districts

img

திருப்பூரில் கே.எஸ்.கருப்பசாமி 14ஆம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிப்பு

திருப்பூர், அக்.7- திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய தோழர் கே. எஸ்.கருப்பசாமியின் 14ஆம் ஆண்டு நினைவு  நாள் பல்வேறு பகுதிகளில் கடைப்பிடிக்கப் பட்டது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாக சனிக்கிழமை நடைபெற்ற கே.எஸ். கே. நினைவு தின நிகழ்வுக்கு கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணே சன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜ கோபால், மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் ஆகியோர் கே.எஸ்.கே.யின் பணி களை நினைவு கூர்ந்து, இன்றைய மதவாத  சக்திகள் அச்சுறுத்தல் இருக்கும் சூழ்நிலை யில் அவர் செய்த பணிகளை பல மடங்கு அதி கமாக நாம் செய்ய வேண்டும் என்று வலியு றுத்தினர். இதைத் தொடர்ந்து நிகழ்வில் பங் கேற்றோர் கே.எஸ்.கே. உருவப்படத்துக்கு  மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். அதேபோல் வேலம்பாளையம் நகரத் திற்கு உட்பட்ட பகுதிகளிலும் தோழர் கே. எஸ்.கருப்பசாமி நினைவு தினம் உணர்வுப் பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அனுப் பர்பாளையம், முதலாம் மண்டல அலுவல கம் அருகில் நடைபெற்ற நிகழ்வுக்கு சிஐ டியு பாத்திரத் தொழிலாளர் சங்கச் செயலா ளர் கே.குப்புசாமி தலைமை ஏற்றார். இதில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், கட்சியின் மூத்த நிர்வாகி வி.பி.சுப்பிரமணியம், விசைத் தறித் தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலை வர் பி.முத்துசாமி ஆகியோர் மறைந்த  தோழர் கே.எஸ்.கேவின் மறையாத செயல் பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், நகரச் செயலாளர் ச.நந்தகோபால், பாத்திர சங்க முன்னாள் நிர்வாகி அ.கணேசன், நகரக் குழு உறுப்பினர்கள் அ.உமாநாத், பி.சின்னச்சாமி, ஆர்.சுகுமார், பி.பாபு, பி. ரகுபதி உள்பட திரளானோர் கலந்து கொண் டனர். இதேபோல், தண்ணீர்ப்பந்தல் காலனி,  வேலம்பாளையம் பகுதிகளிலும் தோழர்  கே.எஸ்.கருப்பசாமியின் உருவப்படத்துக்கு கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் தெற்கு மாநகரம் தென்னம்பா ளையம் கட்சிக் கிளை அலுவலகம் முன்பாக  நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சியில் தோழர் கே.எஸ்.கருப்பசாமி உருவப்படத் துக்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்தி னர். இதில் மாநகரச் செயலாளர் டி.ஜெய பால், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்த ரம், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.பாலன்,  பா.ஞானசேகர், தமுஎகச நிர்வாகிகள் எம்.துரைசாமி, வேலா.இளங்கோ, வாலிபர் சங்க  மாநகரப் பொருளாளர் ஜீவா மணிப்பிரகா சம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.  அதேபோல, அவிநாசி ஒன்றியம் திருமுரு கன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபா ளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை  சார்பில் பேருந்து நிறுத்தம் அருகில் கே. எஸ் கருப்பசாமி உருவப்படத்திற்கு மாலை அணி வித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி யம், கிளைச் செயலாளர்கள் காமராஜ், ராஜ்  உட்பட பலர் கலந்து கொண்டனர். தோழர் கே.எஸ்.கே. 14ஆம் ஆண்டு  நினைவு தினப் பொதுக்கூட்டம் பெரியார்  காலனியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடை பெறுகிறது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், கே.ரங்கராஜ், நகரச் செயலா ளர் ச.நந்தகோபால் உள்ளிட்டோர் உரையாற் றுகின்றனர்.