சேலம்/தருமபுரி, செப்.10- சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் நீரில் மூழ்கி இரு பெண் மற்றும் இரு ஆண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி, செங் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமசாமி - புஷ்பா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் வசந்த குமார் 6 ஆம் வகுப்பும், இரண்டாவது மகன் ஸ்ரீதர் 3 ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந் நிலையில், சனியன்று பள்ளி விடுமுறை என்ப தால் அங்குள்ள செங்கல் சூளையில் அமைக் கப்பட்டிருந்த குட்டையில் இறங்கி குளித்துள் ளனர். அப்போது நிலைத்தடுமாறி ஸ்ரீதரன் தண்ணீரில் மூழ்கியதை கண்ட வசந்தகுமார், தம்பியை காப்பாற்ற முயன்றார். ஆனால், இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீய ணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீய ணைப்பு துறையினர் குட்டையில் மூழ்கிய இரண்டு மாணவர்களின் உடலையும் மீட்ட னர். இதுகுறித்த தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வீராணம் காவல் துறையினர் மற்றும் அஸ்தம்பட்டி காவல் உதவி ஆணையர், மாநகர துணை ஆணையர் ஆகியோர் விசா ரணை மேற்கொண்டனர்.
பெற்றோர் போராட்டம்
இதில், செங்கல் சூளை குட்டை பருத்திக் காடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவ ருக்கு சொந்தமானது என்றும், அனுமதி இல் லாமல் 30 அடி ஆழத்திற்கு குழி தோண்டி யுள்ளதும் தெரியவந்தது. மேலும், செங்கல் சூளை அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந் ததும் தெரியவந்தது. எனவே, செங்கல் சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி உயிரிழந்த மாணவர் களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடலை பிரேத பரிசோதனைக்கு தர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். அதன்பேரில், இரண்டு மாணவர் களின் உடல்களும் சேலம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. குட்டையில் மூழ்கி மாண வர்கள் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேற்றில் சிக்கி உயிரிழப்பு
இதேபோன்று, தருமபுரி மாவட்டம், நார்த் தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தம்மனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கனகசபாபதி – சரஸ் வதி என்ற தம்பதியின் மகள்கள் சஞ்சனாஸ்ரீ (7), மோனிகாஸ்ரீ (5) மற்றும் மகன் தமிழ் இனியன் (3). கனகசபாபதி, சரஸ்வதி இரு வரும் விவசாய பணிக்காக சென்றிருந்த போது, மூன்று குழந்தைகளான சஞ்சனாஸ்ரீ, மோனிகாஸ்ரீ மற்றும் தமிழ் இனியன் ஆகிய மூவரும் வீட்டிலிருந்து சிறிது தூரத்திலுள்ள தம்மனம்பட்டி ஏரிக்கு சென்றுள்ளனர், தம் பியை கரைக்கு மேலே அமரவைத்துவிட்டு, இரண்டு பெண் குழந்தைகளும் ஏரியில் மீன் பிடிப்பதற்காக இறங்கியுள்ளனர். இந்நிலை யில், சேற்றில் சிக்கி இரண்டு பெண் குழந்தை களும், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த னர். இதனிடையே வீட்டில் குழந்தைகள் இல் லாததைக்கண்ட பெற்றோர்கள் அக்கம் பக் கத்தில் விசாரித்து ஏரி பகுதிக்கு சென்றுள்ள னர். அப்போது தமிழ் இனியன் கரையில் உட் கார்ந்து அழுது கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டு விசாரித்தபோது, பெண் குழந்தை கள் இருவரும் ஏரிக்குள் இறங்கியது தெரிய வந்தது. இதையடுத்து பெற்றோர்கள் கதறி சத் தம் போடவே அருகிலிருந்தவர்கள் ஏரியில் குதித்து இரண்டு பெண் குழந்தைகளையும் உயிரிழந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அதியமான்கோட்டை போலீ சார், சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.