2 நாட்களில் 2 கோடி கிலோ கறிக்கோழி விற்பனை
நாமக்கல், நவ.2- தீபாவளியை முன்னிட்டு, கடந்த 2 நாட்க ளில் மட்டும் 2 கோடி கிலோ கறிக்கோழி விற் பனை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்லடம், கோவை, நாமக் கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிராய்லர் கறிக் கோழி உற்பத்தி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. கறிக்கோழிக்கான பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு, தினந் தோறும் விலை நிர்ணயம் செய்து அறிவித்து வருகிறது. கடந்த அக்.1 ஆம் தேதி ஒரு கிலோ கறிக்கோழி ரூ.107க்கு விற்பனை செய்யப் பட்ட நிலையில், கடந்த அக்.30 ஆம் தேதி ஒரு கிலோ உயிருடன் பண்ணை கொள் முதல் விலை ரூ.113 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக கறிக்கோழி விற்பனை நடைபெற்றது. இதில் ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.800க்கும், நாட்டுக்கோழி ரூ.750க்கும் விற்பனையான நிலையில், பிராய்லர் கோழிக்கறி ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்டது. இத னால் அசைவ பிரியர்கள் பலரும் கறிக் கோழியை விரும்பி வாங்கிச் சென்றனர். தீபா வளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2 கோடி கிலோ கறிக்கோழி தமிழ்நாடு முழுவதும் விற்பனையானது. மேலும், அதன் மூலம் 200 கோடி ரூபாய் மதிப்பில் கறிக்கோழி வியாபாரம் நடை பெற்றுள்ளதாக தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முறையான பராமரிப்பின்றி பாழகும் பூங்கா
உடுமலை, நவ.2- அமராவதி மற்றும் திருமூர்த்தி அணை களின் கரையில் அமைக்கப்பட்டிருக்கும் பூங்கா, உரிய பராமரிப்பு இல்லாததால் பாழாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 20 கிலோ மீட் டர் தொலைவில், மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் அமராவதி மற்றும் திரு மூர்த்தி அணைகள் உள்ளது. இந்த இரண்டு அணைகளின் கரைப்பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை பரா மரிப்பு எதுவும் செய்யததால் யாரும் பயன் படுத்த முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறு கையில், திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரே சுற்றுலாத் தலமாக இந்த அணைகள் உள்ளன. கடந்தாண்டு தமிழ்நாடு முதல்வர், அமராவதியிலுள்ள சைனிக் பள்ளியின் விழா விற்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இத னையடுத்து இந்த அணை பூங்காக்களை பரா மரிப்பு செய்ய பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு, வேலைகளும் துவங்கி யது. ஆனால், முதல்வர் வருகை ரத்து என்ற தகவல் வந்தவுடன் உடனடியாக அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இப்பூங்காக் களை பராமரிக்க வேண்டும். ஏற்கனவே ஒதுக் கப்பட்ட நிதி என்னவானது என்பதையும் மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக தெரி விக்க வேண்டும், என்றனர்.
நகை கொள்ளை
கோவை, நவ.2- கோவையில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளைய டிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வரு கின்றனர். கோவை மாவட்டம், வழியாம்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் பாலசுப்ர மணியன் (36). இவர் மனைவி யுடன் கடந்த 30 ஆம் தேதி யன்று வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பியுள் ளனர். அப்போது. வீட்டின் பின் புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டி ருந்த 100 சவரன் தங்க நகைக ளும், 75 கேரட் வைர நகைக ளும் கொள்ளையடிக்கப்பட் டது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரிக்க காவல் கண்காணிப்பாளர் 3 தனிப் படைகள் அமைத்து உத்தர விட்டுள்ளார்.
பயணிகள் ரயில் ரத்து
சேலம், நவ.2- பொறியியல் பராமரிப் புப் பணிகள் காரணமாக சேலம் – கரூர் இடையே பய ணிகள் ரயில் ரத்து செய்யப் பட்டுள்ளது. கரூர் - மோகனூர் இடை யிலான ரயில் பாதையில், பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சேலம் - மயிலாடுதுறை (எண்: 16812) ரயிலானது, நவ.2, 3, 9, 10, 16, 17, 23, 24 மற்றும் 30 ஆகிய 9 நாட்களும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) சேலம் - கரூர் இடையே இயக் கப்படாது. மாறாக, கரூர் - மயிலாடுதுறை வரை மட் டுமே இயக்கப்படும். இதே போல, மயிலாடுதுறை - சேலம் பயணிகள் விரைவு (எண்: 16811) ரயிலானது, நவ.2, 3, 9, 10, 16, 17, 23, 24 மற்றும் 30 ஆகிய 9 நாட்களும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில்) மயிலாடுதுறை - கரூர் வரை மட்டுமே இயக் கப்படும். இந்த ரயிலானது, கரூர் - சேலம் இடையே இயக் கப்படாதென, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இந்து மக்கள் கட்சி – இந்து முன்னணி மோதல்
