districts

ஈரோடு வனக்கோட்டத்தில் 24 ஆயிரம் பறவைகள்

ஈரோடு, பிப்.5- ஈரோடு வனக்கோட்டத்தில் 24,000க் கும் மேற்பட்ட பறவைகள் உள்ளது என வும், 15 புதிய இனங்கள் அடையா ளம் காணப்பட்டுள்ளது எனவும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சத்தி யமங்கலம், ஆசனூர் ஆகிய 3 வனக் கோட்டங்களில் ஈரோடு, அந்தியூர், பர் கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை ஆகிய  5 வனச்சரகங்கள் உள்ளன. ஈரோடு  வனக்கோட்டத்தில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட  21 ஏரி, குளங்களில் இந்த ஆண்டுக் கான பறவைகளை கணெக்கெடுப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத் தப்பட்டது. இதில், வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர் கள் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள், நிபுணர்கள் என 140 பேர் பங்கேற்றனர். இந்த கணக்கெடுப்பில், கண்ணில் தெரியும் பறவைகள், அவற்றின் இனங் கள், சத்தம், அவை மொத்தமாக உள்ள  பகுதிகள் ஆகியவற்றை அடிப்படை யாக வைத்து கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. வெள்ளோடு பறவைகள் சர ணாலயம், கனகபுரம் ஏரி உள்ளிட்ட இடங்களில் நிரந்தரமாக காணப்படும் பாம்புதாரா, சிறிய, பெரிய நீர் காகங் கள் உள்ளிட்ட பறவைகள், பிற இடங்க ளில் இருந்து வந்து செல்லும் நெடுங் கால் உள்ளான், ஊசிவால் வாத்து, மஞ்சள் வாலாட்டி, மண்கொத்தி, மாங் குயில், சாம்பல் நாரைகள் போன்ற உள்ளூர் பறவைகளும், நீலமுக பூங்கு யில், உப்புக்கொத்தி போன்ற வலசை பறவைகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகளும் இக்கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டன. ஈரோடு வனக்கோட்டத்தில் ஈரோடு,  பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய 6  வட்டங்களில் 21 இடங்களில் பறவை கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ஈரோடு வன கோட்டத்தில் மட்டும்  மொத்தம் 24,000க்கும் மேற்பட்ட பறவை கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. 206 விதமான பறவை இனங்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில்  15 வகையான பறவை இனங்கள்  புதியவை என்பதும் தெரியவந்துள்ள தாக வனத்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.