districts

img

தருமபுரியில் ஜல்லிக்கட்டு போட்டி: 300 காளைகளுடன் களமாடிய 200 வீரர்கள்

தருமபுரி, ஏப்.1- தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி யில், 300 காளைகளுடன் 200 வீரர்கள் களமாடினர். தமிழர்களின்‌ பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, தரும புரி ஜல்லிகட்டு பேரவை சார்பில்‌  தரும புரியை அடுத்த சோகத்தூரில் நடை பெற்றது. இப்போட்டியை தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாள ரும்‌, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினரு மான தடங்கம்‌ பெ.சுப்பிரமணி கொடிய சைத்து துவக்கி வைத்தார்‌. இப் போட்டியில்‌ 300 காளைகள்‌ மற்றும்‌ 200 மாடுபிடி வீரர்கள்‌ கலந்து கொண்ட னர்.  இந்நிகழ்ச்சியில், சோகத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காளியம் மாள் மாது, ஜல்லிகட்டு பேரவை தலை வர் பி.ராஜசேகர், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் நகராட்சி தலைவர் வி.முரு கேசன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கூட்டுறவு சங்க தலைவர் துரைராஜ், கே.திருப்பதி ஆகியோர் செய்தனர். முன்னதாக, இப்போட்டியில் முதலி டம் பிடித்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித், இரண்டாம் இடம் பிடித்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன், மூன்றாம் இடம் பிடித்த  மதுரை அலங்கநல்லூரைச் சேர்ந்த  கார்த்தி, சங்கிலி முருகன் ஆகியோ ருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறந்த காளையாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த உதயக்குமார் என்பவரின் காளைக்கு பரிசு வழங்கப்பட்டது.