districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வெறிநாய் கடித்து ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து ஆடுகள் பலி சேலம், ஜூலை 5- ஆத்தூர் அருகே வெறிநாய் கடித்து 4 ஆடுகள் உயி ரிழந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டை சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், புத னன்று இரவு, வழக்கம் போல் பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். இதன்பின் வியாழ னன்று அதிகாலை வந்து பார்த்தபோது, வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. மேலும் சில  ஆடுகள் காயமடைந்திருந்தன. அப்பகுதியில் தெரு நாய் கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித்திரிவதால், பொதுமக்கள் மிக வும் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே, வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டவிரோதமாக மண் கடத்தல்

சட்டவிரோதமாக மண் கடத்தல் தருமபுரி, ஜூலை 5- பாலக்கோடு அருகே சட்டவிரோதமாக ஏரியிலி ருந்து மண் கடத்த பயன்படுத்திய வாகனங்களை வட் டாட்சியர் பறிமுதல் செய்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் அதன்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் கிரவல் மண் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது குறித்து பாலக்கோடு வட்டாட்சியர் ஆறுமுகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் ரோந்து  ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கம்பநா யக்கனஅள்ளி ஏரியில் கிரவல் மண் திருட்டில் ஈடுபட்ட ஜேசிபி மற்றும் டிராக்டர் ஓட்டுநர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அதனை எடுத்து இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகாரளித்தார். இதுகுறித்து பாலக்கோடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

குடிநீர் இணைப்பு துண்டிப்பு சேலம், ஜூலை 5- ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகளை வருவாய் ஆய்வாளர் தலைமையில் அதிகாரிகள் வியாழனன்று முதல் துண்டித்து வரு கின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிப் பகுதிகளில் ஆத்தூர் – மேட்டூர் கூட்டுக்குடிநீர் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இதற்கான கட்டணத்தை 3 மாதங்க ளுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். ஆனால், சிலர் ஆண்டுக்கணக்கில் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதையடுத்து, கட்டணம் செலுத்தத் தவ றிய குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நகராட்சி ஆணை யர் அ.வ.சையத் முஸ்தபா கமால் உத்தரவிட்டார். அவ ரது உத்தரவின்பேரில், நகராட்சி வருவாய் ஆய்வாளர்  நாகராஜ் தலைமையிலான குழுவினர் வியாழனன்று முதல் குடிநீர் இணைப்புகளை துண்டித்து வருகின்ற னர்.

போக்குவரத்திற்கு இடையூறான விளம்பர தட்டிகள் அகற்றம்

போக்குவரத்திற்கு இடையூறான விளம்பர தட்டிகள் அகற்றம் ஈரோடு, ஜூலை 5- ஈரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், கால அவகாசம் முடிந்தும் அகற்றாமல் வைக்கப்பட்டிருந்த விளம் பர தட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆபத்தான நிலையிலும், போக்குவரத்திற்கு இடையூறாகவும், மாநக ராட்சியின் அனுமதி பெறாமலும் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு  செய்து அகற்றி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு அரசு  தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில், கால அவ காசம் முடிந்தும் அகற்றாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் வியாழனன்று அகற் றினர். மேலும் உரிய அனுமதியின்றியும், உரிய அளவை தாண்டியும் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களையும் ஊழியர்கள் அகற்றினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கள் கூறுகையில், ஈரோடு மாநகராட்சியின் வருவாயை அதி கரிக்கும் வகையில் மாநகர பகுதியில் விதிமுறைகளின் அடிப் படையில் விளம்பர பேனர்கள் வைக்க அனுமதிக்கப்பட் டுள்ளது. அனுமதிக்கான கால அவகாசம் முடிந்தால், மாநக ராட்சிக்கு மீண்டும் கட்டணம் செலுத்தி, விளம்பர பேனர் களை வைத்துக் கொள்ளலாம். அப்படி கட்டணம் செலுத்தாத நிறுவனங்களின் விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு வரு கிறது. மேலும், உரிய அனுமதியின்றியும் உரிய கால அளவை தாண்டியும் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களும் அகற்றப்பட்டுள்ளது, என்றனர்.

