சேலம், செப்.12- தாரமங்கலம் அருகே மிரட்டல் விடுத்த கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், தாரமங்கலம், கைலாசநாதர் கோவில் தெரு பகுதி யைச் சேர்ந்தவர் ராஜாமுத்தையா (55). இவர் தனது மனைவி கீதா (42) என்பவ ருடன் அதேபகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வியா பாரத்திற்காக கடந்த ஜூலை 30 ஆம் தேதியன்று தாரமங்கலத்தில் நிதி நிறு வனம் நடத்தி வரும் மாதவன் என்பவரி டம் ரூ.1 லட்சம் கடனாக கேட்டதாகவும், அதற்கு அவர் 15 நாட்களுக்கு ரூ.13 ஆயி ரத்து 500 வட்டியை எடுத்துக்கொண்டு மீதி ரூ. 6 ஆயிரத்து 500யை கொடுத்ததா கவும் தெரிகிறது. அதன்பிறகு ஒரு மாதம் கழித்து ராஜா முத்தையாவை அழைத்த மாதவன், மீண்டும் வட்டி பணம் ரூ.24 ஆயிரத்து 500 கேட்டதாக தெரிகிறது. அப்போது ராஜாமுத்தையா கையில் இருந்த ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்.9 ஆம் தேதியன்று இரவு 7 மணியளவில் மாதவன் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் ஜவுளிக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த துணிகளை அள் ளிக்கொண்டு, கடைக்கு பூட்டு போட்டு சென்றதாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த ராஜா முத்தையா மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர், அதிக வட்டி கேட்டு துன் புறுத்தி வரும் மாதவன் மீது நடவ டிக்கை எடுக்குமாறு காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித் தனர். மேலும், இதுகுறித்த தீக்கதிர் நாளி தழில் திங்களன்று விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து கந்துவட்டி கொடுமை செய்ததாக மாதவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.