districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குழந்தை பெற்ற 17 வயது சிறுமி  போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு 

தருமபுரி. ஆக, 22- தருமபுரி அருகே திருமணமான ஒரு மாதத்தில் 17 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்தார். சிறுமியை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிய வாலிபர் மீது மகளிர் போலீசார் போக்சோவில் வழக்கு  பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி  பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். அப்போது பாப்பி ரெட்டிப்பட்டி பகுதியை  சேர்ந்த சரத்குமார்  (29) என்பவர் திருமணம் செய்ய சிறுமியை பெண் கேட்டனர். ஆனால் சிறு மிக்கு திருமண வயது ஆகவில்லை என்பதால் திருமணம் செய்து கொடுக்கவில்லை. இந்த நிலையில் சரத்குமார் அந்த சிறுமியிடம் செல்போனில் பேசி பழகி வந்தார். தொடர்ந்து சரத்குமார் சிறுமியிடம் நெருக்கமாகியுள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதையறிந்த சரத்குமார் அந்த சிறுமியை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.  இதனை அறியாத அவரது தாயார் தருமபுரி பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணமான ஒரு மாதத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் அந்த பெண்ணை திரு மணம் செய்தவர் அவரை அழைத்து வந்து அவரது தயார் வீட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டார். இது குறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் விசா ரணை நடத்தி பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த சரத்குமார் என்ப வர்  மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்களா? காத்திருக்கிறது ரூ. 37 கோடி பரிசு

உதகை, ஆக. 22– முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள வீரர்கள் இம்மாதம், 25 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். என, தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், இந்த ஆண்டிற் கான தனி நபர் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசு தொகை, 37 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளை பெற முடியும். இது மாநிலம் முழுவதிலிருந்து, 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள், 17 வயது முதல் 25 வயது வரை கல்லுாரி மாணவர்கள், 15 வயது முதல் 35 வயது வரை உள்ள பொது பிரிவினருக்கும் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விளை யாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட இம்மாதம், 25 ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, விளையாட்டு போட்டி களில் ஆர்வமுள்ளவர்கள் https://sdat.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். நேரில் தரப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய, வர்த்தகக் கண்காட்சி

சேலம், ஆக. 22- சேலம், பெரியார் பல்க லைக்கழகத்தில் விவசாய வர்த்தகக் கண்காட்சி ஆக 22, 23 ஆகிய தேதியில் நடை பெறுகிறது. சேலம் பெரியார் பல்கலை கழகம் மற்றும், மேலாண்மைதுறைகள், விதைகள், நாற்றுகள்,நடவுப்பொருள்கள்,பூச்சிக் கொல்லி, பாசன மேலாண் னமத்துறை சார்பில் விவசாய வர்த்தக கண்காட்சி நடைபெறுகிறது. பொருள் கள், காய்கறிகள், சிறுதா னியங்கள், கால்நடைப் பராமரிப்பு, கோழிவளர்ப்பு பால் உற்பத்தி, விவசாய பொருள்களைச் சந்தைப் படுத்துதல் குறித்து நூற்றுக் கும் மேற்பட்ட அரங்குகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

அவினாசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இணைப்புச் சாலைகளை ஒழுங்குபடுத்த சிபிஎம் வலியுறுத்தல்

