திருப்பூர், ஆக. 3 - சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை யின் 218 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாவட்ட ஆட் சியர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர். காங்கயம் அருகே சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த ஊரான மேலப்பாளையத் தில், அவரது 218 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வியாழனன்று அவரது உரு வப்படம் அலங்கரித்து வைக் கப்பட்டிருந்தது. தமிழக அரசு சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிரிஸ்துராஜ் மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கொ.ம.தே.க நிறுவனர் ஈஸ்வ ரன், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப் புகள் சார்பில் தீரன் சின்னமலை உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். திமுக சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்ட செய லாளர் இல.பத்மநாபன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.