திருப்பூர், ஜூன் 8 – திருப்பூர் சபாபதிபுரம் சாலை காவலர் குடியிருப்பில் வெறிநாய் கடித்து சிறுவர் கள், பெரியவர்கள் என 15 பேர் காயம டைந்தனர். திருப்பூர் காவலர் அடுக்குமாடி குடியிருப் பில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் புதனன்று இரவு அங்கு வெறி நோய் தாக்குதலுக்கு உட்பட்ட தெரு நாய் ஒன்று வீதியில் செல்வோரை கடித்தது. இதில் மூன்று சிறுவர், சிறுமியர் உட்பட 15 பேர் காய மடைந்தனர். பெரியவர்கள் அரசு மருத்து கல் லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மூன்று சிறுவர்கள் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருவோரை திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்து வர்களிடம் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களைக் கேட்டறிந்தார். தெரு நாய் கடித்ததைத் தொடர்ந்து காவ லர் குடியிருப்பு மற்றும் சுற்றுப் பகுதியில், திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் மூன்று தெருநாய்களை பிடித்துச் சென்றனர். கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலும் தெரு நாய்கள் கடிப்பது, அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தன் னார்வ நிறுவனங்களை பணிக்கு அமர்த்த இருப்பதாக மேயர் தினேஷ்குமார் தெரி வித்திருந்தார். இந்த நிலையில், நகரின் மையப்பகுதி யில் காவலர் குடியிருப்பில் 15 பேரை நாய் கடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்கு மட்டுமின்றி நகரின் பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. பாதசாரிகள், வாகன ஓட்டிகள், சிறுவர் சிறுமியர் என பலருக்கும் இந்த நாய் களால் ஆபத்து தொடர்ந்து கொண்டி ருக்கிறது. எனவே அவசர உணர்வோடு நாய் களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக் கள் வலியுறுத்தி உள்ளனர்.