districts

img

கொப்பரை தேங்காய் நிலுவை ரூ.150 கோடியை விடுவிக்க வலியுறுத்தல்

உடுமலை, ஆக. 5- கொப்பரை தேங்காய்களுக்கு மூன்று மாதங்களாக தமி ழக விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள் ளதை ஒன்றிய அரசின் நாபெட் நிறுவனம் விடுவிக்க வேண் டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஒன்றிய அரசின் நாபெட் (NAFED) நிறுவனம், தமிழ்நாட் டில் விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய்களை கொள் முதல் செய்துள்ளது. மூன்று மாதங்களாக பணம் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதன் நிலுவைத் தொகை ரூ.150 கோடி ஆகும். இதனை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு வார காலத்திற்குள் வழங்காவிட்டால் சென்னை நாபெட் அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து மேலும், விவசாயிகள் கூறுகையில், ரூ.20 விற்று வந்த தேங்காயின் விலை தற்போது ரூ.10 க்கு விற்று வருவதால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்ந்து மிகக் கடுமையான சிக்கலில் இருந்து வரு கிறது. மத்திய அரசு கொள்முதல் செய்யக்கூடிய கொப் பரை தேங்காய்களை பாரத் கோக்னெட் ஆயில் திட்டமாக அறிவித்து செயல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு கொப் பரை தேங்காய்க்கு ரூபாய் 150 மட்டுமே கட்டுப்படியான விலை ஆகும், ஆனால் அரசு கொடுப்பது வெறும் ரூ111. 60 பைசா மட்டுமே ஆகும். இந்நிலையில் மத்திய அரசின் நாபெட் நிறுவனம்  கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தமிழ்நாடு முழு வதும் 18,000 விவசாயிகளிடமிருந்து 150 கோடி ரூபாய்க்கு கொப்பரைகளை கொள்முதல் செய்துள்ளது.  ஆனால் இது வரை விவசாயிகளுக்கு பணத்தை தரவில்லை.  விவசாயிகளுக்கு உடனடியாக நிலுவை பணத்தை வழங்காவிட்டால் சென்னை, எழும்பூரில் உள்ள நாபெட் அலு வலகத்தின் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருபு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.