மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு
மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு திருப்பூர், ஏப். 30- திருப்பூரில் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி யைத் தூவி நகையை பறித்துச் சென்ற இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காரணம்பேட்டை பகுதியில் திங்களன்று மதியம் தன் வீட்டிற்கு நடந்த சென்ற சரண்யா என்ற பெண்ணை பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர், அவரது வீட்டிற்கு அருகில் வந்தபோது, மிளகாய் பொடியை சரண்யா முகத்தில் தூவி, வீட்டின் உள்ளே கட்டிப்போட்டு அவரி டம் இருந்த மூன்று சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலை யில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகராஜ் மற்றும் தாமரைக் கண்ணன் ஆகி யோரை கைது செய்து நகையை மீட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்ட னர்.
கழிப்பிடங்கள் கட்டியதில் குளறுபடி
கழிப்பிடங்கள் கட்டியதில் குளறுபடி திருப்பூர், ஏப்.30 முறையாக டிரைனேஜ் வசதி இல்லாமலும், நீரோடை பகுதியில் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளதாலும், பல நாட்களாக மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆத்துப்பாளையம் வெங்கமேடு சாலை பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி கழிப்பிடம் கட்டப்பட்டது. அம்பேத்கர் நகர் பகுதியில் கழிப்பிடப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. திருவள்ளுவர் நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிப்பிடம் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மாமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது, கடந்த அதிமுக ஆட்சியில் அம்பேத்கர் நகரில் உள்ள நீரோடையின் மீது கழிப்பிடம் கட்டப்பட் டுள்ளதால், அந்த ஆட்சியிலேயே அதைத் திறக்க அதிகாரி கள் அனுமதி அளிக்கவில்லை. அதனால் கிடைப்பில் போடப்பட்டுள்ளது. வெங்கமேடு பகுதியிலும் கட்டப்பட் டுள்ள கழிப்பறையும் கடந்த ஆட்சியில் கட்டப்பட்டது தான். முறையான டிரைனேஜ் வசதி ஏற்படுத்தப்படாமல் கழிப்பி டம் கட்டப்பட்டுள்ளதால் அதை திறப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. ஜூன் 10ஆம் தேதிக்கு பிறகு மாநகராட்சி கமிஷ னர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து வந்து ஆய்வு மேற்கொண்டு டிரைனேஜ் வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளுவர் நகர் பகுதியில் திமுக அரசு அமைந்த உடன் கழிப்பிட பணிகள் தொடங்கப்பட்டது. இன்னும் போர் போடும் பணிகள் நடைபெற்று வருவதால், இன்னும் திறக்கப் படாமல் உள்ளது. பணிகள் முழுமையாக நிறைவடைந்த உடன் கழிப்பிடம் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று தெரிவித்தார்.
திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1200 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
திருப்பூர், ஏப். 30- உணவு பாதுகாப்புத் துறை ஆணை யர் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறி வுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, தங்கவேல், பாலமுருகன், ஸ்டாலின் பிரபு, சிரஞ்சீவி மற்றும் ரகுநாதன் ஆகி யோர் அடங்கிய குழுவினர் மூன்று குழுக்களாக பிரிந்து திடீர் சோதனை யில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட் சிக்கு உட்பட்ட கே.எஸ்.சி ஸ்கூல் ரோடு, தினசரி மார்க்கெட், அதியமான் வீதி மற்றும் வெள்ளியங்காடு ஆகிய இடங்க ளில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் செவ் வாய் அன்று காலை திடீர் ஆய்வு மேற் கொண்டனர். இந்த ஆய்வின்போது மூன்று மாம்பழ குடோன்களில் இருந்து சுமார் 1.2 டன் (1,200 கிலோ) அளவிலான மாம்பழங்கள் வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டவை பறிமுதல் செய்யப் பட்டன. இந்தப் பழங்கள் மாநக ராட்சி உரக்கிடங்கிற்கு உரம் தயாரிப் பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இது தொடர்பாக 3 மொத்த விற்பனை நிலை யங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட் டது. மேலும் 3 மாம்பழ உணவு மாதிரி கள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அரசு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக நியமன அலுவலர் கூறுகையில், பழங்களை இயற்கை யான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும். எத்திலின் ரசாய னத்தை பழங்களின் மேல் நேரடியாக படும்படியாக பழுக்க வைப்பதற்கு அனுமதி கிடையாது. சரியான முறை களை பயன்படுத்தி மட்டுமே பழங்க ளைகளை பழுக்க வைக்க வேண்டும். கால்சியம் கார்பைடு அசிட்டலின் போன்ற ரசாயனங்களை வைத்து பழங் களை செயற்கையான முறையில் பழுக்க வைக்கக் கூடாது. இவ்வாறு செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் சாப்பிட்டால் தோல் அலர்ஜி, வயிற்று வலி, வயிற் றுப் போக்கு, வாந்தி ஏற்படும். இதுகு றித்து, மாம்பழ விற்பனை உரிமையா ளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. மேலும், உணவு புகார் தொடர் பாக 94440 - 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையி னர் தெரிவித்தனர்.
