districts

img

குன்னத்தூரில் வாலிபர் சங்க முகாமில் 13 பேர் ரத்த தானம்

திருப்பூர், செப்.9- குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய ரத்ததான முகாமில்  13 பேர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குன்னத்தூர் அரசு  ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்திய ரத்ததான முகாமில்  கலந்து கொண்ட ஊத்துக்குளி மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திகேயன் வாழ்த்தினார். குன்னத்தூர் பேரூ ராட்சித் தலைவர் என்.குமாரசாமி கலந்து கொண்டு இரத்த  தானம் செய்தவர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த வாலி பர் சங்கத்தினருக்கும் பாராட்டுக்களை  தெரிவித்தார். அவரு டன், குன்னத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர்  யமுனாதேவி ரத்ததானம்  செய்தவர்களுக்கு சான்றிதழ்களை  வழங்கினர். முகாமில் இரண்டு சகோதரிகள் உட்பட 16 பேர்  வந்திருந்தனர். இதில் 13 பேர் ரத்த தானம் செய்தனர். இந்த முகாமின் ஏற்பாடுகளை வாலிபர் சங்க தாலுகா செய லாளர் பாலமுரளி, தாலுகா பொருளாளர் விக்னேஷ் மற்றும்  வாலிபர் சங்க உறுப்பினர்கள் எ.கே. மூர்த்தி, பொன்னுசாமி,  நவின்குமார், யுகேஷ்வர்மன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜ்பாரத், வெற்றி வேல் மற்றும் முருகேசன் கலந்து கொண்டு உதவி  செய்த னர்.