகிறது. இதில் வெளி மாநில தொழிலாளிகள் உள்பட 300 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலை யில், வெள்ளியன்று வழக்கம் போல நிறுவனம் இயங்கத் தொடங்கியது. திடீரென நிறுவனத்திற்குள் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ராம்விலாஸ் மகன் ராஜேஷ் (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந் தனர். சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று ரேசன் சிறப்பு குறைதீர் முகாம்
திருப்பூர், ஆக. 11 – திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் சனி யன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. அவிநாசி மேற்கு, தாராபுரம் சின்னப்புத்தூர், காங்கே யம் வீரசோழபுரம், மடத்துக்குளம் பாப்பான்குளம், பல்லடம் தொட்டம்பட்டி, திருப்பூர் வடக்கு செட்டிபாளையம், திருப்பூர் தெற்கு ஆண்டிபாளையம், உடுமலை எலையமுத்தூர், ஊத் துக்குளி செங்கப்பள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களில் இம்முகாம் நடைபெறும். அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர் கள் பங்கேற்பர். எனவே குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கை மனுக்கள் அளித்து மக்கள் உரிய தீர்வு பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள் ளார்.
ராகுல்காந்தி இன்று உதகை வருகை
உதகை, ஆக.11- காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி சனியன்று (இன்று) உதகை வருகிறார். இங்கு பழங்குடி யின மக்களை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., தனது சொந்த தொகுதியான வயநாட்டிற்கு செல்ல உள்ளார். அவ்வாறு செல்லும் வழியில் ராகுல் காந்தி நீல கிரிக்கு வருகிறார். இதற்காக தில்லியிலிருந்து விமானம் மூலம் கிளம்பும் ராகுல் காந்தி, சனியன்று (இன்று) கோவை விமான நிலையம் வருகிறார். இதைத்தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ராகுல் காந்தி, உதகை அருகே எல்லநல்லி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வருகிறார். அங்கு முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்திக்க உள்ளார். அதேவிடுதியில் ஹோம் மேட் சாக்லேட் தயாரித்தல் குறித்து கேட்டு அறிந்து கொள்கி றார். மதிய உணவை முடித்த பின்பு, உதகை அருகே முத்தநாடு மந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று அவர்களோடு கலந்துரையாடுகிறார். இதன்பின் கூடலூர் வழி யாக வயநாடு செல்கிறார்.
நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்
கோவை, ஆக.11- நடிகர் சத்யராஜின் தாயார் நாதம்மாள் வெள்ளியன்று கோவையில் காலமானார். இவரது மறைவு தகவலறிந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்தியராஜ் கோவை விரைந்தார். நடிகர் சத்யராஜ் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவ ரது தாயார் நாதம்மாள் (94) கோவை பந்தயசாலையில் பகுதி யில் வசித்து வந்தார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மக னும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, அதே பகுதியில் உள்ள கேஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனி டையே வெள்ளியன்று மாலை 4 மணி அளவில் காலமானார். தனது தாயார் காலமான தகவலறிந்து, சத்யராஜ் ஹைத ராபாத் படப்பிடிப்பில் இருந்து கோவை விரைந்துள்ளார். அதேபோல சத்யராஜின் தாயார் மரணத்திற்கு திரையுலகத்தி னர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், சனியன்று (இன்று) சத்யராஜின் தாயார் உடல் தகனம் செய்ய இருப்பதால் பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் கோவை விரைந்துள்ளனர்.
20 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
உதகை, ஆக.11- சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க, நீல கிரி மாவட்டத்தில் 1999 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து தடை அமலில் இருந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்தது. தமிழ்நாடு முழுவதும் இந்த உத்தரவு 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட் டது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை தவிர்த்திடும் வகையில், உதகை நகர் நல அலுவலர் ஸ்ரீதர், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் ஆகியோர் வெள்ளி யன்று பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தனர். இதில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்றதாக 20 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இச்சோதனை தீவிரமாக நடக்கும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர்.
