districts

img

சரக்கு வாகனம் விபத்து:19 தொழிலாளர்கள் படுகாயம்

உடுமலை, ஆக. 31 – சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி  வந்த வாகனம் விபத்துக்குள்ளாகி 19  தொழிலாளர்கள் படுகாயம் அடைந் தனர்.  உடுமலை போடிபட்டி பகுதியில்  நடைபெறும் விவசாய வேலைகளுக் காக பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட் பட்ட பகுதியில் இருந்து சனியன்று 53  விவசாயத் தொழிலாளர்களை சரக்கு  வாகனத்தில் ஏற்றி வந்தனர். இந்த  வாகனம் உடுமலை - பெரியகுளம் வழி யில் அம்மாபட்டி பிரிவில் கட்டுப் பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இதில், 19 தொழிலாளர்கள் படு காயம் அடைந்து, உடுமலை அரசு மருத் துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள னர். இதில், தீவிர சிகிச்சைக்காக 6 தொழி லாளர்கள் கோவை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட விவசாயத் தொழிலாளர்களை பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி நேரில் சந்தித்து தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறி னார். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், உடு மலை அரசு மருந்துவமனைக்கு சென்று  விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆறு தல் கூறினர். சரக்கு வாகனத்தில் ஆட் களை ஏற்றி வந்தது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.