பணியின்போது விபத்தில் பலியான டாஸ்மாக் ஊழியருக்கு இழப்பீடு வழங்க சிஐடியு கோரிக்கை

திருப்பூர், ஜூலை 5 – தாராபுரத்தில் பணியின்போது விபத்தில் சிக்கி உயிரிழந்த டாஸ்மாக் ஊழியருக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட நிதி மற் றும் பணிக்கொடை உள்ளிட்ட இழப்பீடு தொகையை விரைந்து வழங்குமாறு திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம்  (சிஐடியு) கோரியுள்ளது. திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளரி டம் வெள்ளியன்று சிஐடியு டாஸ்மாக் ஊழியர்  சங்கச் செயலாளர் ஒய்.அன்பு உள்ளிட்டோர்  நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது: தாராபுரத்தில் டாஸ்மாக் (எண்: 3829) மதுபானக் கடையில் விற்பனையாள ராக பணியாற்றி வந்தவர் ஆர்.ரமேஷ் (47).  கடந்த ஜூன் 21 அன்று விற்பனைத் தொகையை வங்கியில் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது, போக் குவரத்து சிக்னலில் பின்னால் வந்த சரக்கு  வேன் மோதி படுகாயம் அடைந்து சுயநினை விழந்தார்.  உடனடியாக கோவை தனியார் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஜூலை 3  ஆம் தேதி புதனன்று அவர் காலமாகிவிட் டார். அவரது மனைவி, மூன்று பெண் குழந் தைகள் கொண்ட குடும்பம் தற்போது நிர்க்கதி யாக இருக்கிறது. பணியின்போது ரமேஷ் விபத்தில் சிக்கி  உயிரிழந்திருப்பதால் அவருக்கான மருத் துவ சிகிச்சை செலவு ரூ.6.52 லட்சத்தை அர சும், டாஸ்மாக் நிர்வாகமும் அவரது குடும் பத்திற்கு வழங்க வேண்டும். அத்துடன் அவ ருக்கு வர வேண்டிய பணிக்கொடை உள் ளிட்ட பணப்பலன்களையும், ஏழ்மையான அவரது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு  விரைவாக வழங்கிட ஆவன செய்ய வேண் டும் என்று சிஐடியு கேட்டுக் கொண்டுள்ளது.

ஏரியில் வீசப்பட்ட காலாவதியான மருந்துகள்

ஏரியில் வீசப்பட்ட காலாவதியான மருந்துகள் தருமபுரி, ஜூலை 5- பாப்பாரப்பட்டி பெரிய ஏரியில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் மூட்டை மூட்டையாக வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரிய ஏரி பகுதியில் பனைகுளம் செல்லும் சாலை செல் கிறது. இந்த சாலையில் பெரிய ஏரியின் புதருக்குள், 6 சாக்கு மூட்டைகள் கிடந்தது. அந்த சாக்கு முட்டைகளில் மருந்து பாட் டில்கள் இருந்தது. பல மருந்து பாட்டில்கள் சிதறி, குவியல் குவியலாக கிடந்தது. டானிக், மாத்திரைகள் என சிதறிக் கிடந் தன. அந்த மருந்துகள் அனைத்தும் காலாவதியானது என்பது தெரியவந்தது. பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மருந்து கடைகள் அல்லது மொத்த ஏஜென்சிகள் யாரா வது காலாவதி மருந்துகளை மூட்டைக்கட்டி எடுத்து வந்து, வீசி சென்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.  இதுகுறித்து தகவலறிந்த பாப்பாரப்பட்டி சுகாதார ஆய்வாளர் செந்தில் விசாரணை மேற்கொண்டு வருகி றார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாப்பாரப்பட்டி பெரிய ஏரியில் காலாவதியான மருந்துகள் அடங்கிய பாட்டில்க ளையும், மாத்திரைகளையும் வீசிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், மருந்து கடைகள் தற்றும் தனி யார் மருத்துவமனைகளில் விசாரித்து வருகிறோம். நீர்நிலைகள், பொது இடங்களில் காலாவதி மருந்துகளை கொட்டக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இந்நி லையில், மூட்டை மூட்டையாக காலாவதியான மருந்து பாட் டில்களை வீசிச் சென்றுள்ளவர்களை கண்டறிந்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார்.