கோவை, ஆக. 22- அவினாசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள் ளதால், இணைப்புச் சாலைகளை  ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை எளிதாக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட் டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளதாவது, அவி நாசி சாலை மேம்பாலப் பணியின் கார ணமாக, மாநகரத்தில் உள்ள பிர தான சாலைகளில் கடும் போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற் போது ஹோப் காலேஜ் ரயில்வே பாலம் அருகில் மேம்பாலத்திற்கு பில்லர் அமைக்கும் பணிகளின் கார ணமாக, அவினாசி சாலையில் செல் லும் பேருந்துகள் பீளமேடு பயனீ யர்மில் சாலை வழியாக பீளமேடு மேம்பாலத்திற்கு சென்று விளாங்கு றிச்சி சாலை வழியாக கொடிசியா சாலையில் சென்று அவிநாசி சாலையை அடைய வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்த ரவு காரணமாக பீளமேடு, விளாங்கு றிச்சி சாலை, தண்ணீர் பந்தல், எஸ்.பெண்டு அருகில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. பீளமேட்டிலிருந்து அவிநாசி சாலையை அடைய ஒரு மணி நேரம் வரை ஆகிறது.  எனவே, அவிநாசி சாலையிலி ருந்து பயணியர் சாலை குறுகிய சாலையாக இருக்கின்றது. இச்சா லையில் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் சாலையில் இருபுறமும் நிறுத்து வதை அனுமதிக்க கூடாது. மேலும் பயணியர் மில் சாலையில் இருந்து பீளமேடு விளாங்குறிச்சி சாலை வரை சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாய் உள்ளதை உடனே செப்பனிட வேண்டும். மேலும், பீளமேடு மேம்பாலத்திலி ருந்து இறங்கி விளாங்குறிச்சி சாலையில் விஎஸ்பி குடோனுக்கு செல்லும் கன ரக வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப் படுகிறது. இதை அனுமதிக்க கூடாது.  அவினாசி சாலையில் இருந்து E-2 பீளமேடு காவல் நிலையத்தின் கீழ்புறம் வழியாகச் செல்லும் குண் டும் குழியுமான மண்சாலையை தற் காலிக தார் சாலையாக மாற்றி இரு சக்கர வாகனம் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு வழிச் சாலையாக பயன்படுத்த அனுமதித் தால், வ உ சி நகர் சென்று ரயில்வே தரைப்பாலத்தின் வழியாக, செங் காளியப்பன் நகர் வழியாக விளாங் குறிச்சி சாலையை சென்றடைய முடியும். போக்குவரத்திற்கு நெரிச லுக்கு சிறிய தீர்வு ஏற்படும். மேலும், அவிநாசி, திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னையிலிருந்து வரும் பேருந்துகள், ஆம்னி பஸ் பேருந்துகள் அனைத்தும் தற்காலி கமாக நீலாம்பூரில் நிறுத்த வேண் டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது. 

நலத்திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் ஆக. 22 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்திற்குட்பட்ட பல் வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் நலத்திட்ட பணி களை மாவட்ட ஆட்சியர் தா கிறிஸ்துராஜ் வியாழ னன்று ஆய்வு மேற்கொண்டார். உங்களை தேடி உங்கள்  ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் புதனன்று காங்கே யம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து வியாழனன்று  காங்கேயம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதேபோல காங்கேயம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் படியாண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின்  காலை உணவு திட்டம் குறித்து மாணவர்களுடன் உணவருந்தி  ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய்  அலுவலர் க.கார்த்திகேயன், தாராபுரம் வருவாய் கோட்டாட் சியர் செந்தில் அரசன், காங்கேயம் ஊராட்சி ஒன்றியக் குழு  தலைவர் மகேஷ் குமார், காங்கேயம் நகராட்சி ஆணையர்  கனிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

முதலிபாளையம் உயர்நிலைப் பள்ளியை  மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக் கோரிக்கை

திருப்பூர், ஆக.22- முதலிபாளையம் உயர்நிலைப் பள் ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த   வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கிராம சபை கூட்டத்தில் மனு  அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் பொன்னாபுரம் கிளை செயலாளர் செல் வம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, முதலிபாளையம் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றி வெளியூர் செல்லும் மாணவ, மாணவிகளின் சிர மத்தை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிட்கோ பேருந்து நிறுத்தம்  மூன்று ரோடு சந்திக்கும் இடம். இங்கு பள்ளி  மாணவர்கள், பேருந்தில் வேலைக்கு செல்ப வர்கள் அதிகமானோர் கூடுவதால், இந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சிட்கோ பேருந்து நிறுத்தத்தில் வேகத் தடை அமைத்து தர வேண்டும். இப்பகுதி யில் பெரும்பாலான கடைகளில் தமிழ்நாடு  அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக்,  கூல்லிப் போன்ற போதை பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பப்  பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கழிப் பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மாணிக் கபுரம் புதூர் பள்ளியில் மாணவர்கள் பயன்ப டுத்தும் குடிநீர் தொட்டி பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதை  உடனடியாக சுத்தம் செய்து, சுகாதாரமான  குடிநீர் மாணவர்களுக்கு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். செம்மாண்டம் பாளையத்தில் பல மாதங்களாக கிடப்பில் கிடக்கும் வார சந்தை கட்டிட வேலைகளை முடித்து உடனடியாக பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது.

