தருமபுரி, ஜூன் 24- ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை உடனடியாக துவங்க வலியு றுத்தி, தமிகம் முழுவதும் அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை துவங்கி னர். தமிழ்நாடு அரசு, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென் சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 15 ஆவது ஊதிய பேச்சு வார்த்தையை துவங்க வேண்டும், சமூக நீதியை சீர்குலைக்கும் ஒப்பந்த தொழி லாளர் முறையை புகுத்த கூடாது, போக்குவரத்து துறையில் வரவுக் கும் செலவுக்குமான வித்தியாச தொகையை, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்கிட வேண்டும். அரசு விரைவு போக்குவரத்து பணிமனையில் பணி யாற்றும் போக்குவரத்து தொழிலாளர்க ளுக்கு வசூல் குறைவு எனக் காரணம் காட்டி பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்கக்கூடாது. டீசல், கிலோமீட்டர் காரணம் காட்டி தொழிலாளர்களை வஞ்சிக்க கூடாது. தடை செய்யப்பட்டப் பொருட் களை வாகனத்தில் ஏற்றி வரும் குற்றவா ளிகள் கைது செய்யும் பட்சத்தில் தொழி லாளர்களையும் தண்டிக்கும் போக்கு வரத்து நிர்வாகத்தின் அடாவடியை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிறுத்தப் பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவ ரத்து சங்கம் சிஐடியு தொழிற்சங்க தலை மையில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தி ருந்தது. இதனையேற்று தமிழ்நாடு முழு வதும் அரசு போக்குவரத்து தொழிலா ளர் சங்கம், இந்த உணர்வு மிக்க போராட் டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்ஒருபகுதியாக, சிஐடியு தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக ஊழி யர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பொது மேலாளர் அலுவலகம் முன்பு, 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் துவங் கியது. உண்ணாவிரதப் போராட்டத் துக்கு மண்டலத் தலைவர் சி.முரளி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா துவக்கிவைத்து பேசினார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார். இதில், மண்டல பொதுச்செயலாளர் எஸ்.சண்முகம், மண்டல செயல் தலைவர் சி.ரகுபதி, மண்டல துணைத்தலைவர் வி. மணோன்மணி உள்ளிட்டோர் உரை யாற்றினர். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் தீ. லெனின்மகேந்திரன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ. அருச்சுணன்,மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லை யன்,மருந்து விற்பனைகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்வம், ஆட்டோ சங்க மாவட்டப் பொருளாளர் ராஜகோபால் சிஐடியு நிர்வாகி பி. ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேசி னர்.
சேலம்
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி மற் றும் புதிய பேருந்து நிலையம், மெய்ய னூர் போக்குவரத்து பணிமனைகள் முன்பு நடைபெற்றது. அஸ்தம்பட்டி விரைவு போக்குவ ரத்து பணிமனை முன்பு சங்க தலை வர் லியாகத் தலித் தலைமையிலும், மெய்யனூரில் சங்கத்தின் மண்டல தலைவர் செம்பன் தலைமையிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற் றது. இதில் சிஐடியு சாலைப்போக்கு வரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே. தியாகராஜன், மாவட்டச் செய லாளர் ஏ.கோவிந்தன், தலைவர் டி.உத யகுமார், பொருளாளர் வி.இளங்கோ, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கட பதி, விரைவு போக்குவரத்து சங்க மாநில துணை பொதுச் செயலாளர் முரு கேசன், துணைத்தலைவர் செல்லப் பன், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க மாநில நிர்வாகிகள் மணிமுடி, சி.பி. வாசன், விரைவு போக்குவரத்து சங்க மண்டல துணைப் பொதுச்செயலாளர் செந்தில்குமார் குணசேகரன் உள்ளிட்டு திரளானோர் பங்கேற்றனர்.
