தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், கோவை மாவட்ட குழு நடத்தும் 247 வது இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி, கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தாமஸ் கிளப்பில் ஞாயிறன்றூ நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் வி.விஷ்ணு தலைமை வகித்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் அ.கரீம், மாவட்டத் தலைவர் தி.மணி, மாநிலக் குழு உறுப்பினர் மு.ஆனந்தன், தங்க முருகேசன், அ.சண்முகக்கணி உள்ளிட்ட திரளான எழுத்தாளர்கள் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.