7 சதவீத கூலி உயர்வு அமலாக்கப்படும்: பவர் டேபிள் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

திருப்பூர், ஆக.22- 7 சதவீத கூலி உயர்வு அமலாக் கப்படும் என பனியன் உற்பத்தியாளர் கள் வியாழனன்று ஒப்புக் கொண்டதை யடுத்து, பவர் டேபிள் உரிமையாளர் சங் கத்தினர் வேலை நிறுத்த போராட் டத்தை திரும்ப பெற்றனர். திருப்பூர் பவர் டேபிள் உரிமையா ளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியா ளர்களிடம் ஏற்கனவே செய்து கொண்ட  கூலி உயர்வு ஒப்பந்தப்படி, இந்த ஆண் டுக்கு பவர் டேபிள் உரிமையாளர்க ளுக்கு 7 சதவீதம் கூலி உயர்வு பனியன்  உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும். ஆனால் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 7 சதவீத கூலி உயர்வு வழங்கவில்லை. இதையடுத்து, கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து டெலிவரி எடுப்பதையும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்தி விட்டு திங்கட்கிழமை முதல் திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத் தினர் வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வியாழனன்று பனியன் உற்பத்தியா ளர்கள் கூலி உயர்வு அமல்படுத்துவ தாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து,  வேலை நிறுத்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.  இதுகுறித்து, பவர் டேபிள் உரிமை யாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.நந்த கோபால் கூறுகையில், 2022 ஆம் ஆண்டு பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் பவர் டேபிள் உரிமையாளர்கள் இடையே நடைபெற்ற கூலி உயர்வு பேச்சு வார்த்தையில், 2022 ஆம் ஆண் டுக்கு 17 சதவீதம் கூலி உயர்வு, 2023 ஆம்  ஆண்டில் 7 சதவீத கூலி உயர்வு, 2024  ஆம் ஆண்டில் 7 சதவீத கூலி உயர்வு,  2025 ஆம் ஆண்டில் 7 சதவீத கூலி உயர்வு  வழங்க வேண்டும் என ஒப்பந்தம் இடப் பட்டிருந்தது. அதன்படி 6-6-2024  முதல் 7 சதவீத கூலி உயர்வு வழங்கப்பட் டிருக்க வேண்டும். ஆனால் கூலி உயர்வு  வழங்கப்படவில்லை. இதை அடுத்து மகாசபை கூட்டத்தில் ஆகஸ்ட் 19 ஆம்  தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், வியாழனன்று பெரும் பாலான நிறுவனங்கள் கூலி உயர்வு  அமல்படுத்துவதாக ஒப்புக்கொண்டு விட்டனர். இதையடுத்து வேலை நிறுத்த  போராட்டம் திரும்பப் பெறப்பட்டது என தெரிவித்தார்.

அன்னூர் பேருந்து நிலையத்தில் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அவதி

