பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி 2 பேர் கைது; கார் பறிமுதல் கோவை, மே 16- பீளமேடு அருகே தனி யாக நடைபயிற்சி மேற் கொண்டிருந்த பெண்ணிடம் நகைபறிக்க முயற்சித்த சம்ப வம் சமூக வலைத்தளங்க ளில் வைரலான நிலையில், இது சம்பந்தமான இருவர் கைது செய்யப்பட்டு கார் பறி முதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டம், பீளமேடு பகுதியைச் சேர்ந்த கௌசல்யா என்பவர், ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கௌசல்யா கழுத்தில் அணிந்திருந்த தங்கநகையை பறிக்க முயன்றனர். அப்போது அவர் நகையை பிடித்துக் கொண்டு, சத்தம் போட் டுள்ளார். உடனே, நகைப்பறிப்பை கைவிட்டு, காரில் வந்த வர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். காரில் வந்து நகையை பறித்த முயற்சித்தபோது, அவர் தடுமாறி காரின் சக்க ரத்தின் அருகே விழுந்த பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது காரில் வந்த இருவரையும் கைது செய்து உள்ளனர். மேலும் அவர்கள் கொள்ளை சம்பத்திற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த காவல் துறை யினர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அபி ஷேக், சக்திவேல் என்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் பெரிய அளவில் உதவி யதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றவாளி கள் இருவரையும் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.