திருப்பூரில் சூறாவளி காற்று வீசியதால் 2 ஆயிரம் வாழை மரங்கள் நாசம்
திருப்பூர், மே 20- திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் வியாழனன்று மாலை மழை கொட்டித் தீர்த்தது. சூறாவளி காற்றும் வீசியதால் 2 ஆயி ரம் வாழை மரங்கள் சேதமடைந்தன. அக்னி நட்சத்திரம் வெப்பம் அதிகமாக இருக்கும் நிலை யில் அண்மையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மழையின் போது பல்வேறு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இந் நிலையில் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு பகுதியில் 2 மி.மீ, குமார் நகர் பகுதியில் 1 மி.மீ, திருப்பூர் தெற்கு பகுதி யில் 13 மி.மீ, பல்லடம் ரோடு பகுதியில் 2 மி.மீ, ஊத்துக்குளியில் 12 மி.மீ, மடத்துக்குளத்தில் 5 மி.மீ, குண்டடத்தில் 6 மி.மீ, உப்பாறு அணைப் பகுதியில் 17 மி.மீ, உடுமலையில் 14.10 மீ.மீ, அமராவதி அணைப் பகுதியில் 16 மி.மீ, பல்லடத்தில் 3 மி.மீ என மொத்தம் 91.10 மி.மீட்டர் மழை பதிவானது. இதன் சராசரி 4.55 மி.மீட்டர் ஆகும். இதற்கிடையே திருப்பூரை சேர்ந்த கணேசன் (59) என்பவர் நல்லூர் மணியக்காரம்பாளையத்தில் 4 ஏக்கர் நிலத்தை குத்த கைக்கு எடுத்து அதில் வாழை பயிரிட்டிருந்தார். அனைத்து வாழைகளும் நன்கு விளைந்து குழை தள்ளிய நிலையில் இருந்தன. சூறாவளி காற்றின் காரணமாக 4 ஏக்கரில் பயிரிடப் பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் வாழை மரங்களும் முறிந்து சேத மாகின. இதன் மதிப்பு ரூ.14 லட்சம் என தெரிவித்த கணேசன், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தனக்கு ஏற்பட்ட நட் டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய வணிக வளாக கட்டிடம் பேரூராட்சிகளின் இயக்குநர் ஆய்வு
அவிநாசி, மே 20 – அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் வணிக வளாக கட்டிடத்தை சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் 20 ஆண்டு களுக்கு முன்பு அமைக்கப்பட்ட வணிக வளாக கட்டடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்புறப்படுத்தப்பட்டது. இதைய டுத்து, ரூ.6 கோடி மதிப்பில் தரைதளம், மேல் தளம், முதல் தளம், வாகன நிறுத்தும் வசதியுடன் வணிக வளாக கட்ட டம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி களின் இயக்குநர் கிரண் குராலா திடீர் ஆய்வு மேற்கொண் டார். அப்போது அவர், போதுமான பணியாளர்களை வைத்து, செப்டம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து வளம் மீட்டு பூங்காவை ஆய்வு செய்து, பிறகு அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:26.62/60அடி நீர்வரத்து:3கன அடி
வெளியேற்றம்:27கன அடி
அமராவதி அணை நீர்மட்டம்:62.37/90அடி.நீர்வரத்து:57கனஅடி
வெளியேற்றம்:13கன அடி
இலவச வீட்டுமனை வழங்க கோரிக்கை
அவிநாசி, மே 20 - தமிழக அரசு இலவச வீட்டுமனையுடன் வீடு அமைத்துத் தர வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் திருப்பூர் புறநகர் மாவட்ட மாநாடு பெருமாநல்லூரில் வெள்ளியன்று நடைபெற் றது. இதற்கு பொறுப்பாளர்கள் நதியா, ராஜேஸ்வரி, குருவம் மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பத்மாவதி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநில துணைச்செயலாளர் கண் ணகி நிறைவுரையாற்றினார். புதிய நிர்வாகிகளாக, மாவட்ட தலைவர் சித்ரா, துணைத்தலைவர் ராஜேஸ்வரி, செயலாளர் நதியா, துணைச்செயலாளர் பேபி, பொருளாளர் செல்வி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க வேண்டும். தமிழக அரசு இலவச வீட்டுமனையுடன் வீடு அமைத்துத்தர வேண்டும். நியாயவிலை கடைகளில் பொருள் கள் அனைத்தும் முறையாக விநியோகம் செய்ய வேண்டும். கிராமங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் தடை யின்றி இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முடிவில் பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் கவிதா மகேந்திரன் நன்றி கூறினார்.
தோழர் பி.சுந்தரய்யா நினைவு நாள் அனுசரிப்பு'
ஈரோடு, மே 20- தோழர் பி.சுந்தரய்யா நினைவுநாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் வெள்ளி யன்று அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராகவும், உழைப் ்பாளி மக்களின் ஒப்பற்ற தலைவராக விளங் கிய தோழர் பி.சுந்தரய்யா நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தோழர் பி.சுந்தரய்யா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி உறுதி ஏற்கப்பட்டது. இதில், சிபிஎம் மாவட்ட செய லாளர் ஆர்.ரகுராமன், மூத்த தோழர் கே.துரை ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சூறாவளி காற்றுக்கு சாய்ந்த மின்கம்பங்கள்
நாமக்கல், மே 20- ராசிபுரத்தில் வீசிய சூறா வளி காற்றுக்கு 2 மின் கம் பங்கள் சாய்ந்ததால், அப் பகுதியில் மின்சாரம் துண் டிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புதுப் பாளையம், பட்டணம், அத்த னூர் உள்ளிட்ட பகுதியில் அக்னி நட்சத்திர வெயிலா னது காலை முதல் வாட்டி வதைத்தது. இதனிடையே திடீரென மாலையில் கரு மேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. சூறாவளி காற் றுக்கு ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்த 20 அடி உயரம் கொண்ட போக்குவரத்து சிக்னல் சாலையில் நடுவே விழுந் தது. மேலும், ராசிபுரம் - புதுப் பாளையம் செல்லும் வழி யில் 2 மின்கம்பங்கள் சாலை யில் சாய்ந்ததால், போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக மின் கம்பம் மற்றும் போக்குவ ரத்து சிக்னல் கம்பம் இரண் டும் சாயும் நேரத்தில், யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அதேசம யம் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில், ராசிபுரம் சுற்றுவட் டார பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மாநகர குளிர்சாதன பேருந்துகளில் எம்.பி., எம்எல்ஏக்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்
சென்னை, மே 20- சென்னையில் இயக்கப்படும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர் சாதன பேருந்துகளில் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் எம்எல்.சி.க்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனாலும், இதில் பல்வேறு புகார்கள் வந்ததால் அதை சரிப்படுத் தும் வகையில் நடத்துநர்களுக்கு மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. அதன்படி, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் தனியாகவோ, மனைவி, கணவர் அல்லது உதவியாளருடன் சட்டப் பேரவை செயலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வரும் போது, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர் சாதன பேருந்து களில் கட்டண மில்லாமல் பயணிக்க ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும். எந்த புகாரும் வராமல் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.