பெண்ணிடம் ரூ.10லட்சம் மோசடி

பெண்ணிடம் ரூ.10லட்சம் மோசடி கோவை, ஜூலை 5- போக்கியத்திற்கு வீடு தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி நடைபெற்ற சம்பவம் கோவையில் நடைபெற் றுள்ளது. கோவை, சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த வர் வேணுகோபால். இவருடைய மனைவி குணசுந்தரி. இவரது கணவர் இறந்து விட்டதால் தன் மகனுடன் வசித்து வருகிறார். கோவை அருணாச்சலா காலனியைச் சேர்ந்த வர் சிதம்பரம் இவருடைய மகன் ராஜசேகர் புகைப்பட கலை ஞர். குணசுந்தரிக்கு ஆன்லைன் மூலம் ராஜசேகர் அறிமுக மானார். அவர் தனக்கு சரவணம்பட்டி சேரன் மாநகர் பகுதி யில் சொந்த வீடு இருப்பதாகவும், அந்த வீட்டை போக்கியத் திற்கு தருவதாகவும் குணசுந்தரியிடம் கூறியுள்ளார். அதை நம்பிய குணசுந்தரி ராஜசேகரிடம் கடந்த ஏப்ரல் மாதம் வீடு போக்கியதற்காக ரூ.10 லட்சம் கொடுத்து உள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ராஜசேகர் போக்கியத்திற்கு வீடு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதை அடுத்து விளாங்குறிச்சியில் ஒரு வீட்டை போக்கியத்திற்கு தரு வதாக கூறியுள்ளார். ஆனால் எந்த வீட்டையும் போக்கி யத்திற்கு கொடுக்கவில்லை. இது பற்றி குணசுந்தரி விசாரித்த போது ராஜசேகருக்கு அங்கு சொந்தமாக வீடு இல்லை என்பதும், அவர் பணத்தை வாங்கிவிட்டு மோசடி செய்ததும் தெரிய வந்தது. குணசுந்தரி கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல் துறையினர் ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது

கோவை, ஜூலை 5- திருப்பூர், தாராபுரத்தை சேர்ந்த தரணிதரன் என்பவரை கடத்தி அவரது சொத்து பத்திரம் கார் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டதாக முன்னாள் பாஜக நிர்வாகிகள் இருவர் உட்பட மூன்று பேரை கோவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் தரணிதரன். இவருக்கு சொந்தமாக தாராபுரம் - பழனி சாலை யில் 35 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை தாராபுரத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் நிர்வாகியான ஹரி பிர சாத் என்பவருக்கு இரண்டரை கோடி ரூபாய்க்கு விற்பதற்கு பேசி முடிக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து, ஹரி பிர சாத் நிலத்தை வாங்க 8.25 லட்சம் ரூபாய் பணத்தை தரணிதரனிடம் கொடுத்துள் ளார். மீதி பணத்தை கொடுக்கவில்லை. மீதிப் பணத்தை கொடுக்காமல் நிலத்தை தனது பெயருக்கு மாற்றி கொடுக்க தரணிதரனை மிரட்டியுள் ளார். பின்னர், தரணிதரனை தாராபுரத் தில் இருந்து கோவை அழைத்து வந்து ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட் டலில் வைத்து அவரிடம் இருந்து வீட்டு பத்திரம், கார், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட வற்றை பறித்துக் கொண்டதாக கூறப்ப டுகிறது. இது தொடர்பாக தரணிதரன் கோவை பந்தயசாலை காவல் நிலையத் தில் அளித்தார். இதன் பேரில் கூட்டு சதி உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் தாராபுரத்தை சேர்ந்த ஹரி பிரசாத், கோவையை சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் பாபு ஆகிய மூன்று பேரை வெள்ளியன்று போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய செந் தில் மற்றும் ஜான்சன் என்ற இரு வரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தாராபுரத்தை சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் கோவையை சேர்ந்த பாபு ஆகியோர் பாஜக முன்னாள் நிர்வாகிகள் என்ப தும், பிரவீன் குமார் அனுமன் சேனா அமைப்பின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருவதும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கல்குவாரியை அளவீடு செய்யாமல் திரும்பிய அதிகாரிகள்

கல்குவாரியை அளவீடு செய்யாமல் திரும்பிய அதிகாரிகள் கோபி, ஜூலை 5- கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயிகள் புகார் தெரிவித்த நிலையில், தனியார் கல்குவாரியை அதிகாரி கள் அளவீடு செய்யாமல் திரும்பியுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், கவுண்டம்பா ளையத்திலுள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கல்குவாரி செயல்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரி வித்தனர்.அதைத்தொடர்ந்து வியாழனன்று கோபி செட்டிபாளையம் கோட்டாட்சியர் கண்ணப்பன் தலைமை யில் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சத்திய மங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியை அளவீடு செய்ய சென்றனர். அப்போது கல்குவாரி முறை யான அனுமதி பெற்று நடைபெற்ற வருவதாகவும், கல்குவா ரியை அளவீடு செய்ய நீதிமன்றம் விதித்துள்ளதாகக்கூறி தடை உத்தரவை கல்குவாரி உரிமையாளர் தரப்பில் வழங்கப்பட்டது. தடை உத்தரவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் கல்குவாரியை அளவீடு செய்யாமல் திரும்பி சென்றனர்.