செல்போன், பணம் பறிப்பு!
கோவை, ஏப்.30- கோவை மாவட்டம், கண பதி பாலன் நகரை சேர்ந்தவர் நந்தகுமார் (18). கோவை யில் உள்ள தனியார் கல்லூரி யில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், திங்க ளன்று தனது நண்பரை காண ரத்தினபுரி ரூட்ஸ் பாலத்தின் அருகில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 2 பேர் அவரிடம் பணம், செல்போன் தருமாறு மிரட்டியுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால், அவரிடம் இருந்த செல் போன் மற்றும் ஆயிரம் ரூபாயை பறித்து சென்ற னர். இதுகுறித்து நந்தகுமார் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக் குப் பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.
கிராம வேளாண் வளர்ச்சித்திட்டம் நல்லம்பள்ளியில் 6 கிராமங்கள் தேர்வு
கிராம வேளாண் வளர்ச்சித்திட்டம் நல்லம்பள்ளியில் 6 கிராமங்கள் தேர்வு தருமபுரி, ஏப்.30- நல்லம்பள்ளி வட்டாரத்தில் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் 6 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட் டுள்ளன. இதுகுறித்து நல்லம்பள்ளி வட்டார வேளாண் உதவி இயக் குநர் கே.சரோஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தரும புரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ஒவ் வொரு ஆண்டும் கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்ப டுகிறது. இக்கிராம ஊராட்சிகளில் வேளாண் துறை, தோட்டக் கலைத்துறை, வருவாய்த்துறை, கால்நடைத் துறை உள் ளிட்ட 13 துறைகள் இணைந்து வளர்ச்சிப்பணிகளை மேற் கொள்கின்றன. நிகழாண்டு நல்லம்பள்ளி வட்டாரத்தில் நல் லம்பள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி, நார்த்தமம்பட்டி, நாகர்கூ டல், பாலவாடி, தளவாய்அள்ளி ஆகிய ஆறு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற் காக ஒவ்வொரு கிராமத்திற்கும் பொறுப்பு அலுவலர்கள் நிய மனம் செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகள் அந்தந்த கிராமப் பொறுப்பு அலுவலர்களை அணுகி திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ - பாஸ் கட்டாயம்
சென்னை, ஏப்.30- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பொது வாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கு வதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெயிலில் இருந்து விடு பட்டு விடுமுறை தினத்தை கழிக்க சுற்றுலாத்த லங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் செல்லத் தொடங்கி யுள்ளனர். இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாக னங்களுக்கு மே 7ஆம் தேதி முதல் இ - பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என வன சுற்றுச்சூழல் பாது காப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெரி வித்துள்ளது. இந்த இ - பாஸ் நடைமுறையை மே 7 முதல் ஜூன் 30 வரை அமல்படுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. மேலும் இ பாஸ் முறையை அமல்ப டுத்த தேவையான தொழில்நுட்ப உதவி களை வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இ - பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும் என்றும் உள்ளூர் மக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இ - பாஸ் நடைமுறை குறித்து இந்திய அள வில் விரிவான விளம்பரங்கள் செய்ய வேண் டும் என்றும் நீதிபதிகள் அறிவிறுத்தியுள்ள னர். ஊட்டி பகுதிக்கு மட்டும் 20 ஆயிரம் வாக னங்கள் தினசரி வருவதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ள நிலையில் ஒரேநா ளில் இத்தனை வாகனங்கள் வந்தால் எப்படி என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஊட்டியில் நிலவும் குடிநீர் பிரச்ச னைக்கும் அரசு தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர்.
