districts

img

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப்.29-  15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவங்க வலியு றுத்தி சிஐடியு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கம் சார்பில் கண்டன பிரச்சார  கூட்டம் திருப்பூர் மண்டல அலுவலகம் முன்பு வெள்ளியன்று நடைபெற்றது.  சிஐடியு சங்கத்தின் மண்டல தலை வர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற  இந்த கூட்டத்தில், போக்குவரத்துத் துறையில் போதுமான ஆட்களை வேலைக்கு எடுக்க வேண்டும், தொழி லாளர்களின் நியாயமான விடுப்பை மறுத்து, ஆப்சென்ட் போடுவதை நிறுத்த வேண்டும், பணிமனை ஊழியர் களின் வேலைப்பளுவை இரட்டிப் பாக்கக் கூடாது, 15-ஆவது ஊதிய ஒப் பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும், ஓய்வுபெறும் நாளில் பணப்பலன் வழங்கிட வேண் டும், 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் பணி யில் சேர்ந்த தொழிலாளிக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்கு வேண் டும், எல்லோருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து கண்டன பிரச் சார கூட்டம் நடைபெற்றது. மேலும்,  மதுரை கலைவாணர் கலைக்குழு வினரின் திறவுகோல் நாடகம் அரங் கேற்றப்பட்டது.   இதில், சங்கத்தின் மண்டலப் பொதுச்செயலாளர் பி.செல்லத்துரை, துணைப் பொதுச்செயலாளர்கள் எஸ். தேவனேசன், வி.விஸ்வநாதன், துணைச்செயலாளர் கே.கார்த்திகே யன், பொருளாளர் என்.சுப்பிரமணி உட் பட போக்குவரத்து ஊழியர்கள் திரளா னோர் பங்கேற்றனர்.