ஈரோடு, நவ.1- கல்குவாரி குட்டைக்கு யாரும் செல்ல முடியாதபடி தடுப்பு வேலி அமைக்காததால் மூன்று குழந்தை கள் உயிரிழந்தனர். இதற்கு காரணமா னவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணத்தை பெற்றுத்தர வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சந்தோஷினி சந்திரா தலைமை யில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்க ளன்று நடைபெற்றது. இதில் பொது மக்களிடமிருந்து மொத்தம் 262 மனுக் கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் உடனடி நடவடிக்கையெடுக்க உத்தரவிட்டார். முன்னதாக, சேலம் மாவட்டம், தேவண்ணகவுண்டனூரை சேர்ந்தவர் செல்லப்பன்(75). விபத்தில் இரு கால் களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று இரும்பு வளைவுடன் கூடிய ஊன்று கோல் உதவியுடன் நடமாடி வருகிறார். உறவினர்கள் அவரை கைவிட்டுவிட்டனர். நடக்க முடியாததால் 100 நாள் வேலையும் வழங்கப்படவில்லை. தவிர மாதந் தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 முதியோர் உதவித்தொகையும் நிறுத் தப்பட்டு விட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மொடக்குறிச்சி பகுதி யில் தங்கியிருந்து யாசகம் பெற்று வாழ்ந்து வரும் செல்லப்பன், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தார். அதில் வேலை செய்ய உடல் ஒத்து ழைக்கவில்லை. இதனால் உணவுகூட கிடைக்காமல் கஷ்டப்படுகிறேன். இதே நிலை நீடித்தால் மூன்று மாதத்துக்குள் தற்கொலை செய்து கொள்வேன்.
எனக்கு மூன்று சக்கர சைக்கிள், காது கேட்கும் கருவி, உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவரிடம் நேரில் விசாரணை நடத் திய ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் கோதைசெல்வி தனியார் காப்பகத்தில் சேர்க்க நடவ டிக்கையெடுத்தார். காப்பகத்தில் ஓய் வெடுக்கவும், மூன்று நேரத்துக்கும் முறையாக உணவு கிடைக்கவும், மருத்துவ உதவி வழங்கவும் ஏற் பாடுகள் செய்யப்படும், என்றார். இதேபோன்று, ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், தவுட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகி யோர் அளித்த மனு விவரம்: தவுட்டுப் பாளையம் அரசுப்பள்ளியில் படித்த எனது மகன் ராகவன், நண்பர்கள் நந்த கிஷோர், சிபினேஷ் ஆகியோர் கடந்த 10 ஆம் தேதி நாட்ராயன் நகர் பகுதியில் பயன்பாடு இல்லாத கல் குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந் தனர். பயன்பாடு இல்லாத இந்த கல் குவாரி குட்டைக்கு செல்ல முடியாத வாறு தடுப்பு வேலி அமைக்காததால் மூன்று குழந்தைகள் உயிரிழந் துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட கல்குவாரி குத்தகைதாரர் மீது நடவடிக்கை யெடுத்து இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வள்ளிபுரத்தான்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், சொந்த இடம் இல்லாமல் அரசு புறம்போக்கு, சாலை யோரங்களில் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எனவே, அனைவ ருக்கும் அப்பகுதியில் உள்ள அரசு நிலத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.