கோவை, நவ.2- சுவரொட்டி ஓட்டுவதில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், சமரசம் செய்ய சென்றவரை தாக்கியதாக இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சூர்யா என்பவரை வெள்ளியன்று காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். செல்வபுரம் பகுதியில் இந்து முன்னணியினர் ஒட்டிய சுவரொட்டிகளின் மீது இந்து மக்கள் கட்சியினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சூர்யா, இந்து முன்னணியின ருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். பின்ன இருத ரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் என்ப வர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தார். அப் பொழுது சூர்யா, ஆட்டோ ஓட்டுநர் சதீஷை ஆபாசமாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனர் சதீஷ், செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், செல்வபுரம் காவல் துறையினர் மூன்று பிரிவுகளில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சூர்யா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். சூர்யா மீது ஏற்கனவே கோவை நகரில் பல்வேறு அடிதடி வழக்குகளும், மோதல் வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்து முன்னணி அமைப்பில் நிர்வாகியாக இருந்த சூர்யா, பின்னர் இந்து மக்கள் கட்சியில் சேர்ந்து மாவட்டச் செயலாளராக செயல் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தட்டுப்பாடின்றி உரம், பூச்சி மருந்து வழங்கிடுக
உடுமலை, நவ.2- உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதி விவசாயிகள் தரமான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் முறையான விலை யில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வடகிழக்கு பருவ மழையால், உடுமலையை சுற்றி யுள்ள அணைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு வாழ்வா தாரமாக இருக்கும் குளம் குட்டைகளில் நீர் நிரம்பி உள்ளது. ஆற்று பகுதி மற்றும் குளத்து பாசன விவசாயிகள் நெல் மற்றும் கரும்பு பயிர் செய்தும் மீதம் உள்ள நிலப்பரப்பில் மக்கா சோளம் மற்றும் சிறுதானியங்கள் விவசாயம் செய்து வரு கின்றனர். ஏற்கனவே கடந்த வருடம் பல தனியார் விதை கம்பெனிகளின் தரம் இல்லாத விதை மற்றும் உரங்களை பயன்படுத்திய விவசாயிகளுக்கு போதிய விளைச்சல் இல்லாமல் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. தற் போது விதை மற்றும் உரம் உள்ளிட்ட பொருள்களை தரமா கவும் நியாமாகவும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
மான் வேட்டை: வனத்துறை விசாரணை
மான் வேட்டை: வனத்துறை விசாரணை நாமக்கல், நவ.2- கொல்லிமலை அடிவாரப் பகுதிகளில் மான் வேட்டை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், வனத்துறையி னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரப் பகுதியி லும், நடுக்கோம்பை, துத்திக்குளம், காளப்பநாயக்கன்பட்டி பகுதியிலும் மான்கள் அதிகளவில் காணப்படுகின்றன. தீபா வளி பண்டிகைக்கு முன்பாக, துத்திக்குளம் பகுதியில் வேக மாக ஓடிவந்த மான் ஒன்று அங்குள்ள பாறையிலிருந்து தவறி விழுந்தது. இதில் அதன் இரண்டு கால்களும் உடைந்தன. இந்த மானை வனத்துறையினர் மீட்டு, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அந்த மான் உயிரிழந்தது. வேட்டையாட வந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடிவந்த நிலையில் மான் பாறையில் இருந்து குதித்து காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து, வனத்துறையினர் சம்பந்தப்பட்ட துத்திக்குளம், நடுக் கோம்பை, அடிவாரப் பகுதிகளில் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மலை ரயில் இன்ஜின் டீசலுக்கு மாற்றம்: சோதனை ஓட்டமும் வெற்றி
உதகை, நவ.2- சுற்றுச் சூழலை பாதிக்கும் பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் இன் ஜின் டீசலுக்கு மாற்றப்பட்டு, சோதனை ஓட்ட மும் வெற்றி பெற்றது. நூற்றாண்டுகளாக இயங்கும் நீலகிரி மலை ரயில் கடந்த, 2002 இல் பர்னஸ் ஆயிலை எரிபொருளாக கொண்டு இயங்கும் நீராவி இன்ஜின்களாக மாற்றப்பட்டு இயங்கியது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக, பர்னஸ் ஆயில் பயன்படுத்த மத்திய மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் தடை விதித்த பிறகு, குன்னுார் பணிமனையில், ‘சீனியர் டெக்னீசியன்’ மாணிக்கம் தலைமையில், இரு பர்னஸ் ஆயில் நீராவி இன்ஜின்கள் ஏற்கனவே டீச லுக்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து, மேலும் இரு பர்னஸ் ஆயில் இன்ஜின்கள் திருச்சி பொன்மலை பணிமனையில் மாற்றப் பட்டது. இது குறித்து மலை ரயில் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகையில், மேட்டுப்பாளை யத்தில் நிறுத்தப்பட்டுள்ள, ‘37384’ எண் கொண்ட, ‘எக்ஸ் கிளாஸ்’ நிலக்கரி நீராவி இன்ஜினை பராமரித்து இயக்கவும், நம் நாட் டில் தயாரித்த நிலக்கரி நீராவி இன்ஜினை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் ரயில்வே நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தி யுள்ளனர்.
அணைகள் நிலவரம் (சனிக்கிழமை)
சோலையார் அணை
நீர்மட்டம்:159/160அடி
நீர்வரத்து:320.93கனஅடி
நீர்திறப்பு:205.07கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:71.10/72 அடி
நீர்வரத்து:587கனஅடி
நீர்திறப்பு:907கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:118/120அடி
நீர்வரத்து:393கனஅடி
நீர்திறப்பு:434கனஅடி
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:53.15/60அடி
நீர்வரத்து:815கனஅடி
நீர்திறப்பு:865கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 86/90அடி
நீர்வரத்து:407கனஅடி
நீர்திறப்பு:479கனஅடி