ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அயலூர் ஊராட்சிக்குட்பட்ட நரிகுட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, புதிய நியாயவிலை கடை திறப்பு நிகழ்ச்சி, கோபி தெற்கு ஒன்றியச் செயலாளர் சிறுவலூர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கலந்து கொண்டு நியாய விலை கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் பரமேஸ்வரன், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.