districts

img

3 குற்றவியல் சட்டங்களின் நகல்களை எரிக்கும் போராட்டம்

திருப்பூர், ஆக.3- திருப்பூரில் ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று, 3 குற்றவியல் சட்டங்க ளின் நகல்களை எரிக்கும் போராட்டம் நடைபெற உள்ளதென அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் அவி நாசி சாலையிலுள்ள சிஐடியு அலுவ லகத்தில் வெள்ளியன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்க ராஜ், பனியன் சங்க பொதுச்செ யலாளர் சம்பத், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் பி.ஆர்.நடரா ஜன், மாவட்டத் தலைவர் எம்.மோகன், பனியன் தொழிற்சங்க பொதுச்செயலாளர் என்.சேகர், எல்பிஎப் மாவட்ட துணைத்தலை வர் ரங்கசாமி, ஹோட்டல் சங்க செய லாளர் மகேஷ், ஐஎன்டியுசி மாவட் டச் செயலாளர் சிவசாமி, எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் முத்துசாமி, எம்எல்எப் மாவட்டச் செயலாளர் சம்பத், பனியன் சங்க செயலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொழிலா ளர் விரோத, மக்கள் விரோத 3 குற்ற வியல் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். நிதிநிலை அறிக்கை யில் தொழிற்சங்கங்கள் சார்பில் கொடுத்த கோரிக்கைகளை ஏற்கா ததை கண்டித்தும், விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு நியாய மான விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங் கங்கள் தொடர்ந்து போராடி வரு கின்றன. இந்நிலையில், நாடாளு மன்றத் தேர்தலில் மக்களால் தண் டிக்கப்பட்டு, கூட்டணி கட்சிகள் தய வுடன் ஆட்சியை பிடித்தாலும், தொடர்ந்து மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை ஒன்றிய அரசு கடைப்பிடித்து வருகிறது. நூறாண்டு காலம் போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்களால் கிடைக் கப்பெற்ற பலன்களை பறிக்கும் வகையில், கொண்டுவரப்பட் டுள்ள புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை அமலாக்குவதற்கான நடவடிக்கைகளை கைவிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ தொடங்கிய நாளான ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை தொடர் இயக்கம் நடத்துவது என முடிவெடுக்கப் பட்டது. அதனடிப்படையில், திருப்பூ ரில் ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று குமரன் சிலை முன்பு தேசிய கொடியை ஏற்றி வைத்து, ‘இந் திய அரசியல் சாசனத்தை பாதுகாப் போம் தேச விரோத 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்’ என்ற உறுதிமொழி வாசிப்பதோடு, 3 குற்றவியல் சட்ட நகல்களை எரிக்கும் போராட்டம் நடத்துவது என்றும்; ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று காலையிலிருந்து மாலை வரை திருப்பூரில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, மாலை 6 மணி அளவில் வெள்ளியங்காடு நால்ரோட்டில் கலை நிகழ்ச்சிக ளோடு பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.