திருப்பூர், ஜன.22 - 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு டி.ஏ., உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்கத்தினர் திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 190 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்க ளில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்க ளுக்கும் பஞ்சப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு போக்குவரத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்க ளுக்கு மட்டும் பஞ்சப்படி உயர்வு வழங்கப்பட வில்லை. பஞ்சப்படி உயர்வு வழங்கக் கோரி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி உள்ளனர். நீதி மன்றங்கள் மூலம் வழக்குகள் நடத்தி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்த பின்னரும், தமிழக அரசு பஞ்சப் படி உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்தி வரு கிறது. மேலும், போக்குவரத்து கழகத்தில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண் டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் இருந்த நடைமுறையை திமுக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நான்கு ஆண்டுகள் என முடிவு செய்தது. அதன்படி 1.9.2023 முதல் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை பேசி முடிக்கவில்லை. அர சின் இந்த தொழிலாளர் விரோதப்போக்கைக் கண்டித்து மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த சிஐடியு அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்கம் அறைகூவல் விடுத் திருந்தது. இதன்படி புதனன்று ஊதிய பேச்சுவார்த் தையை பேசி முடிக்கவும், உச்ச நீதிமன்ற தீர்ப் புப்படி ஓய்வு பெற்றவர்களுக்கு டி.ஏ. உயர்வு வழங்கவும், 2003 ஏப்.1க்கு பின்னர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் வலியுறுத்தி திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையம் முன் சிஐடியு தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்திற்கு மண்டலத் தலைவர் எம். கந்தசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் துவக்கி வைத்தார். சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டலப் பொதுச்செயலாளர் பி.செல்லத்துரை, பொருளாளர் என்.சுப்பி ரமணி, துணைப்பொதுச்செயலாளர் கே. கொங்குராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, துணைத்தலைவர்கள் கே. உண்ணிகிருஷ்ணன், பி.பாலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், தெற்கு மாநகரச் செயலா ளர் டி.ஜெயபால், ஓய்வு பெற்ற நல அமைப்பு நிர்வாகிகள் டி.துரைசாமி, கே.ரவிச்சந்திரன், எஸ்.அர்ஜூனன், என்.செங்குட்டுவன் உள் ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் மறியல் போராட் டத்தில் பங்கேற்றனர். இவர்களைத் தடுத்து நிறுத்திய காவலர்கள் 190 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.