திருப்பூர், ஜூன் 15- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழ கத்தில் காலியாக உள்ள 25 ஆயிரம் பணியி டங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஜூன் 24 அன்று 24 மணி நேர உண்ணாவிரதம் போராட்டம் அறி விக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கேயத்தில் அரசு பேருந்து பணிமனை முன்பாக வெள்ளியன்று விளக்க வாயிற் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு போக்குவரத்து காங்கேயம் பணிமனை முன்பு கிளைத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில், போக்குவரத்து கழகங்களின்வரவுக்கும், செலவுக்கும் உண் டான வித்தியாசத் தொகையினை அரசு நிதி ஒதுக்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை உடனடியாக துவங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அகவிலைப் படி உயர்வை வழங்கிட வேண்டும்,
காண்ட் ராக்ட் முறையில் பணியாளர் நியமனம் செய் வதை கைவிட வேண்டும், வேலைக்காக காத் திருக்கும் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க வேண்டும், பராமரிப்புக்கு தேவை யான உதிரி பாகங்களை வழங்கிட வேண்டும், அதிகாரிகளின் அடக்குமுறை நிறுத்த வேண் டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும். அரசு போக்குவரத்தில் காலி யாக உள்ள 25 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில கிளை துணைத் தலைவர் காளிராஜ், பொதுக்குழு ராஜசேகரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நாச்சிமுத்து, ஆகி யோர் உரையாற்றினர். மண்டல பொதுச் செயலாளர் செல்லத் துரை விளக்கிப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் திரு வேங்கடசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மண்டல நிர்வாகி வின்சென்ட் நன்றி கூறி உரை யாற்றினார்.
மேலும்,கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் 1 கிளை முன்பாக திருப்பூர் 1 மற்றும் 2 கிளை சார்பாக வாயில் கூட்டம் நடைபெற் றது கூட்டத்தை தலைமை ஏற்று மண்டலத் தின் துணைச் செயலாளர் தேவனேசன் துவக்கி வைத்தார் . மேலும், திருப்பூர் மண்ட லம் பொதுச் செயலாளர் பி.செல்லத்துரை, திருப்பூர் மண்டலப் பொருளாளர் என் .சுப்பிர மணியன், மண்டல துணை பொதுச் செயலா ளர் கே.கொங்கு ராஜ் கிளைச் செயலாளர் ஏ.ராஜேந்திரன் கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினார்கள் திருப்பூர் மாவட்ட சிஐடியூ துணைத் தலைவர் பாலன் வாழ்த்திப் பேசி னார்.