districts

img

1300 மெட்ரிக் டன் உரம் கோவைக்கு வந்தது

கோவை, டிச.15-  கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட விவசாயி கள் பயன் பெறும் விதமாக கோவைக்கு சரக்கு இரயில் மூலம்  1,300 மெட்ரிக் டன்  உரம் வந்தடைந்தது. கோவை மாவட்டத்தில் சாகுபடிக்கு தேவையான உரங் கள் கூட்டுறவு மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலை யங்களில் இருப்பில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சமீப காலமாக உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட  நிலையில், விவசாயிகளின் பயன்பாட்டிற்கு உரங்கள் விநி யோகம் செய்ய கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலை யில் தூத்துக்குடியில் இருந்து, சரக்கு ரயில் மூலம் சுமார் 1,300 மெட்ரிக் டன் உரம் கோவை வந்தடைந்தது.  ஸ்பிக் மற்றும் க்ரீன் ஸ்டார் உர நிறுவனம் மூலமாக யூரியா,  பாரத் டி.ஏ.பி, பாரத் காம்ப்ளக்ஸ், பாரத் சூப்பர் பாஸ்பேட்  போன்ற உரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இரயில் நிலை யம் வந்த வேளாண் அதிகாரிகள் பெருமாள் சாமி, சக்தி வேல் மற்றும் சக்தி ஃபெர்டிலைசர் பாண்டியன் ஆகியோர்  மேற்பார்வையில் உரங்கள் கோவை, நீலகிரி, திருப்பூர்  மாவட்டத்துக்கு தேவையான அளவு பிரித்து அனுப்பப் பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய் யப்பட்ட யூரியா உரம், அனைத்து வட்டாரங்களில் உள்ள  கூட்டுறவு கடன் சங்க விற்பனை நிலையங்கள் மற்றும் தனி யார் உர விற்பனை நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.