வாகனம் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு
உதகை, ஆக.11- உதகை அருகே நிலத்தை உழுது கொண் டிருந்தபோது, டில்லர் வாகனம் கவிழ்ந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த தூனேறி அருகில் உள்ள கோவில்மேடு கொதுமுடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (45). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற் றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் கொது முடி பகுதியில் குத்தகைக்கு இடம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார். இந்நிலை யில், வியாழனன்று டில்லர் வாகனம் மூலம் நிலத்தை உழுது தயார் செய்ய திட்டமிட் டுள்ளார். இதனைத்தொடர்ந்து, அதேபகுதி யைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது வாகனத் தைச் சுப்பிரமணி (25) என்பவர் இயக்கி, நிலத்தை உழும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது உழவுப் பணியை தங்கமணி பார் வையிட்டவாறு, நிலத்தின் ஓரமாக நின்றிருந் தார். இந்நிலையில், நிலத்தின் ஓரமாக டில்லர் வாகனம் வந்தபோது நிலை தடுமாறி, பள்ளத் தின் அருகில் நின்றிருந்த தங்கமணி மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் படுகாயமடைந்த தங்கமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். பாதிப்பு அதிகளவில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். இதில், மருத்து வமனைக்கு வரும் வழியிலேயே அவர் உயிரி ழந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக் காக அவரது உடல் உதகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து காவல் ஆய்வாளர் மணிக்குமார், உதவி ஆய் வாளர் சேகர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்பனை: 2 பேர் கைது
கோவை, ஆக.11- கோவை, ராமநாதபுரம் காவல் துறையினர் ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சௌரிபாளையம் சாலை, பாலசுப்பிரமணியம் நகரில் நின்றிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சாய்பாபா காலனி, அழகேசன் சாலையைச் சேர்ந்த ரஹூப் (24), சௌரிபாளை யத்தைச் சேர்ந்த கௌரிசங்கர் (23) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமு தல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
போலி ஆவணங்கள் மூலம் பண மோசடி வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை
கோவை, ஆக.11- வங்கியில் போலி ஆவணங்களை சமர்பித்து ரூ.13.27 கோடி பணத்தை ஏமற்றிய வழக்கில் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், கனரா வங்கி மேலாளர் உள்ளிட்டோ ருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கனரா வங்கி மும்பை போர்ட் கிளையில் ராஜ் பிசா என்ப வரின் கணக்கிலிருந்து அன்பு டிரேடர்ஸ், மாருதி ட்ரேடர்ஸ் என்ற போலியான கம்பெனி மூலமாக ஆவணங்களை சமர் பித்து 13.23 கோடி மோசடி செய்தனர். இவ்விவகாரத்தில் கடந்த 2005ல் வழக்கு பதிவு செய்த சிபிஐ, குமரேசன் (கனரா வங்கி மேலாளர்), அப்பு, இளங்கோவன், ரவிகுமார், கார்த்தி கேயன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்த னர். வழக்கு விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. வாத பிரதிவாதங்கள் நிறைவுற்ற நிலையில் இந்த வழக்கில் வெள்ளியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இளங்கோவன் இறந்துவிட்ட நிலை யில் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். கார்த்திகேய னுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் இருந்து விடுதலை செய்யப்பட்டார். வழக்கில் சம்பந்தப்பட்ட குமரேசன், அப்பு, ரவிக்குமார் ஆகியோருக்கு தலா 3 வருடம் சிறை தண்டனையும், 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபரா தம் விதித்து சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் தீர்ப்பு வழங்கினார்.
மாசிலா அருவிக்கு செல்ல தடை
நாமக்கல், ஆக.11- நாமக்கல்லில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான மாசிலா அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, கடல் மட் டத்தில் இருந்து 1300 அடி உயரத்தில் உள்ளது. இங்கு அரப் பளீஸ்வரர் கோவில், எட்டிகை அம்மன் கோவில், மாசி பெரி யண்ணன் சாமி கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, வாசலூர்பட்டி படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இந்நிலையில், அரியூர்நாடு பஞ்சாயத்தில் உள்ள மாசிலா அருவிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறை அதி காரிகள் தடை விதித்துள்ளனர். அருவிக்கு செல்லும் பாதை மற்றும் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முட்டை விலை உயர்வு
நாமக்கல், ஆக.11- நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள் ளன. தேசிய முட்டை ஒருங் கிணைப்புக்குழு (என்இசிசி) முட்டை விலையை அறி வித்து வருகிறது. கடந்த ஆக.6 ஆம் தேதியன்று ஒரு முட்டை விலை ரூ.4.35 ஆக இருந்த நிலையில், வியாழ னன்று நடைபெற்ற கூட்டத் தில் 10 பைசா உயர்த்தப் பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ.4.45 ஆக நிர்ணயிக்கப்பட் டுள்ளதாக, என்இசிசி நிர்வா கிகள் தெரிவித்துள்ளனர்.