சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சனியன்று நடைபெற்ற 150 ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு, தீபச்சுடரினை மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி ஏற்றி வைத்தார். மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, முதன்மை கல்வி அலுவலர் மு.கபீர், அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.