திருப்பூர், பிப். 29: தமிழ் நாடு முழுவதும் இன்று (வெள்ளிக் கிழமை) பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கு கிறது. மாவட்டத்தில் 24 ஆயிரத்து 906 மாணவ மாணவிகள், 232 தனித்தேர்வர்கள் என மொத்தம் 25 ஆயிரத்து 138 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளதாவது, தமிழ் நாடு அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப் படும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையி லும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையி லும், இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றி தழ் பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள் ளது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 92 தேர்வு மையங்களில் 219 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10,886 மாணவர்க ளும், 13,135 மாணவிகளும் மொத்தம் 24,021 பள்ளி மாணாக்கர்களும், தனித்தேர்வர்க ளாக 232 மாணவ, மாணவிகளும் மொத்தம் 24,253 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுத உள்ளனர். 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் 92 தேர்வு மையங்களில் 221 மேல் நிலைப்பள்ளிக ளில் பயிலும் 12,219 மாணவர்களும், 14,190 மாணவிகளும் என மொத்தம் 26,409 பள்ளி மாணாக்கர்களும், தனித்தேர்வர்களாக 111 மாணவ, மாணவியர்கள் 331 (அரியர்) மாணாக்கர்களும் ஆக மொத்தம் 26,851 மாணவ, மாணவிகளும் தேர்வெழுத உள்ள னர். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர் வினை 108 தேர்வு மையங்களில் 351 பள்ளி களில் பயிலும் 14,968 மாணவர்களும், 15,638 மாணவிகளும் ஆக மொத்தம் 30,606 பள்ளி மாணவ, மாணவியர்கள் தனித்தேர்வர்க ளாக 1,275 மாணவ மாணவியர்கள் மொத் தம் 31,881 தேர்வெழுத உள்ளனர். மேல் நிலை பொதுத் தேர்வு மையங்களில் பணி யாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்க ளாக 92 தலைமை ஆசிரியர்களும், 92 துறை அலுவலர்களும், அறைக் கண்கா ணிப்பாளர்களாகப் பணியாற்ற 1,570 ஆசி ரியர்களும் 201 பறக்கும் படையினர் களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இடைநிலை பொதுத் தேர்வு மையங்க ளில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப் பாளர்களாக 108 தலைமை ஆசிரியர்களும், 108 துறை அலுவலர்களும், அறைக் கண் காணிப்பாளர்களாகப் பணியாற்ற 1,780 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள் ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.