கோவை, ஆக. 22- அன்னூர் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் தெரு  நாய்களால் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வரும் பொது மக்கள் தெரு நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந் துள்ளது. கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் முக்கியமான பேருந்து  நிலையமாக அன்னூர் பேருந்து நிலையம் உள்ளது. இங்கி ருந்து, உதகை, மேட்டுப்பாளையம், திருப்பூர் மற்றும்  ஈரோடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்  அதிகளவில் இயக்கப்படுகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்து கின்றனர்.  இந்நிலையில், பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிவ தால், பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள்  உள்ளிட்ட பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். குறிப் பாக, இரவு நேரங்களில் அப்பகுதியில் தெருநாய்கள் கூட்ட மாக சுற்றித் திரிவதால், பயணிகள் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர். தெருநாய்களை பிடித்து, அவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று அன்னூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக ளில் குப்பை மேலாண்மை முறையாக செயல்படுத்தப்பட ததால் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது.  இதுகுறித்து பேருந்து பயணிகள் கூறியதாவது, அன் னூர் பேருந்து நிலையம் மிகவும் முக்கியமான ஒரு இடமாக  இருப்பதால், இங்கு தெருநாய் தொல்லை அதிகமாக இருப் பது மிகவும் வருத்தமாக உள்ளது. இதனால், பலர் பேருந்து நிலையத்திற்கு வரவே பயப்படுகின்றனர். பேரூ ராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில்வே கோட்ட மேலாளரிடம் சிஐடியுவினர் மனு

மேட்டுபாளையம், ஆக. 22- மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே  கோட்ட மேலாளர் வியாழனன்று ஆய்வில் ஈடுபட்டார். இவரி டம், மேட்டுபாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்துவ தற்கான கோரிக்கைகளை சிஐடியு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனுவாக அளித்தனர்.  மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே  கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா ஆய்வு  மேற்கொண் டார். அப்போது, மேட்டுப்பாளையம் தாலூக்கா சிஐடியு பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மனுவினை அளித்த னர். அதில், மேட்டுப்பாளையம்-கோவை இடையேயான பய ணிகள் ரயில் சேவையினை ஏழு முறை இயக்க வேண்டும், கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி தூத்துக்குடி சேவையினை தினசரி ரயில் சேவையாக மாற்ற  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அளித்தனர்.              இந்த ஆய்வின்போது, ரயில்வே துறை அலுவலர்கள், பொறியாளர்கள்  மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேலா ளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

சட்டவிரோதமாக  கல்குவாரியை இயக்கிய 3 பேர் கைது

கோபி, ஆக.22- கோபிசெட்டிபாளையம் அருகே  கல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலியானதில் சட்டவிரோதமாக  கல் குவாரியை இயக்கிய கணவன், மனைவி, மேலாளர் உட்பட மூன்று பேரை காவல் துறையினர் பேர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட் டிபாளையம் அருகே உள்ள புஞ்சை துறையம்பாளையத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் லோகநாதன் மனைவி ஈஸ்வரி என்பவரது பெய ரில் கல்குவாரி இயங்கி வந்துள் ளது. கல்குவாரியின் உரிமம் கடந்த 2015 ஆம் ஆண்டு முடிவுற்றது. இத னையடுத்து  இந்த கல்குவாரி சட்டவி ரோதமாக இயங்கி வந்தது.  இந்நிலையில், கடந்த இரண்டு  நாட்களுக்கு முன்பு கல்குவாரியில் நடைபெற்ற வெடி விபத்ததில் இரு வர் உடல் சிதறி  உயிரிழந்துள்ளனர். கல்குவாரி வெடிவிபத்தில் இரு வர் பலியான சம்பவம் குறித்து கிராம  நிர்வாக அலுவலர் பங்களாபுதூர் காவல்நிலையத்தில் புகார் மனு அத் த்தார். அப்புகாரின் அடிப்படையில் சம் பவ நடந்த  கல்குவாரியிலும் கல் குவாரி உரிமையாளர் லோகநாதன் அவரது மனைவி ஈஸ்வரி மற்றும் மேலாளர் செல்வம் ஆகியோரி டம் விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.  முன்னதாக, கல்குவாரியில் ஏற் பட்ட வெடி விபத்தில் பலியான அய லூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் குமார் குடும்பத்தினருக்கு தமிழக  முதல்வரின் நிவாரண நிதியிலி ருந்து ரூ.3இலட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வித்திருந்தார் அதற்க்கான  காசோ லையை கோபி கோட்டாச்சியர் கண் ணப்பன், வட்டாச்சியர் கார்த்தி ஆகி யோர் வியாழனன்று நேரில் சென்று  வழங்கினர்.