districts

img

சாலைப்பணிகளுக்காக ரூ.200 கோடி: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை, நவ.20- கடந்த அதிமுக ஆட்சியில் சாலைகள் போடாமல் விட்டதால், இப்போது சாலைபணிகளுக்காக பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். சாலைப் பணிக்காக  ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள் ளதென அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் புத னன்று தெரிவித்தார். கோவை மாவட்டம், ஆர்.எஸ். புரம் பகுதியில் சுமார் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப் படும் ஹாக்கி மைதானப் பணிகளை யும், அருகிலுள்ள பள்ளியில் நடை பெற்று வரும் கட்டிடப் பணிகளை யும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி புதனன்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், தமிழகத்தை விளையாட்டு தலைநகராக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகி யோர் செயல்பட்டு வருகிறார்கள். கோவையில், ஹாக்கி வீரர்கள் கோரிக் கையை ஏற்று ஹாக்கி மைதா னம் அமைக்கும் பணிகள் துவங்கி யுள்ளது. இந்த ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு  ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடை யும். மேலும், ரூ.936 கோடி மதிப் பீட்டில் பாதாள சாக்கடை பணிகள்  நடைபெறுகிறது. கோவையின் வளர்ச்சிக்கு முதல்வர் முக்கியத்து வம் கொடுத்து வருகின்றார். மாநக ராட்சி பகுதிக்கு விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண் டும் என்ற கோரிக்கைகள் இருப்ப தால்தான் விளையாட்டு மைதா னங்கள் அமைக்கப்பட்டு வருகின் றது. ஏற்கனவே முதல்வர் சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அறி வித்துள்ளார். விரைவில் அதற்கான  பணிகளும் துவங்கும். கடந்த அதி முக ஆட்சியில் சாலைகள் போடா மல் விட்டதால், இப்போது சாலைப் பணிகளுக்காக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். சாலைப் பணிக்காக ரூ.200 கோடி நிதி ஏற் கனவே ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இப்போது மேலும் ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.  மேலும், அவர் கூறுகையில், மின்சார வாரியத்தில் கொள்முதல் செய்யப்படக்கூடிய அனைத்து உப கரணங்களும் முறையாக ஆன் லைன் வாயிலாக டெண்டர் விடப் பட்டு வாங்கப்படுகிறது. அதற்கு என அதிகாரிகள் கொண்டக் குழு  உள்ளது. அவர்கள் விலை பட்டி யல் நிர்ணயித்த பின்புதான் எல் லாமே உத்தரவு வழங்கப்பட்டு பொருட்கள் வாங்கப்படுகிறது. மின் வாரியத்தில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றபட்டதோ அந்த நடைமுறைதான் இப்போதும்  பின்பற்றபடுகின்றது. அதில், எந்த விதமான தவறுகளும் நடைபெற வில்லை. இதில் வேறு யார் தலை யீடும் இல்லை. சிலர் குறுகிய மனப் பான்மையுடன் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர். யாரைப்பற்றி எழு தினால் பத்திரிகை விற்கும் என்ப தற்காக திட்டமிட்டு எழுதி இருக் கின்றனர், என்றார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி  ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.