அணைகள் வறண்டதால் மின் உற்பத்தி நிறுத்தம்
உதகை, ஏப்.30- நீலகிரி மாவட்டத்தில் முக்குறுத்தி, பைக் காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயார், அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்தி மந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லூர் ஆகிய 13 அணைகள் உள் ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்ப டும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி மேற்கொள் ளப்படுகிறது. இதில், குந்தா வட்டத்தில், குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், அவ லாஞ்சி, காட்டுக் குப்பை என, 6 மின்நிலை யங்கள் உள்ளன. பைக்காரா மின் வட்டத் தில் முக்குறுத்தி, பைக்காரா, சிங்காரா, மாயார், மரவகண்டி, பைக்காரா இறுதி நிலை புனல் மின் நிலையம் என, 6 மின் நிலை யங்கள் என, மொத்தம் 12 மின்நிலையங்கள் மூலம் தினசரி 833.65 மெகாவாட் மின் உற் பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. இந்நி லையில் கடந்தாண்டில் பருவ மழை பொய்த் தது. ஆனால் நடப்பாண்டில் இது வரை மழை பெய்யவில்லை. அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் படிப்படியாக மின் உற்பத் திக்கு பயன்படுத்தப்பட்டதால் அணைகள் வறண்டு மைதானம் போல் காட்சியளிக்கி றது. இதனையடுத்து மின் உற்பத்திக்கு முக் கிய அணையாக கருதப்படும் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை அணைகள் மழையின்றி வறண்டு மைதா னம் போல் காட்சியளிக்கிறது. பிற அணைக ளிலும் தண்ணீர் அளவு சரிந்துள்ளது. இத னால், காட்டுகுப்பை, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், முக்குறுத்தி நுண் புனல் மின் நிலையம், ஆகிய மின்நிலை யங்களில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பிற மின்நிலையங்கள் மூலம், தினசரி, 150 முதல் 200 மெகாவாட் அளவுக்கு மின் உற் பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகை யில், “பெரும்பாலான அணைகள் வறண்ட தால், 7 மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத் தப்பட்டுள்ளது. பிற மின் நிலையங்கள் மூலம் ‘பீக்’ ஹவர்ஸ் மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம்’ என்றார்.
ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி
சேலம், ஏப்.30- சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்று லாத் தலமான ஏற்காட்டில் இருந்து தனியார் பேருந்து ஒன்று செவ்வா யன்று சேலம் நோக்கி வந்து கொண்டி ருந்தது. இந்த பேருந்து ஏற்காடு மலைப் பாதையில் 11 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்ற போது, ஓட் டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மலைப்பா தையின் பக்கவாட்டு தடுப்புச்சுவரை இடித்து பேருந்து கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. 11 ஆவது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த பேருந்து 10 ஆவது கொண்டை ஊசி வளைவில் வந்து நின் றது. பேருந்தில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவ்விபத்தில் 7 வயது சிறுவன் உட் பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற காவல் துறையி னர் மற்றும் தீயணைப்பு துறையினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தோடு பாதிக்கப்பட்டுள்ள போக்குவ ரத்தை சீர் செய்ய நடவடிக்கை மேற் கொண்டனர். இச்சம்பவம் குறித்து ஏற் காடு காவல் துறையினர் வழக்குப்ப திவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.