கோவை, டிச. 25- மகாகவி பாரதியாரின் 141 ஆவது பிறந்தநாள் சிறப்பு கருத்தரங்கம் கோவை மாவட்ட மக்கள் சிந்தனை மேடையின் சார்பில் நடைபெற்றது. இதில், திரை இயக்குநரும், உரை வீச்சாளருமான பாரதிகிருஷ்ணகுமார் பங்கேற்று உரை யாற்றினார். கோவை மாவட்ட மக்கள் சிந்தனை மேடையின் சார் பாக மகா கவி பாரதியார் 141 ஆவது பிறந்த நாள் 5ஆவது சிந்தனை அமர்வு, காந்திபுரம் கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. எச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ராஜாமணி இந்நிகழ் விற்கு தலைமை தாங்கினார். சி.கே.டி.யுவராஜன் சிந்தனை அமர்வை துவக்கி வைத்தார். இதில் இயக்குநரும், உரைவீச்சாளருமான பாரதி கிருஷ்ண குமார் பாரதியார் வாழ்க்கை வரலாறு குறித்து சிறப்புரையாற்றினார். இதில், திரளானோர் பங்கேற்றனர்.