நாமக்கல்
நாமக்கல் அரசு போக்குவரத்து பணி மனை முன்பு நடைபெற்ற போக்குவ ரத்து தொழிலாளர்களின் உண்ணா நிலை போராட்டத்திற்கு, மைய சங்கத் தின் உதவித்தலைவர் பி.வரதராஜன் தலைமை ஏற்றார். சிஐடியு நாமக்கல் மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி போராட்டத்தை துவக்கிவைத்தார். இதில், சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள், வி.செந்தில்குமார், எம்.பழனிசாமி, ஆர். மோகன்குமார், கே.கலைச்செல்வன், ஆர்.பெரியசாமி, ஏ.அண்ணாதுரை, சி. மாணிக்கம், வி.ரவி, ஆர்.கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர்.
கோவை
கோவை மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக கோவை தலை மையகம் மற்றும் அரசு விரைவு போக்கு வரத்துக் கழக பணிமனை முன்பும் பொள்ளாச்சி, உதகை ஆகிய இடங்களி லும் உண்ணாவிரத போராட்டம் துவங் கியது. கோவையில், அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு நடை பெற்ற உண்ணாவிரதத்திற்கு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் எம். வேளாங்கண்ணி ராஜ் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளா ளர் கோபால், மாநில சம்மேளனக் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். சிஐடியு கோவை மாவட்டச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்து உரையாற்றினார். சிஐடியு முன் னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறு முகம், வாலிபர் சங்க மாவட்டப் பொரு ளாளர் எம்.தினேஷ் ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். மேட்டுப்பாளையம் சாலை அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, சிஐடியு மாநிலத் துணைத்தலைவர் சி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் எம்.கன கராஜ் துவக்கிவைத்து உரையாற்றி னார். இதில், அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பி. சுரேந்திரன், அரசு விரைவு போக்கு வரத்து ஊழியர் சங்கம் கோவை பணி மனை செயலாளர் ஞானகுமார், துணைத்தலைவர் கே. செல்வராஜ் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 6 மையங்க ளில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேர உண்ணாவிரத போராட் டத்தை துவக்கினர். ஈரோடு ஈ1, ஈ3 பணி மனை முன் நடைபெற்ற போராட்டத் திற்கு செயலாளர் எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தார். பன்முகத் தலைவர் என்.முருகையா உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார். மண்டல பொதுச் செயலாளர் டி.ஜான்சன் கென்னடி சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்றோர் அமைப்பின் நிர் வாகிகள் ஆர்.அர்ஜுனன், கே.என்.துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசி னர். சத்தியில் கிளைத் தலைவர் என்.தேவ ராஜ் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் கே.மாரப்பன் சிறப்புரை யாற்றினார். சிபிஎம் கே.எம்.விஜய குமார், க.இரா.திருத்தணிகாசலம் மற் றும் வாசுதேவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நம்பியூரில் கிளைத் தலைவர் சி.சண்முகம் தலைமையில் உண்ணா விரதம் நடைபெற்றது. மண்டலப் பொரு ளாளர் சி.அய்யாசாமி சிறப்புரையாற் றினார். ஓய்வுபெறோர் அமைப்பின் நிர்வாகிகள் சி.வெள்ளியங்கிரி, டி.கே.வீராசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பெருந்துறையில் கிளைதலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். கண் ணியப்பன், நேசகுமார் மற்றும் ஓய்வு பெற்ற அமைப்பின் மண்டலத் தலைவர் ஜெகநாதன் ஆகியோர் உரையாற்றி னர். பவானியில் கிளைத் தலைவர் ஏகாம் பரம் தலைமை வகித்தார். சேகர் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோபியில் நடைபெற்ற போராட்டத் திற்கு, கிளைச் செயலாளர் கருப்புசாமி தலைமை வகித்தார். இதில், மண் டலத் தலைவர் வி.துரைராஜ், கவுந்த பாடி கிளை நிர்வாகிகள் அழகப்பன், பிவெங்கடாசலம், தலைவர் பிரபாக ரன், பொருளாளர் வெள்ளிங்கிரி, துணைச்செயலாளர் ரங்கசாமி, ஜாகர் அலி, ஓய்வு பெற்ற நல அமைப்பு எம்கே. நடராஜன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.