districts

img

2500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வட்டம் கண்டெடுப்பு

தருமபுரி, டிச.24- ஏரியூர் அருகே 2500  ஆண்டுகளுக்கு முந்தைய  கல்வட்டம் கண்டெடுக்கப் பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம், அழகா கவுண்டனூர் பகுதியில்  பெருங்கற்கால சின்னங் கள் இருப்பது குறித்து  தகவலறிந்த பென்னாகரம் வரலாற்று மையத்தைச்  சேர்ந்த ஆசிரியர்கள் பெருமாள், கோவிந்த சாமி, தாமோதரன்,சந்தோஷ் குமார், கணே சன், திருப்பதி மற்றும் ராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர் ரவிச்சந்திரன் தமிழாசிரியர் சுப்பிரமணி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். ஏரி யூர் அருகே உள்ள அழகாகவுண்டனூர் பகுதி யில் ஆய்வு மேற்கொண்டதில், ஏழு சுத்து  கோட்டை என்ற இடத்தில் பெருங்கற்கால  ஈம சின்னங்கள் உள்ளது கண்டெடுக்கப்பட் டது. இதுகுறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறு கையில், பெருங்கற்காலம் நாகரீக வாழ்க்கை யின் தொடக்க காலமாகும். இந்த கால  மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும்  வழக்கத்தை கொண்டிருந்தனர். நினைவுச் சின்னங்களை அமைக்க பெரிய பெரிய கற் களை பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய நினைவுச் சின்னங்களுக்கு கல்வட்டம், கல் திட்டை, கற்பது கை போன்ற பெயர்கள் உள் ளன. இத்தகைய நினைவுச் சின்னங்கள் தரும புரி மாவட்டத்தில் அதிகளவில் காணப்படு கிறது. அழகாகவுண்டனூர் பகுதியில் 20க் கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈம சின்னங் கள் உள்ளன. இவை பெரும்பாலும் கல் படுக்கைகளுடன் கூடிய கல்வட்டங்கள் ஆகும். பெரும்பாலான கல்வட்டங்கள் சேத மாகியிருக்கின்றன. மேலும், இப்பகுதியில் ஏராளமான புதிய கற்காலத்தைச் சார்ந்த  கல் ஆயுதங்களும் கிடைக்க வாய்ப்புள்ளன. கல் ஆயுதங்களை கோவில்களில் வைத்து  மக்கள் தெய்வங்களாக வழிபட்டு வருகின்ற னர். தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள கல் வட்டங்கள் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தாகும். இவ்வாறான வரலாற்றுச் சின்னங் களை பாதுகாக்க தொல்லியல் துறை நட வடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.